Showing posts with label சிங்கள அரசு. Show all posts
Showing posts with label சிங்கள அரசு. Show all posts

Tuesday, March 20, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இழப்போம்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாபெரும் திருப்புமுனை ஆண்டாகும்.ஈழத்தமிழ் இளைஞர்களின் போர்க் குணத்தையும் புறநானூற்றுப் போர் மரபில் வந்த இளைஞர் கூட்டம் களச்சாவிற்கு அஞ்சாதவர்கள் என்பதையும் இன எதிரி களுக்கு உணர்த்திய ஆண்டு. 1983 ஜூலை 15 போர்க்களத்தில் சிங்களப்படை யால் சுற்றிவளைக்கப் பட்ட சார்லஸ் ஆண்டனி என்ற தளபதி,தான் எதிரி களால் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு உடன் நின்ற போராளிக்கு கட்டளையிட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் நினைவாகவே மாவீரர் பிரபாகரன் தனது முதல் மகனுக்குச் சார்லஸ் ஆண்டனி எனப் பெயரிட்டார்.

Monday, March 19, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே .

1983 கருப்பு ஜுலை : இந்திராவின் கவனத்தை ஈர்த்த வைகோ 

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் இரத்தம் தோய்ந்த “கறுப்பு ஜூலை” ஆகும். 1983 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே,
சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே, தமிழர்கள் மீது கட்ட விழ்த்து விட்டிருந்த வன்முறைகள் ஜூலை மாதம் கோர நர்த்தனம் ஆடின. ஜூலை 25 ஆம் நாள், சிங்கள இராணுவம்நடத்திய இனப்படுகொலையில் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர் பகுதிகளில் தீவைப்புகள்,கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இந்த கொடூரங்களின்
உச்சகட்டமாக, ஜூலை 27 ஆம் நாள், வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த விடுதலை இயக்கத் தலைவர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட போராளிகள் 50 பேர் கண்ட கோடாலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறையில் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தமிழீழத்தில் 1983, ஜூலையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளை அறிந்து தமிழ்நாடு கொந்தளித்தது. உலகம் முழுவதிலிருந்தும் வரும் பத்திரிகைகள் இலங்கை இனப்படுகொலை பற்றிய நடுங்க வைக்கும் செய்திகளை வெளியிட்டன.

Sunday, March 18, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 1


திரு.மு.செந்திலதிபன்  
கழக ஏடான சங்கொலி யில் வார வாரம் , நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின்குரல்! என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் .வைகோ அவர்களின் நாடாளுமன்ற பணிகள் குறித்து கட்டுரையாக , மதிமுக அரசியல் ஆய்வு மய்யாச் செயலாளர் திரு.மு.செந்திலதிபன் எளிதி வருவதை இணையதள நண்பர்களுக்க இங்கே பதிவு செய்கிறோம் , படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி :- சங்கொலி குழு , மற்றும் திரு.மு.செந்திலதிபன் அவர்களுக்கு .



Saturday, March 3, 2012

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியாவின் துரோகம் -வைகோ குற்றச்சாட்டு

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு, தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மார்ச் 1-ஆம் தேதி கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். தமிழினக் கொலை நடத்திய இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் நாடுகளால் தீர்மானம் வரக் கூடும் என்று கருதி அதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்திய அரசு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

எந்தவொரு தேசத்தையும் குறிப்பிட்டு தீர்மானம் கொண்டு வருவது மனித உரிமை ஆணையத்தின் செயல்பாட்டுக்கு - அணுகுமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இணக்கமான அணுகுமுறையைப் பலவீனப்படுத்தும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையின் இராஜ பக்சே அரசுக்கு முழுக்க உதவி செய்யும் நோக்கத்தில் இந்திய அரசு இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கின்றது.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கும் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளியாகும். இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடி பணமும் அள்ளிக் கொடுத்ததுடன் இந்தியாவின் முப்படைத் தளபதிகளை அனுப்பி இலங்கை அரசு நடத்திய யுத்தத்தை இயக்கியதும், நடத்தியதும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

Tuesday, February 21, 2012

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது!

இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்த இயக்கமாக இந்திய அரசு அறிவித்து, அதனைத் தீர்ப்பாயமும் உறுதி செய்ததை எதிர்த்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 2010 டிசம்பர் 8-இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில், ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த ரிட் மனு 2011 பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது, இந்த முயற்சியில் கிடைத்த முதல் வெற்றியாகும்.