மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தைத் தரம் உயர்த்துக; தொடர்ந்து அதே இடத்தில் இயங்கி ஆவன செய்திடுக! #வைகோ கோரிக்கை
உலகப் புகழ் பெற்ற பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாக திகழும் கலை நக ரான மாமல்லபுரத்தை, ஐ.நா. பொதுமன்றம் உலகப் பாரம்பரிய சின்னங்களில் தமிழகத்தின் இரண்டு நகரங்களில் முதன்மையானதாக அறிவித்து உள்ளது.
இங்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் மத்திய மாநில அரசுகளுக்கு அன்னிய செலாவணியை ஈட் டித்தரும் நகரமாகத் திகழ்கிறது.
இந்நிலையில்தான், தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட் டில் இருந்த மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலை மத்திய தொல்லி யல் துறை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, மத்திய அரசின் அறிவிப்பு ஆணையை 20.5.2012 அன்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தியதைக் கண்டித் து, முதன் முதலாக மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் 30.5.2012 அன்றும் 6.8.2012 அன்றும் 14.11.2012 அன்றும் நான் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு, மத்திய தொல்லியல் துறையின் மக்கள் விரோதப் போக்கை கைவிட வலியு றுத்தியதோடு 21.11.2012 அன்று எனது தலைமையில் மக்கள் பெருந்திரள் ஆர்ப் பாட் டத்தையும் நடத்தினேன்.ஏனைய இயக்கங்களும் அமைப்புகளும் போராட் டங்கள் நடத்தின. பின்பு ஒன்றாக இணைந்து, மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரி மை மீட்புக்குழுவை உருவாக்கி, பலகட்ட எழுச்சியான போராட்டங்களை நடத் தியதால், மத்திய தொல்லியல் துறை தலசயனப் பெருமாள் கோயிலை கைய கப்படுத்துவதைக் கைவிட்டுள்ளது.