Showing posts with label உச்ச நீதிமன்றம். Show all posts
Showing posts with label உச்ச நீதிமன்றம். Show all posts

Friday, December 13, 2013

ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்-வரவேற்கிறேன் வைகோ அறிக்கை

ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்:

பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அரணாக உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பை வரவேற்கிறேன் #வைகோ அறிக்கை

டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை எனும் அருவருக்கத் தக்க பண் பாட்டு விரோதச் செயலை அங்கீகரித்தும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான நீதியரசர் சிங்வி அவர் களும், நீதியரசர் முகோபாத்தியாய அவர்களும் தந்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மகத்தான தீர்ப்பாகும்.

மனித குலத்தின் மாண்பைக் காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புரா தன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண் டு, மேலை நாட்டு கலாச்சாரச் சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை ஆராய்ந்தும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

Monday, October 28, 2013

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வைகோவின் மேல் முறையீடு !

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் #வைகோ வின் மேல் முறையீடு !

தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, கடந்த 17 ஆண்டுகளாக,மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகப் பொதுசசெலயாளர் வைகோ மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத் திலும் பேராடி வருகிறார். 

வைகோ தொடுத்த ரிட் மனு மீது, 2010 செப்டெம்பர் 28 இல் சென்னை உயர்நீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து , ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்று, ஆலையை இயக்கியது. 

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற 33 அமர்வுகளிலும், வைகோ கலந்து கொண்டு வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் உச்நீதிமன்றம், இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்து, ஆலையை இயக்கத் தீர்ப்பு அளித்தது. 

Tuesday, October 1, 2013

பசுமை அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை சுற்றுச்சூழல் விவகா ரங்களுக்கான "பசுமை அமர்வு' என்ற சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (30.09.13) உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஏ.கே. பட்நாயக், ஜெகதீஷ் சிங் கேஹர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "ஸ்டெர்லைட் ஆலை வழக்கை "பசுமை அமர்வு' இனி விசாரிக்கும். நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும்' என்று கூறினர்.

Wednesday, September 18, 2013

வைகோவின் மேல்முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் #வைகோ மேல்முறையீடு!

வெளிநாடுவாழ் இந்தியரான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா
நிறுவனங்களின் சார்பில், தூத்துக்குடி அருகில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை யை நிறுவிட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை உயிரினவாழ்
மண்டலத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலும், ஆலையைச் சுற்றி 250 மீட்டர் அகல பசுமை வளாகமும் இருக்க வேண்டும் என்ற இரு முக் கிய நிபந்தனைகளுடன் மறுப்பின்மைச் சான்று (No Objection Certificate) 01.08.1994 இல் வழங்கியது.

Wednesday, September 11, 2013

உச்ச நீதிமன்றத்தில் வைகோ

உச்ச நீதிமன்றத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தினை எதிர்த்து ஸ்டெர்லைட் வழக் கில் #வைகோ மேல்முறையீடு

டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த 08.08.2013 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல் முறையீடுகளை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 29.03.2013 அன்று ஆலையை மூடிடவும், ஆலைக்குச் செல்லும் மின் சாரத்தை நிறுத்தி விடவும் பிறப்பிக்கப்பட்ட உத்திரவுகளை இரத்து செய்து ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்றும் தீர்ப்பளித்தது.

Thursday, July 4, 2013

தலைமை நீதிபதி 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இரண்டு ஆண்டுகள் நீடிக்க வேண்டும்!
#வைகோ அறிக்கை

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்டகுளத்தூரில் பிறந்த பதஞ்சலி சாஸ்திரி, 1952 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார்.

61 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் தந்த நீதிபதி சதாசிவம் அவர்கள் அப்பதவி யை ஏற்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, April 23, 2013

ஸ்டெர்லைட் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த வைகோ

ஸ்டெர்லைட் வழக்கு - சீராய்வு மனு தமிழாக்கம் – சுருக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி தொழிற்பேட்டையில் ஸ் டெர்லைட் தாமிர ஆலை நிறுவுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த ஸ் டெர்லைட் ஆலை அமைப்பதை
எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997-ஆம் ஆண்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு 13 ஆண்டு காலம் நிலுவையில் இருந்தது. 2010-ஆம் ஆண்டு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், பால் வசந்தகுமார் கொண்ட அமர்வு, இந்த ஸ் டெர்லைட் ஆலை இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதியான மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இயற்கை உயிரினங்கள் வாழ்பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட வேண்டும் என்று விதித்த நிபந்தனையை மீறிய செயல் என்றும், பசுமை அரண் அளவை 250 மீட்டர் அகலத்தில் இருந்து 25 மீட்டராக குறைத்தது சரியான செயல் அல்ல என்றும், இந்த ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி விட்டன என்ற காரணங்களால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தானே நேரில் ஆஜராகி வாதாடினார். இரண்டு வருடங்களாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இறுதியில் கடந்த 02.04.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

Wednesday, April 3, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 10

2012 ஆம் ஆண்டு 

16.10.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் முன் வைத்த வாதங்களை இன்றும் தொடர்ந்து, காலை 10.45 முதல் பகல் 12.10 வரையிலும் சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடம் பின்வருமாறு வாதிட்டார்.

வைகோ: மாண்புமிகு நீதியரசர்களே, சுற்றுச்சூழல் குறித்து நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியும் என்று கூறினீர்கள். ஆனால், சில நிபுணர் குழுக்களின் நம்பகத்தன்மை எப்படிப் பட்டது, எப்படியெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, சாமர்த்தியமாக கருத்துக்களைச் சொல்லக்கூடியது என்பதை, இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 9

2012 ஆம் ஆண்டு 

9.5.2012 அன்று வழக்கு  உச்சநீதிமன்றத்தில், நீதி அரசர் லோதா, நீதி அரசர் கோகலே, நீதி அரசர் கோகோய் ஆகிய மூவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றத்தில், கடந்த மே 4 ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையில் பாஸ்கோ ஜிப்சம், 4,70,000 டன் குவிந்து கிடக்கிறது, அதை விரைந்து அகற்றுவதற்கு ஆலை நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவித்தது.

இதனைச் சுட்டிக்காட்டி வைகோ, பின்வருமாறு கூறினார்:

Tuesday, April 2, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 8

2012 ஆம் ஆண்டு 


17.1.2012 அன்று  நீதிபதி லோதா, நீதிபதி கோகலே அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ள வைகோ இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலை கோவா, குஜராத்தில் அனுமதி பெற முடியாமல் மராட்டிய மாநிலத்தில் அந்த அரசு கொடுத்த அனுமதியை மக்கள் போராட்டத் -தால் ரத்து செய்த பிறகு தூத்துக்குடியில் இந்த ஆலை 1994-ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.

Monday, April 1, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 7

2011 ஆம் ஆண்டு 

6.9.2011 அன்று  வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்’ என்று ஆலை நிர்வாகத் தரப்பில் வாதாடினார்கள்.
வைகோ தன்னுடைய வாதங்களை, ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வைத்தார்.

Sunday, March 31, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 6

2011 ஆம் ஆண்டு 

10.8.2011 உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில், இன்று முதலாவது வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர், மாசு கட்டுப்பாட்டுக்காக தாங்கள் 500 கோடி ரூபாய் செலவழித்து இருப்பதாகச் சொன்னார்.

உடனே நீதிபதி பட்நாயக், ‘அப்படியானல், அந்த அளவுக்கு மோசமாக மாசுபடும் சூழல் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்றால் எவ்வளவு இலாபம் கிடைத்து இருக்கும்?’ என்றும் கேட்டார்.

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 5

2011 ஆம் ஆண்டு 

29.4.2011அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. நீரி நிறுவனம், ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்க வில்லை.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வைகோ தெரிவித்ததாவது:

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 40 நாள்களுக்குப் பின்னர்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு, நீரி நிறுவனம் ஆய்வுக்கு வந்தது. முதல் சுற்று ஆய்வு, ஏப்ரல் 6, 7, 8, தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆய்வு, ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க, எனக்கும் தகவல் தரப்பட்டு, நானும் ஆய்வின்போது உடன் இருந்தேன். ஆய்வு அறிக்கையை, நீரி தந்தபின், அதனுடைய பிரதிகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் மீதான எனது கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

Saturday, March 30, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 4

2010 ஆம் ஆண்டு 

28.09.2010 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் படி தீர்ப்பு வழங்கியது.

29.09.2010 அன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு படி ஆலை மூட சொல்லி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்