வெலிங்டனில் இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியா?
அல்லது, கொலைகாரன் இராஜபக்சேவுக்குக்
குற்றேவல் புரியும் கூடாரமா?
குன்னூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி!
கொலைவாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா
என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை, மான உணர்வு உள்ள தமிழர்கள் தம் நெஞ்சில் ஏந்தி, தமிழ்க்குலப் பகைவர்களை இனி இந்த மண்ணில் அனுமதிக்க மாட்டோம்; கேடு கெட்ட மத்திய அரசை எச்சரிக்கின்றோம் என்கின்ற வகை யில், பல்லாயிரக்கணக்கில் குன்னூரில் திரண்டு இருக்கின்றீர்கள்.
கோவையில், மேட்டுப்பாளையத்தில், குன்னூரில், கூடலூரில் என இந்த நீல கிரிப் பகுதி முழுவதுமே பலத்த மழை பெய்து கொண்டு இருக்கின்றது. அதற்கு நடுவிலும், கொலைகாரச் சிங்களவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டு விட்டார் கள்; எனவே, அறிவிக்கப்பட்ட போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்ற செய்திக்குப் பின்னரும், உணர்ச்சிப் பெருக்கோடு இங்கே திரண்டு இருக்கின்ற
உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.