புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்
இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா கொண்டா டியிருப்பது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கிறது. இந்த நிலையிலும் கூட, திராவிடம் எங்கே இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்பி, ஆரிய அடிவருடி களின் நூல்கள் பல வந்துள்ளன.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வெல்லும் சொல்வலர் வைகோ அவர்களும் போற்றி வருகின்ற திராவிடத்தை அறிவுப் பூர்வமாக மறுப்பதற்கு இயலாது என்பதனை புவியியல் அறிஞர்கள் பலரும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
எத்தனையோ பிரளயங்கள் தோன்றியும் அழிக்க முடியாத திருவிடம், திராவிட மாக உருப்பெற்று, இந்தியத் துணைக் கண்டத்தில் நிலை பெற்றிருப்பதற்கு அணி சேர்க்கும் விதத்தில் புராதன இந்திய வரைபடத்தில் ஒரு “தனித் திராவிட தேசம்” கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை நம் கழகத் தோழர்களின் கவனத்திற் குக் கொண்டு வருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.