மக்கள் மதிப்பைப் பெற்று இயக்கத்துக்கு மாண்பு சேர்த்த உயர்ந்த பண்பாளர் உத்தமர் நென்மேனி ஜெயராமன் என்று #மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ
இரங்கல் உரையில் குற்றிட்டார். உரை வருமாறு...
எனது வாழ்க்கையின் துன்பமான தினங்களுள் இந்த நாளும் ஒன்று.இப்படிஒரு துயரம் வருமென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. இந்தப் பகுதியில் செல் வமும், அனைத்துச் சமூக மக்களுடைய அளப்பரிய அன்பும், செல்வாக்கும் பெற்று இருந்த ஒரு பாரம்பரியமான குடும்பத்திலே வந்த எனது ஆருயிர்ச்
சகோதரன் நென்மேனி ஜெயராமன் உடலை, குழிக்குள் இறக்கி, மண்ணைப் போடுகின்ற இந்த நிகழ்வில், என் மனம் கலங்குகிறது. எனது உடன்பிறவாச்
சகோதரர்களுள் ஒருவராக அவர் இருந்தார்.
அவரது மூதாதையர்கள், இப்பகுதியில் மிக்க செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இங்கே உரை ஆற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா ளரும், உயர்நிலைக் குழு உறுப்பினருமாகிய என்னுடைய அன்புச் சகோதரர் சுப.தங்கவேலன் அவர்கள்,தனது மாமன் மகன் ஜெயராமனின் நிலைமையைச் சொன்னார்.