இயற்கை எரிவாயு - டீசல் விலை உயர்வைத்திரும்பப் பெற வேண்டும்
வைகோ அறிக்கை
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலையை உயர்த்தியது.எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல, தற் போது டீசல் விலையை 50 பைசா உயர்த்தி உள்ளது.கட்டுக்கடங்காத விலை வாசி உயர்வால் மக்கள் அல்லல்படும்போது, பெட்ரோல் டீசல் விலைகளை பத்து நாள்களுக்கு ஒருமுறை உயர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.