ஈரோடு மாவட்டம், கொடுமுடியில், "மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பய ணம்' இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில், நேற்று (18.11.13), #மதிமுக பொதுச்செய லாளர் #வைகோ பங்கேற்றார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மழைக்கு இடையே வைகோ பேசியதாவது:
நாடு முழுவதுமாக கரும்பு விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய், வயல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் கரும் புக்கான பணத்தை, 15 நாளில் ஆலைகள் வழங்க வேண்டும்.
உள்நாட்டு கரும்பு விவசாயிகள் நலன் கருதி, வெளிநாடுகளின் இருந்து கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இறக்குமதி வரியை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்.







