Showing posts with label காஞ்சிபுரம். Show all posts
Showing posts with label காஞ்சிபுரம். Show all posts

Tuesday, December 10, 2013

காஞ்சிபுரம் நாடாளுமன்றத்தொகுதி வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும்-மல்லை சத்யா

நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதிக்கு #மதிமுக வேட்பாளர் அறி விக்கப்பட்டவுடன் அவரது வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என மதிமுக மாநில துணை பொதுச்செயலர் மல்லை சி.ஏ.சத்யா பேசினார்.

உத்தரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய கழகம் சார்பில் ம.தி.மு.க. கொடி யேற்று விழாவும், பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கூட் ரோட்டில் நடைபெற்றது.

மல்லை சி.ஏ.சத்யா பேசியது:

காஞ்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர் வைர மேகன் தடாகம் ஏரி நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் பல்வேறு கிராமங் களில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள் ளனர்.

Thursday, November 7, 2013

திருப்போரூர் பகுதியில், புதிய மின் இணைப்புகள் பெற உத்தரவு வழங்கிடுக! வைகோ அறிக்கை

திருப்போரூர் பகுதியில், புதிய மின் இணைப்புகள் பெற உத்தரவு வழங்கிடுக! #வைகோ அறிக்கை

மத்திய தொல்லியல் துறையின் 2010 ஆம் ஆண்டு மக்கள் விரோதச் சட்டத் தால், திருப்போரூர், மாமல்லபுரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், பல்லாவரம் பகுதியில் வாழும் மக்கள் புதிய மின் இணைப்புகள் பெற முடியாமல், தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி, மத்திய தொல்லியல் துறை யை எதிர்த்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். மறுமலர்ச் சி திராவிட முன்னேற்றக் கழகமும், இப்போராட்டங்களில் பங்கு ஏற்றது. 

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலை வர் திருமதி சக்தீஷ்வரி சிவராமன், துணைத்தலைவர் திருமதி சசிகலா லோகு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் தலைநகர் டில்லி சென்று, தொல்லியல் துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பாதிப்புகளை விளக்கி கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

Tuesday, November 5, 2013

மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தைத் தரம் உயர்த்துக;-வைகோ கோரிக்கை

மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தைத் தரம் உயர்த்துக; தொடர்ந்து அதே இடத்தில் இயங்கி ஆவன செய்திடுக! #வைகோ கோரிக்கை

உலகப் புகழ் பெற்ற பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாக திகழும் கலை நக ரான மாமல்லபுரத்தை, ஐ.நா. பொதுமன்றம் உலகப் பாரம்பரிய சின்னங்களில் தமிழகத்தின் இரண்டு நகரங்களில் முதன்மையானதாக அறிவித்து உள்ளது. 
இங்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் மத்திய மாநில அரசுகளுக்கு அன்னிய செலாவணியை ஈட் டித்தரும் நகரமாகத் திகழ்கிறது.

இந்நிலையில்தான், தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட் டில் இருந்த மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலை மத்திய தொல்லி யல் துறை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, மத்திய அரசின் அறிவிப்பு ஆணையை 20.5.2012 அன்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தியதைக் கண்டித் து, முதன் முதலாக மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் 30.5.2012 அன்றும் 6.8.2012 அன்றும் 14.11.2012 அன்றும் நான் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு, மத்திய தொல்லியல் துறையின் மக்கள் விரோதப் போக்கை கைவிட வலியு றுத்தியதோடு 21.11.2012 அன்று எனது தலைமையில் மக்கள் பெருந்திரள் ஆர்ப் பாட் டத்தையும் நடத்தினேன்.ஏனைய இயக்கங்களும் அமைப்புகளும் போராட் டங்கள் நடத்தின. பின்பு ஒன்றாக இணைந்து, மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரி மை மீட்புக்குழுவை உருவாக்கி, பலகட்ட எழுச்சியான போராட்டங்களை நடத் தியதால், மத்திய தொல்லியல் துறை தலசயனப் பெருமாள் கோயிலை கைய கப்படுத்துவதைக் கைவிட்டுள்ளது. 

Tuesday, October 8, 2013

திருக்கழுக்குன்ற பகுதியில் நோய்க்கிருமி

திருக்கழுக்குன்ற பகுதி மக்களை நோய்க்கிருமிகளிடமிருந்து காப்பாற்றுக!


தமிழக அரசுக்கு #வைகோ கோரிக்கை


மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் லேடெக்ஸ்  (எச்.எல். எல்) பயோடெக் லிமிடெட் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருக்கழுக்குன்றம் தாலுக்கா, திருமணி ஊராட்சியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மனித உயிர்களைப் பறித்திடும் கொடிய கொள்ளை நோய்களான அம்மை, காசநோய், காலரா, போலியோ, ரேபிஸ்,ஆந்ராக்ஸ்,டெட்டனக்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், பால்வினை உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து எதிர்வினை ஆற்றி குணப்படுத்தும் மருந் தைக் கண்டறிய, நடப்பாண்டில் மத்திய அரசு சுமார் 600கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்து, பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

Wednesday, August 21, 2013

பத்து தமிழர்கள் பட்டினிப் போராட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள். மீண்டும் பட்டினிப் போராட்டம் தொடங்கினர்.

காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினர்.

Monday, July 15, 2013

இன்ப அதிர்ச்சி தந்த காஞ்சி!

தாம்பரம் நிதி அளிப்புப் பொதுக்கூட்டத்தில் #வைகோ

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 29.6.2013அன்று தாம்பரத் தில், கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புப் பொதுக்கூட்டம் பேரெழுச்சி யுடன் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வானம் துலங்கினும் மீனம் படினும், அலைகள் பொங்கினும் மலைகள் வீழி னும், தன்னிலை மாறாது தாய்த் தமிழகத்தின் விடியலுக்காகவும்,தரணியில் தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலைக் கொடியை உயர்த்தவும், அறிவாசான் தந்தை பெரியார், தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நிலை நாட் டிய இலட்சியங்களை வென்றெடுப் பதற்காகவும், இருபதாவது ஆண்டில்
களங்களுக்கு மத்தியில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிற தமிழ்ப் பெரு மக் களின் கனிவான அன்பைப் பெற்று இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின், காஞ்சி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் நிதி வழங்கு கின்ற பொதுக்கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
அடைகின்றேன்.