Showing posts with label ஜெனீவா. Show all posts
Showing posts with label ஜெனீவா. Show all posts

Wednesday, March 14, 2012

இந்தியா இனக்கொலையின் பங்காளி

சங்கரன்கோயில் இடைதேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பல்வேறு கிராமங்களில் ம.தி.மு.க வின் பொது செயலளார் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் இடையே ஹலோ எப் எம் வானொலிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிடில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் துடைத்து எறியப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Saturday, March 3, 2012

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியாவின் துரோகம் -வைகோ குற்றச்சாட்டு

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு, தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மார்ச் 1-ஆம் தேதி கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். தமிழினக் கொலை நடத்திய இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் நாடுகளால் தீர்மானம் வரக் கூடும் என்று கருதி அதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்திய அரசு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

எந்தவொரு தேசத்தையும் குறிப்பிட்டு தீர்மானம் கொண்டு வருவது மனித உரிமை ஆணையத்தின் செயல்பாட்டுக்கு - அணுகுமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இணக்கமான அணுகுமுறையைப் பலவீனப்படுத்தும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையின் இராஜ பக்சே அரசுக்கு முழுக்க உதவி செய்யும் நோக்கத்தில் இந்திய அரசு இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கின்றது.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கும் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளியாகும். இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடி பணமும் அள்ளிக் கொடுத்ததுடன் இந்தியாவின் முப்படைத் தளபதிகளை அனுப்பி இலங்கை அரசு நடத்திய யுத்தத்தை இயக்கியதும், நடத்தியதும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

Tuesday, February 21, 2012

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது!

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்த இயக்கமாக இந்திய அரசு அறிவித்து, அதனைத் தீர்ப்பாயமும் உறுதி செய்ததை எதிர்த்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 2010 டிசம்பர் 8-இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில், ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனு 2011 பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது, இந்த முயற்சியில் கிடைத்த முதல் வெற்றியாகும்.