Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Tuesday, December 10, 2013

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா கொண்டா டியிருப்பது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கிறது. இந்த நிலையிலும் கூட, திராவிடம் எங்கே இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்பி, ஆரிய அடிவருடி களின் நூல்கள் பல வந்துள்ளன.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வெல்லும் சொல்வலர் வைகோ அவர்களும் போற்றி வருகின்ற திராவிடத்தை அறிவுப் பூர்வமாக மறுப்பதற்கு இயலாது என்பதனை புவியியல் அறிஞர்கள் பலரும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

எத்தனையோ பிரளயங்கள் தோன்றியும் அழிக்க முடியாத திருவிடம், திராவிட மாக உருப்பெற்று, இந்தியத் துணைக் கண்டத்தில் நிலை பெற்றிருப்பதற்கு அணி சேர்க்கும் விதத்தில் புராதன இந்திய வரைபடத்தில் ஒரு “தனித் திராவிட தேசம்” கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை நம் கழகத் தோழர்களின் கவனத்திற் குக் கொண்டு வருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Friday, November 15, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 8

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

நந்தினிக்கும், கரிகாலனுக்கும் வாதம் நடக்கிறது.

‘என்னைக் கொலை செய்யவேண்டும் என்று தானே இங்கு வரவழைத்தாய்? உன் கையில் இருக்கும் மீன் சின்னம் பொறித்த வாள், என்னைக் கொல்வதற் குத்தானே? என்னைக் கொன்று விடு’ என்று சொல்கிறான்.

நந்தினி கூறுகிறாள்: கொலை செய்ய வேண்டும் என்றுதான் வந்தேன்.ஆனால், எனக்குக் கடைசியாகக் கிடைத்த தகவல், ஊமைராணி மந்தாகினியின் மகள் நான் என்றும், என் தந்தை யார் என்றும் ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதை நினைக்கிறபோது, அந்த எண்ணம் எல்லாம் விட்டுவிட்டேன் என்கிறாள்.

கரிகாலனும், ‘நீ காலில் விழுந்து மன்றாடியும், அதைப் புறக்கணித்துவிட்டு நான் வீரபாண்டியன் தலையை வெட்டினேன். அன்றுமுதல் என் மனதில், வாழ் வில், அமைதி இல்லை. எனவே எனக்கு என் உயிரைப் போக்கிக் கொள்வது ஒன்றுதான் பிராயச்சித்தம்’ என்று கரிகாலன் சொல்கிறான்.


Thursday, November 14, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 7

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

வாள் பறந்தது-நட்பு பிறந்தது

வந்தியத்தேவன் சொல்கிறான். அருள்மொழிவர்மனை எப்படிச் சந்திக்கிறான் தெரியுமா? இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் மல்யுத்தம் செய் கிறார்கள். அருள்மொழித்தேவனும் - வந்தியத்தேவனும் மல்யுத்தம் செய்கி றார்கள். இரண்டு பேரும் சமநிலையில் யுத்தம் புரிகிறார்கள். அருள்மொழித் தேவர் போர்க் கலையில் வல்லவர். வந்தியத்தேவனும் அசகாய சூரன்தான். இருந்தாலும் கொஞ்சம் அசந்து விட்டான். இரண்டு பேரும் வாள் யுத்தம் செய் கிறார்கள். அதில்கூட அருள்மொழிவர்மர் எப்படி வெற்றி பெறுகிறார் என்று கல்கி கூறுகிறார் என்றால், ‘வந்தியத்தேவன் கவனம் சிதறியது, வாள் பறந் தது’ என்று எழுதுகிறார்.

இலங்கையில் இருந்து திரும்பி வருகிறபோது, கடலில் கப்பல் மூழ்குகிறது. அந்தக் கப்பலில் வந்தியத்தேவன் இருக்கிறான். முரட்டு அராபியர்கள் அவ னைக் கைது செய்து கொண்டுபோய் விட்டார்கள். அங்கே பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் இருக்கிறார்கள். வந்தியத்தேவன் உயிருக்கு ஆபத்து. அவனை மரத்தில் கட்டி வைத்து இருக்கிறார்கள். கப்பல் தீப்பிடித்து எரிகிறது.

Sunday, November 10, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 6

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

விஜயாலயச் சோழனின் வீரம்


இந்தச் சூழலில், சோழ மன்னர் குடும்பத்தினரைக் கொலை செய்யத் திட்ட மிடு கிற பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் , ஒரு இடத்தில் கூடுகிறார்கள், அந்த இடம்தான் திருப்புறம்பியம் பள்ளிப்படைக் கோவில். இப்பவும் இருக்கிறது திருப்புறம்பியம். அங்குதான் சதி நடக்கிறது. இந்தத் திரும்புறம்பியத்திற்கு, ஒரு வரலாறு இருக்கிறது. இந்தத் திருப்புறம்பியம் போர்க்களம் தான் விஜயா லயச் சோழனின் வீரத்தைப் பறை சாற்றியது. விஜயாலயச் சோழனுக்கு 96 விழுப்புண்கள். ‘90 ம் சுமந்தோன்’ என விஜயாலயச் சோழனுக்கு ஒரு பெயர் உண்டு.

“எண்கொண்ட தொண்ணூற்றின்
மேலுமிரு மூன்று
புண்கொண்ட வெற்றிப் புரவலன்”

என்பது பாடல்!

Saturday, November 9, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 5

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

இயற்றியது யார்?

சோழ சாம்ராஜ்யத்தின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் குந்தவை நாச்சியார். சோழ மன்னர்களின் வரலாற்றில் பெருமைக்கு உரியவர். குந்தவை பிராட்டி சிறிய வயதில் இருக்கிறபோது புலவர்கள் வந்து பாடி விட்டுப் போன உடனே, குந்தவை சொல்கிறார். ‘அப்பா, புலவர்கள் உங்களை பற்றிப் பாடிய பாடல்கள் ரொம்ப நல்லா இருந்ததே?’ என்கிறாள்.

உடன் மன்னர், ‘அப்படியா நானே என்னைப் புகழ்ந்து ஒரு பாட்டு பாடட்டுமா?’ என்று கேட்க, ‘பாடு’ என்றவுடன், இந்தப் பாட்டைப் பாடிவிட்டு ‘எப்படி இருக்கி றது?’ என்று கேட்டேன். என் முதுகில் ஏறி உட்கார்ந்து, என் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள்’ என்று சொல்லிவிட்டு, ‘இந்தப் பாட்டை யாரிடமோ குந் தவை சொல்லி இருக்கிறாள், அந்தப்புலவன் எழுதிக் கொண்டுவந்து இங்கே பாடி இருக்கிறான்’ என்கிறார்.


Thursday, November 7, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 4

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

இசையும், கலையும்

இசை வளர்த்த இடம் இந்த தஞ்சை மண்டலம். இங்கேதான், மாரிமுத்தா பிள் ளையும் அருணாசல கவிராயரும் - முத்துத் தாண்டவரும் வாழ்ந்தார்கள். இந் தத் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தான். இங்கே வாழ்ந்த ஆபிரகாம் பண் டி தர், ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற அற்புதமான ஒரு இசைக்காவியத்தைத் தந்து இருக்கிறார். இந்த நூலிலும் கூட, கல்கி ஆசிரியர் பழைய செய்திகளை எல்லாம் சொல்கிறார்.

காவிரி வளத்தைச் சொல்கிறார். இசையின் சிறப்பைச் சொல்கிறபோது

‘கொன்றைன் தீங்குழல் கேளாமோ தோழி
ஆம்பலென் தீங்குழல் கேளாமோ தோழி’

என்கின்ற சிலப்பதிகாரப் பாடல் வரிகளைப் பாட வைக்கிறார்.

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 2

அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினை வேந்தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடை பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஆற்றிய வீர உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:

அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை என்ற பெயரில், ஒரு போலி நாடகம்
தொடங்கியது. வீரபாண்டிய கட்ட பொம்மன் மீது ஐந்து குற்றச்சாட்டு களைச் சுமத்துகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதைத் தமிழில் மொழி பெயர்த் துச் சொன்னார் துபாஷி இராமலிங்க முதலியார். அதற்குக் கட்டபொம்மன் சொன்ன பதில்களை,ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்பானர்மேனுக்குச் சொல் லுகிறார்.சுற்றிலும் வெள்ளையருக்கு ஆதரவான பாளையக்காரர்கள் உட்கார்ந் து இருக் கிறார்கள். மக்கள் கூடியிருக்கிறார்கள்.
முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்க வில்லை.

அதற்குக் கட்டபொம்மன் பதில்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்க வில்லை.

Wednesday, November 6, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 3

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

தக்கோலப் போர்

இந்த வீர நாராயணம் ஏரி, கடல்போல் இருக்கிறது. இந்த ஏரியை அமைத்த பராந்தகச் சக்கரவர்த்தியின் வீர மைந்தன் இளவரசர் இராஜதித்தயர் என்று, முதல் அத்யாத்திலேயே இராஜதித்தயரின் தக்கோலப் போரைப் பற்றிச் சொல் கிறார்.

வீரநாராயணம் என்று இந்த ஏரிக்கு எப்படி பெயர் வந்தது. பராந்தகச் சோழனின் பல பெயர்களில் ஒன்றான வீரநாராயணன் என்ற பெயரை சூட்டுகிறார். ‘தக் கோலப் போர்’ சோழர்கள் வரலாற்றிலேயே மிகப் பிரசித்திப் பெற்ற யுத்தம். அப்போது சோழர் குலம் கொஞ்சம் புகழ் மங்கி இருந்த காலம். பல்லவ மன்ன னுக்குத் துணையாகச் செல்கிறபோது, அரக்கோணத்துக்கு அருகில் தக்கோ லம் என்ற இடத்தில், சோழப் படைகளுக்கும், இரட்டை மண்டலத்து படைக ளுக் கும் பயங்கர யுத்தம் நடந்தது. இரட்டை மண்டலத்துக் கன்னரதேவன் பெரும் படையுடன் மோதினான்.

Monday, November 4, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 2

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

துணிவும், நம்பிக்கையும்

நம் அய்யா வாண்டையார் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. அதில், கண்ணன் தூது சென்றபோது விசுவரூபம் காட்டியபோதும், அரவக் கொடியோன் துரியோதனன் அஞ்சவில்லை என்று கூறினார். அப்போது 11 அக்ரோணி சேனைகள் இருந்தன, பீக்ஷ்மர் - கர்ணன் - தரோணர் - கிருபர் - அஸ் வத்தாமன் - பூரிஸ்ரவஸ் - பகத தத்தன் - படைகள் இருந்தன, இத்தனையும் இருந்தது. நெஞ்சில் துணிவும் நம்பிக்கையும் இருந்தது. ஆகவே, போர் முனை யிலே சந்திப்பதைப்பற்றிக் கலங்காமல் எதிர்கொள்வதாகச் சொன்னான். 11 அக்ரோணி சேனைகளும் மகாரதர்களும் பக்கத்தில் இருக்கிற போது, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், துரியோதனன் போருக்கு எழுந்தான்.

அர்ஜூனன் பக்கத்தில் கண்ணன் இருக்கிறான் என்ற தன்னம்பிக்கையோடு, அவனுடைய வீரத்தில் நம்பிக்கை கொண்டு பாண்டவர்கள் களத்திற்கு வந்த னர். ஆனால், பீக்ஷ்மர் , துரோணர், கர்ணன் ஆகியோர் வீழ்ந்ததற்குப்பிறகு, கடைசிகட்டத்தில் சல்லியன் சேனாதிபதியாகி அவனும் வீழ்ந்ததற்குப் பிறகு, மகாரதர்கள் எல்லாம் அழிக்கப்பட்டதற்குப்பிறகு, படைபரிவாரம் சேனைகள் அழிந்ததற்குப்பிறகு அனைத்தையும் யுத்த களத்தில் இழந்து, கெளரவர் படை கள் தோற்றனர். அவர்களின் தோல்விக்குக் காரணம், வீரத்தின் வெற்றியா? சூழ்ச்சியா? என்ற விளக்கங்களுக்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.

Sunday, November 3, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 1

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

அனைவருக்கும் வணக்கம்.

‘சோழமண்டல இயல் இசை நாடக மன்றத்தினர் விழா எடுப்பதாகவும், அதில் ‘இயல்’ குறித்து உரையாற்றிட வேண்டும் என்றும் அழைத்த நேரத்தில், கலை வளர்த்த தரணியில், இசை வளர்த்த தஞ்சையில், தமிழர்களின் மகோன்னத மான மன்றத்தில், உரை ஆற்றுகின்ற வாய்ப்பு எனக் கருதி அகமகிழ்ந்து, நான் இசைவு அளித்தேன்.

கல்விக் காவலர், மாட்சிமைக்கு உரிய துளசி அய்யா வாண்டையார் அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்று, உதயகுமாரும், துரை. பாலகிருக்ஷ்ணனும் என்னிடத்தில் கூறியபோது, அது திகட்டாத தேறலாக என் நெஞ்சில் இனித்தது. என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து அவரை மதிக்கின்றவன் நான். இன்றுதான் முதன்முதலாக அவர்களோடு ஒரு மேடையில் பங்கு ஏற்கின்ற பேறு எனக்கு கிடைத்து இருக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க இசைவு அளித்தமைக்கும், அரிய உரை தந்தமைக்கும், இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, November 2, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 8

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இதற்குப்பின்னர் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவ ரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத் துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர்.அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. பூலித்தேவன் பாடிய பாடல்கூட இருக்கிறது. அருமையான பாடல். சிவனை நினைத்துப் பாடிய பாடல்.

இதோ அந்தப் பாடலைச் சொல்கிறேன்.

பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே - சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி

Thursday, October 31, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 7

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திர மாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கி றான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட் டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இர வாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவரு கிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார் கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டு விட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக் குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறி யைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக் கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடு வோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்கு கிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

Tuesday, October 29, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 6

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

அப்படிப்பட்ட வீரமும், தீரமும் நிறைந்த மன்னன் பூலித்தேவன் படையில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலாடி போராடிய வரலாற்றை இங்கே சொல்வது மிகவும் அவசியமாகும்.

அந்தப்போர் மிகஉக்கிரமானபோர்.வாசுதேவநல்லூர் போரில் கம்மந்தான் கான் சாகிப் வந்து போர்தொடுத்துத் தோற்றானே அந்தப்போரில்,இரண்டாம் போரில் வெண்ணிக்காலாடி பிரதான தளபதி. இன்று இம்மேடையில் சேதுராமனுக்குப் பக்கத்தில் என் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வத்துக்குப் பக்கத்தில், தம்பி சரவணனுக்குப் பக்கத்தில்,செந்தூர் பாண்டியனுக்குப் பக்கத்தில்,என் அருமைத் தம்பி தேவேந்திரகுல சமூகத்துப் பிள்ளை டாக்டர் சதன் திருமலைக்குமார் உட் கார்ந்து இருக்கிறார்.

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 1

அனைத்துத் தரப்பு மக்களும் அண்ணன் தம்பிகளாக, ஒற்றுமையுடன் வாழும் கயத்தாறுக்கு ஏன் இத்தனைக் கட்டுப்பாடுகள்?


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் விழாவில் #வைகோ கேள்வி

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 வது நினைவேந் தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடைபெற் றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய வீர உரை வருமாறு:

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு 
அஞ்ச வேண்டாமடா பாஞ்சையரே

என்று இந்த நாட்டின் அடிமை விலங்குகளை உடைப்பதற்காக பிரிட்டிஷ் கும் பினிப் படைகளின் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் அஞ்சாது வீரச்சமர் புரிந்த கட்டபொம்மனை இன்றைக்கே தூக்கில் இட்டு விட வேண்டும் என்று நடுப்பகல் ஒரு மணி அளவில் மேஜர் பானர்மேன் கட்டளை பிறப்பித்துவிட்டு, அவனும் வெள்ளை அதிகாரிகளும் சென்றதற்குப் பின்னர், அடிமைகளாகி விட் ட சில பாளையக்காரர்களும், பிரிட்டிஷ் கும்பினிப் பட்டாளத்து வீரர்களும் சூழ்ந்திருக்க, ஆதவன் மேற்கே சாய்ந்து கொண்டு இருந்தவேளையில், 

Thursday, October 24, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 5

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இரண்டாம் முறையாக கான்சாகிப் 1760 டிசம்பர் 12 இல் திருநெல்வேலியில் இருந்து பெரும்படையுடன் வந்து நெல்கட்டும் செவலில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் முகாம் போட்டான் 1760 டிசம்பர் 20 இல் போர் தொடங்கியது. வீரமறவர்கள் நூறுபேர் மடிந்தார்கள். பூலித்தேவரே இம்முறையும் வென்றார். கான்சாகிப் தோற்றான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற் றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன. கான்சாகிப்பும் பின்னர் வெள்ளையரை எதிர்த்து மதுரையில் தளம் அமைத்தான். வீரத்தில் சிம்மமான பூலித்தேவர் ஆலய வழி பாட்டில் சிறந்து கோவில் திருப்பணிகள் பலவற்றை செய்தார்.

Wednesday, October 23, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 4

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

அப்படிப்பட்ட நிலையில் கான்சாகிப் இவ்வளவு படைகளையும் கொண்டுவந்து வெற்றி பெற்றுவிடலாம் என்று 1759 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி வாசு தேவநல்லூர் கோட்டையையும், நெற்கட்டுஞ் செவல் கோட்டையையும் தாக் கவேண்டும் என்று படைப் பிரிவுகளோடு வந்தான். 1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கிய யுத்தம் டிசம்பர் 26ஆம் தேதிவரை நடந்தது.அவன் வெற் றி பெறுவான் என்று பிரிட்டிக்ஷ்காரன் நினைத்தான். ஹைதர் அலியையேத் தோற்கடித்தவன் ஆயிற்றே. சூராதி சூரனாயிற்றே என்று நினைத்தார்கள். அப் படி நினைத்த அந்தப் போரில் கான்சாகிப் தோற்றான்.

பூலித்தேவன் வெற்றிபெற்றான். பீரங்கிகளும், துப்பாக்கிகளும் கொண்ட இத் தனை படைகளை வெள்ளைக்காரன் கொண்டுவந்து பெரும்படையோடு தாக்கி ஏறத்தாழ ஒருமாதகாலம் நடைபெற்ற முதல் யுத்தத்தில் பூலித்தேவன் வெற்றி பெற்றான். கான்சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புறமுதுகிட்டு ஓடினான். ஏன் அவனைப்பற்றிச் சொல்கிறேன் என்றால் அவனுடைய மனத்துணிவையும் நான் அறிவேன்.

Tuesday, October 22, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 3

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

அவருடைய காந்தசக்தி மகத்தானது. ஆர்க்காட்டு நவாப்பின் படையில்வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியா னோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படை யில்  சேர்ந்தார்கள். சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம்கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித் தார்,மன்னர் பூலித்தேவன்.அந்தப்போரில் இஸ்லாமியனாகப் பிறந்து ஆர்க் காடு நவாப்புக்குப் பக்கத்தில் இருந்து மன்னர் பூலித்தேவர் படைக்கு வந்து சேர்ந்த முடேமியா என்கின்ற இÞலாமியத் தளபதியின் மார்பில் குண்டு பாய்ந் து இரத்த வெள்ளத்தில் அவன் புரண்டு கொண்டிருந்த வேளையில் மன்னர் பூலித்தேவ ருக்குத் தகவல் கிடைத்து ஓடிச்சென்று முடேமியாவை எடுத்து மடியிலே கிடத்தி இந்த மண்ணில் அந்நியனை எதிர்த்து வீரப்போர் புரிந்த தங்க மே! உன் ஆவி பிரிகிற வேளையில் உன் மேனியின் இரத்தம் என் மடியில் பாய் கிறது என்று உச்சி மோந்து அவனை அரவணைத்துக் கொண்டார். மன்னா,நான் கடமையாற்றி விட்டுத்தான் மடிகிறேன் என்று முடேமியா இறந்துபோனான். இஸ்லாமியக் குலத்தில் பிறந்து தன்னோடு வந்து படையிலே சேர்ந்து போரி லே உயிர் விட்டவனுக்கு நடுகல் எழுப்பினார் பூலித்தேவன். அவருடைய பணி கள் அளப்பரிய பணிகள்.

Monday, October 21, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 2

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

ஆனால், அந்த மன்னருக்கு விழா எடுக்க வேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம் நான் உலகத்தின் யுத்தகளங்களை ஆர்வத்தோடு படிப்பவன். உலகத் தின் மகாபெரிய வீரர்களின் போர்க்களக் காட்சிகளை நான் விருப்பத்தோடு படிப்பவன். சின்னவயதில் இருந்தே என் உணர்வு அதுதான். நான் சிறுவனாக பள்ளியில் படிக்கிறபோதும் நான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதி ய வியாசர் விருந்தைப்படிப்பதற்கு முன்பு பெரிய எழுத்து மகாபாரதத்தை மழை வரவேண்டும் என்பதற்காக ஊர் மடத்திலே விராட பருவம் வாசிக்கின்றஅந்தக் காலத்தில் நான் சின்னஞ்சிறுவனாக மகாபாரதத்தைப் படிக்கிற போது என் மனம் கவர்ந்த காட்சி அந்த 13 ஆம் போர்சருக்கம். அபிமன்யு வதைக்காட்சி தான். அதைப்போல, கம்பனின் இராமாயணத்தில் என் உள்ளம் கவர்ந்த காட்சி நிகும்பலை வேள்வி சிதைக்கப்பட்டபோது களத்தில் போராடிய இந்திரஜித்தின் வீரக்காட்சிதான். இது என் உணர்வு.

Wednesday, October 16, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 1

#வைகோ உரை பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்

என முழங்கிய வீரவேந்தர் பூலித்தேவருக்கு இன்று விழா.

Friday, October 11, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 8

வைக்கம் வீரரின் படத் திறப்பு. தந்தை பெரியார் படம் திறப்பு. திறந்து வைத்தது யார்? வ.உ.சிதம்பரம் பிள்ளை.பெரியாரும் காங்கிரசை வளர்த்தவர்தானே, காங் கிரசில் இருக்கும் வர்ணாசிரமக் கொடுமையை எதிர்த்து வெளியேறியவர் தானே?

1928 ஆம் ஆண்டு பெரியார் படத்தை வ.உ.சிதம்பரம் திறந்து வைத்ததை குடிய ரசுப் பத்திரிகை வெளியிடுகிறது. 20 ஆண்டுகள் கழித்து வ.உ.சி. மறைந்த பிறகு, 1948 இல் மே மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் திராவிடர் கழகத்தின் 18 ஆம் மாகாண மாநாடு. அந்த மாநாட்டில் வ.உ.சி. படம் திறந்து வைக்கப்பட்டது.அந்த மாநாட்டில் படத்தைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தவர் தமிழ்த் தென் றல் திரு வி.க. ஆனால், அவர் வரவில்லை. அவர் வரவில்லை என்பதால் குத் தூசி குருசாமி அந்தப் படத்தைத் திறந்து வைத்தார். அந்த உணர்வோடுதான் நான் இங்கே பேசுகிறேன்.