Sunday, April 8, 2012

மருத்துவ சேவையில் -மதிமுக


ஏப்ரல் 15 - ஈரோடு மாவட்டத்தில்...

* இலவச கண் சிகிச்சை முகாம்

* சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும்

* விழிப்புணர்வு இலவச மருத்துவ முகாம்

* உதடு பிளவு மேல் அன்னப் பிளவு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முகாம் வைகோ தொடங்கி வைக்கிறார்!

இலவச கண் சிகிச்சை முகாம்

தேசியப் பார்வையிழப்புத் தடுப்புத் திட்டம் - ஈரோடு மாவட்ட பார்வை யிழப்புத் தடுப்புச் சங்கம் - இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் - மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததானக் கழகம் - அரசன் கண் மருத்துவ மனை ஆகியவை இணைந்து,



15.4.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், ஈரோடு - கருங்கல் பாளையம்,  நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாமினை நடத்த உள்ளனர்.

ஈரோடு அரசன் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இலவச கண் அறுவைச் சிகிச்சை நடைபெறும்

சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்

ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததானக் கழகம் - இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் - மோனிகா டயபடிஸ் சென்டர் இணைந்து, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்று ம் வி ழிப்பு ண ர் வு இலவச ம ருத்துவ முகா ம் உணவுக் கண் காட் சியை

15.04.2012 காலை 10 மணியளவில், ஈரோடு - செங்கோடம்பாளையம், அரிமா சொசைட்டி டிரஸ்டில் (மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பார்வை வளாகம்) நடத்த உள்ளன.

மோனிகா டயபடிஸ் சென்டர் நிர்வாக இயக்குநர் டாக்டர் இ.தங்கவேலு அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் பரிசோதனை நடைபெறும்.

உதடு பிளவு உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை முகாம்

சென்னை, மீனாட்சி கிளிப்ட் அண்டு கிரேனியா பேஷியல் சென்டர் - மீனாட்சி அம்மாள் பல் ம ருத்துவக் கல்லூரி - சுவிட்ச ர்லாந்து கிளிப்ட் சைல்டு இண்டர்நேஷனல் ஆகியவற்றுடன் ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் மற்றும் ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி இரத்ததானக் கழகம் முன்னின்று நடத்தும் -உதடு பிளவு மேல் அன்னப் பிளவு உள்ளவர்களுக்கு இலவச அறுவைச் சிகிச்சைமுகாம்,

ஈரோடு -செங்கோடம்பாளையம் அரிமா டிரஸ்ட் அரங்கில் 15.04.2012 காலை 10.15 மணியளவில் நடைபெற உள்ளது.

மீனாட்சி கிளிப்ட் அண்டு கிரோனியா பேஷியல் சென்டர் திட்ட இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஆர்.மணிகண்டன் அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உதடுபிளவு - மேல் அன்னம் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதனை செய்து, இலவச அறுவைச் சிகிச்சைக்கு உரியோரைத் தேர்வு செய்வர்.


வைகோ தொடங்கி வைக்கிறார்

மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்ச்சிகளுக்கும் ஈரோடு மறுமலர்ச்சி திமுக மாவட்டக் கழகச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அ.கணேசமூர்த்தி தலைமை தாங்குகிறார்.

இதயம் நற்பணி இயக்கம் டிரஸ்ட் தலைவர் எ ஸ்.வி.மகாதேவன் வரவேற் புரை யாற்று கிறார்.

டாக்டர் இராமகிருஷ்ணன், டாக்டர் இரவிக்குமார், டாக்டர் சுகுமார் ஆகியோர்
முன்னிலை வகிக்கின்றனர்.

மூன்று மருத்துவ முகாம்களையும் தொடங்கி வைத்து மறுமலர்ச்சி திமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்துரை வழங்குகிறார்.


No comments:

Post a Comment