Sunday, November 3, 2013

உத்தமர் நென்மேனி ஜெயராமன் மறைவு -வைகோவின் இரங்கல் உரை

மக்கள் மதிப்பைப் பெற்று இயக்கத்துக்கு மாண்பு சேர்த்த உயர்ந்த பண்பாளர் உத்தமர் நென்மேனி ஜெயராமன் என்று #மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ
இரங்கல் உரையில் குற்றிட்டார். உரை வருமாறு...

எனது வாழ்க்கையின் துன்பமான தினங்களுள் இந்த நாளும் ஒன்று.இப்படிஒரு துயரம் வருமென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. இந்தப் பகுதியில் செல் வமும், அனைத்துச் சமூக மக்களுடைய அளப்பரிய அன்பும், செல்வாக்கும் பெற்று இருந்த ஒரு பாரம்பரியமான குடும்பத்திலே வந்த எனது ஆருயிர்ச்
சகோதரன் நென்மேனி ஜெயராமன் உடலை, குழிக்குள் இறக்கி, மண்ணைப் போடுகின்ற இந்த நிகழ்வில், என் மனம் கலங்குகிறது. எனது உடன்பிறவாச்
சகோதரர்களுள் ஒருவராக அவர் இருந்தார்.

அவரது மூதாதையர்கள், இப்பகுதியில் மிக்க செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இங்கே உரை ஆற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா ளரும், உயர்நிலைக் குழு உறுப்பினருமாகிய என்னுடைய அன்புச் சகோதரர் சுப.தங்கவேலன் அவர்கள்,தனது மாமன் மகன் ஜெயராமனின் நிலைமையைச் சொன்னார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணி!

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்களின் வேண்டுகோளுக்கு 
இணங்க,விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்ட புதிய வாக் கா ளர் சேர்த்தல் மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் குழுக்களை அமைக் கும் பணியினை மேற்கொள்வதற்காக 17.10.2013 அன்று சென்னையிலி ருந்து திருமங்கலம் சென்றோம்.

திருமங்கலத்தில்,தேர்தல் பணித் துணைச்செயலாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் வீர. தமிழ்செல்வன் அவர்களின் ஆலோசனையின் பேரில், திருமங்கலம் சட்டமன் றத் தொகுதி களப்பணியை முடுக்கிவிட்டோம்.

அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்று, கொள்கை விளக்க அணிச் செயலாளர்
க.அழகுசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில், தேர்தல் பணித் துணைச் செய லாளர் மு.கார்த்திகேயன் தலைமையிலான குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து,இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் தேர்தல் களப்பணிகள் குறித் தும் அறிவுறுத்தினோம்.

Saturday, November 2, 2013

பூலித்தேவன் விழா-வைகோ உரை-பகுதி 8

#வைகோ உரை ,பூலித்தேவன் பிறந்த நாள் விழா 18.10.2008

இதற்குப்பின்னர் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவ ரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத் துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர்.அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. பூலித்தேவன் பாடிய பாடல்கூட இருக்கிறது. அருமையான பாடல். சிவனை நினைத்துப் பாடிய பாடல்.

இதோ அந்தப் பாடலைச் சொல்கிறேன்.

பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே
புகலக் கேண்மின்
தீங்குபுரி மூவாலிச வினையே - சிக்கி
உழறும் அடியேன் தன்னை
ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி
எனைக்காக்க ஒருவருண்டோ
ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே
இறைவனே போற்றி போற்றி

சாலமன் மீன்களின் சவால்கள் நிறைந்த பயணம்!

உலக ஜீவராசிகளின் பரிணாமப் பல்லுயிர் பெருக்கத்தின் இருப்பிடமாக கடல் விளங்குகிறது. முதல் ஜீவராசியான ஒரு செல் உயிரினம் அமீபா. அது நீரில் தான் தோன்றியது.அதுதான் பல்கிப் பெருகி பல்வேறு பரிணாமங்களை அடைந்து மீன்களாக உருவானது. இப்பொழுது நீரில் மட்டுமே வாழ்ந்த ஜீவராசி கள் இடம் பெயர வேண்டிய பரிணாமத்தில் நீரில் வாழ்ந்து நிலத்தை சார்ந்து வாழ்கின்ற, தவளை,ஆமை, முதலை, நண்டு போன்றவை நிலத்தில் முட்டை யிட்டு பொரிக்கச் செய்து பின் நீரில் வாழ்பவைகளாக பரிணாமம் அடைகிறது. தவளைக் குஞ்சுகளை தலைப்பிரட்டை என்று அழைப்பர். அவை பார்ப்பதற்கு மீன் குஞ்சுகளைப் போன்று இருக்கும். வளர வளர உடல் பகுதியில் உள்ள
துடுப்புக்கள் கால்களாக மாறித் தவளையாக உருமாறும்.அடுத்த இடப்பெயர்வு என்பது நிலத்தில் வாழ்ந்து நீரை சார்ந்தவையாக உருவெடுக்கிறது. இப்படி யான சங்கிலித்தொடர் பரிணாமம் தான் பல்லாயிரம் கோடி ஆண்டுகளில் ஒன் றை ஒன்று சார்ந்து இன்றைய மனித இனம் உருவாகி முழுமை பெருகிறது. காலச்சூழற்சியில் அடுத்து என்ன நிகழும் என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். நீரின்றி அமையாது உலகு என்பது நமது மூதுரை.உலகத் தின் மூன்றில் இரண்டு பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.

அர்த்த இராத்திரியில் கொளத்தூர் மணி கைது! அரசின் எதேச்சதிகார அடக்குமுறை வைகோ கண்டனம்

அர்த்த இராத்திரியில் கொளத்தூர் மணி கைது! 
அண்ணா திமுக அரசின் எதேச்சதிகார அடக்குமுறை
#வைகோ கண்டனம்

இன்று நவம்பர் 2 அதிகாலை 02.11.2013 திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலை வர் கொளத்துர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து விடியற்காலை 4 மணிக்கெல்லாம் மேஜிஸ்ரேட் முன்னிலை யில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவைப் பெற்று பொழுது விடிவதற்குள்ளா கவே சேலம் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைத்தீவில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி, கொலைபாத ராஜபக்சேவை அடுத்த இரண்டு ஆண்டுக ளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக்கும் மன்னிக்க முடியாத அக்கி ரமத்தை காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 
மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்து, தமிழர்கள் மீது படுகொலையை நடத்தியவனை குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக கீரிடம் சூட்டுகிற ஈனத்தனமான வேலையை இந்திய அரசு செய்தது.