Showing posts with label ஐ.நா. Show all posts
Showing posts with label ஐ.நா. Show all posts

Saturday, February 16, 2013

பன்னாட்டு விசாரணை தேவை-வைகோ

ஈழத்தமிழர் படுகொலை : பன்னாட்டு விசாரணை தேவை
ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும்

வைகோ கோரிக்கை

இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், தமிழ் இன அழிப்பு தொடர்வதும் குறித்து, அனைத்து உலக நாடுகளின் மனசாட்சியின் கதவுகள் தட்டப்படும் சூழலில், ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டம், வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற இருக்கின்றது.

Sunday, February 10, 2013

ஐ.நா. மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் -வைகோ

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் இன படுகொலையை செய்த இலங்கை அதிபர் ராஜபச்சேவை காங்கிரஸ் அரசு அவரை சந்தோஷபடுத்தி அழைத்து இருக்கிறது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.

இதனை எதிர்த்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பதியில் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்களை கைது செய்தது. இலங்கையில் இந்துக்கோவில்களை இடித்துவிட்டு பவுத்த நாடாக இலங்கை மாற்றிவருகிறது. இந்தியாவிற்கு ராஜபக்சேவை வரவழைத்து ராஜ மரியாதை செய்வது 7 கோடி தமிழர்களின் நெற்றியில் எட்டி உதைப்பது போன்று உள்ளது. இந்திய அரசு வினையை விதைத்துள்ளது. அதனுடைய பலன் இந்திய ஒருமைபாட்டுக்கு கேடு விளைவிக்கப்போகிறது.

Tuesday, February 28, 2012

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்

இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அரசை ஆதரிக்காதீர்;
கூட்டுக் குற்றவாளியாக ஆகாதீர்!


பிரதமருக்கு வைகோ கடிதம்!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, இன்று (28.2.2012) எழுதி உள்ள கடிதம்:

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம், இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.