Tuesday, November 5, 2013

மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தைத் தரம் உயர்த்துக;-வைகோ கோரிக்கை

மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தைத் தரம் உயர்த்துக; தொடர்ந்து அதே இடத்தில் இயங்கி ஆவன செய்திடுக! #வைகோ கோரிக்கை

உலகப் புகழ் பெற்ற பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாக திகழும் கலை நக ரான மாமல்லபுரத்தை, ஐ.நா. பொதுமன்றம் உலகப் பாரம்பரிய சின்னங்களில் தமிழகத்தின் இரண்டு நகரங்களில் முதன்மையானதாக அறிவித்து உள்ளது. 
இங்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் மத்திய மாநில அரசுகளுக்கு அன்னிய செலாவணியை ஈட் டித்தரும் நகரமாகத் திகழ்கிறது.

இந்நிலையில்தான், தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட் டில் இருந்த மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலை மத்திய தொல்லி யல் துறை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, மத்திய அரசின் அறிவிப்பு ஆணையை 20.5.2012 அன்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தியதைக் கண்டித் து, முதன் முதலாக மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் 30.5.2012 அன்றும் 6.8.2012 அன்றும் 14.11.2012 அன்றும் நான் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு, மத்திய தொல்லியல் துறையின் மக்கள் விரோதப் போக்கை கைவிட வலியு றுத்தியதோடு 21.11.2012 அன்று எனது தலைமையில் மக்கள் பெருந்திரள் ஆர்ப் பாட் டத்தையும் நடத்தினேன்.ஏனைய இயக்கங்களும் அமைப்புகளும் போராட் டங்கள் நடத்தின. பின்பு ஒன்றாக இணைந்து, மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரி மை மீட்புக்குழுவை உருவாக்கி, பலகட்ட எழுச்சியான போராட்டங்களை நடத் தியதால், மத்திய தொல்லியல் துறை தலசயனப் பெருமாள் கோயிலை கைய கப்படுத்துவதைக் கைவிட்டுள்ளது. 

Monday, November 4, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 2

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

துணிவும், நம்பிக்கையும்

நம் அய்யா வாண்டையார் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. அதில், கண்ணன் தூது சென்றபோது விசுவரூபம் காட்டியபோதும், அரவக் கொடியோன் துரியோதனன் அஞ்சவில்லை என்று கூறினார். அப்போது 11 அக்ரோணி சேனைகள் இருந்தன, பீக்ஷ்மர் - கர்ணன் - தரோணர் - கிருபர் - அஸ் வத்தாமன் - பூரிஸ்ரவஸ் - பகத தத்தன் - படைகள் இருந்தன, இத்தனையும் இருந்தது. நெஞ்சில் துணிவும் நம்பிக்கையும் இருந்தது. ஆகவே, போர் முனை யிலே சந்திப்பதைப்பற்றிக் கலங்காமல் எதிர்கொள்வதாகச் சொன்னான். 11 அக்ரோணி சேனைகளும் மகாரதர்களும் பக்கத்தில் இருக்கிற போது, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், துரியோதனன் போருக்கு எழுந்தான்.

அர்ஜூனன் பக்கத்தில் கண்ணன் இருக்கிறான் என்ற தன்னம்பிக்கையோடு, அவனுடைய வீரத்தில் நம்பிக்கை கொண்டு பாண்டவர்கள் களத்திற்கு வந்த னர். ஆனால், பீக்ஷ்மர் , துரோணர், கர்ணன் ஆகியோர் வீழ்ந்ததற்குப்பிறகு, கடைசிகட்டத்தில் சல்லியன் சேனாதிபதியாகி அவனும் வீழ்ந்ததற்குப் பிறகு, மகாரதர்கள் எல்லாம் அழிக்கப்பட்டதற்குப்பிறகு, படைபரிவாரம் சேனைகள் அழிந்ததற்குப்பிறகு அனைத்தையும் யுத்த களத்தில் இழந்து, கெளரவர் படை கள் தோற்றனர். அவர்களின் தோல்விக்குக் காரணம், வீரத்தின் வெற்றியா? சூழ்ச்சியா? என்ற விளக்கங்களுக்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கோமாவில் இருந்தாரா ?

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், தமிழகத்தில் அதிமுக அரசு ஏதேச்சதிகார போக்குடன் நடந்து கொள்கிறது, கருத்து சுதந்திரம் பறிக்கப் படுகிறது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.

வெங்காய அரசியல்!

சங்கொலி தலையங்கம் 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதைக் கூட மக் கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக
வெங்காயத்தின் விலை ஆகாயத்தை நோக்கி பறந்துகொண்டேயிருப்பதுதான்
கவலைப்படச் செய்திருக்கிறது. இந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும்
இன்றியமையாத பொருள் ‘வெங்காயம்’.நாடு முழுவதும் இதிலே ‘மட்டும்’ஒரு மைப்பாடு இருக்கிறது.

வெங்காயத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக மத்திய அரசு கூறுவது, வெங் காயம் உற்பத்தி குறைவு என்பதுதான்.வெங்காய உற்பத்தியில்முன்னணி மாநி லங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும்
தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்து நாட்டின் தேவையான அளவுக்குஉற்பத்தி செய் யப்படவில்லை; என்று அரசு கூறுவதைப் பார்த்தால் மேலோட்டமாக சரியான
காரணம் போன்று தெரியும். ஆனால், உண்மை நிலையோ வேறு.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழுவை மிரட்டும் ஆளும் தரப்பு

ஆளும் கட்சியின் தவறுகளை தட்டிகேட்டும் மக்களையும் கட்சிகளுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் ஆளும் தரப்பு ..

கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில்,தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைக் கழிவுகள், போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டிலுள்ள, மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணையில் கொட்டப்படுகிறது. இதனால், போத்தனூர், கோண வாய்க்கால்பாளையம்,மகாலிங்கபுரம்,வெள்ளலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். 

குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குப்பை கழிவு களை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க.வும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும்,  எவ்வித பயனுமில்லை. அதே நேரத்தில், தற் போதைய ஆளும் கட் சியினர்,முன்பு எதிர்கட்சியாக இருந்தபோது, இப்பிரச் னையில், தீவிரம் காட்டி னர். தற்போது, பதவிகளுக்கு வந்தபின், கண்டுகொள் வதில்லை.பிற கட்சிகளும் மவுனமாகிவிட்டனர்.