Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Monday, December 9, 2013

தேர்தல் வருமுன்னே தெளிவுறுவாய் கண்ணே!

#மதிமுக தேர்தல் பணிச் செயலாளர் கட்டிளங்காளை கழககுமார் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆற்றி யுள்ள பணிகள் மாற்றாரைமருளச் செய்திருக்கிறது.

திட்டமிட்டுப் பணியாற்றிடத் தொகுதிமுழுதும் தேர்தல் பணிக்குழு அமைத்து
இருப்பது, பொங்கி வரும் புதுவெள்ளம் போல் எழுச்சியுறச் செய்திருக்கிறது
உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயலாகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் குறிக்கோளை இளைய சமு தாயத்தினர் ஏந்திச் செல்லும்போது அதற்கு இடையூறாக எந்தச் சக்தியும் குறுக் கிட முடியாது.

Sunday, December 8, 2013

தேர்தல் முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி

காங்கிரஸ் கட்சிக்கு, மீள முடியாத படுதோல்வி; தமிழக மக்களுக்கு ஆறுதல்!
மோடி அலை வீசுகிறது #வைகோ கருத்து

ஐந்து மாநிலச் சட்டமன்றத்தேர்தல் முடிவுகளில்,மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு, இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்து உள்ளது.

தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத்தமிழர் படுகொலையில் பங் காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக் களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது. 

Sunday, November 3, 2013

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணி!

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்களின் வேண்டுகோளுக்கு 
இணங்க,விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்ட புதிய வாக் கா ளர் சேர்த்தல் மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் குழுக்களை அமைக் கும் பணியினை மேற்கொள்வதற்காக 17.10.2013 அன்று சென்னையிலி ருந்து திருமங்கலம் சென்றோம்.

திருமங்கலத்தில்,தேர்தல் பணித் துணைச்செயலாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் வீர. தமிழ்செல்வன் அவர்களின் ஆலோசனையின் பேரில், திருமங்கலம் சட்டமன் றத் தொகுதி களப்பணியை முடுக்கிவிட்டோம்.

அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்று, கொள்கை விளக்க அணிச் செயலாளர்
க.அழகுசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில், தேர்தல் பணித் துணைச் செய லாளர் மு.கார்த்திகேயன் தலைமையிலான குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து,இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் தேர்தல் களப்பணிகள் குறித் தும் அறிவுறுத்தினோம்.

Thursday, September 26, 2013

ஜனநாயகக் கடமை ஆற்றுவீர்!

புதிய வாக்காளர் சேர்ப்பு: ஜனநாயகக் கடமை ஆற்றுவீர்!

#வைகோ அறிக்கை

வரவிருக்கின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு அளிக்க வசதியாக, பதினெட்டு வயது நிறைவு அடைந்தவர்கள், அக்டோபர் 1 முதல் 31 வரை தங் களை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதன்மூலம், பதினெட்டு வயது நிறைவு அடைந்து, இதுவரை வாக்காளர்களாக தங்களைப் பதிவுசெய்துகொள்ளாதவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டுப் போய்விட்டது; தமது பெயர் தவறாக பதிவாகி உள்ளது என வருந்துவோர், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவும், திருத்தங் களை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Sunday, June 9, 2013

ம.தி.மு.க. இயங்குவதற்கு நிதி உதவி வழங்குங்கள்: வைகோ வேண்டுகோள்

தமிழக அரசியலில், எத்தனையோ தடைகள், இருட்டடிப்புகளை எதிர்கொண்டு, இருபது ஆண்டுகளாக,தமிழகத்தின் வாழ் வாதாரங்களைப் பாதுகாக்கப் போரா டி வரும் நாங்கள், இமயம் நிகர்த்த சாதனைகளைச் செய்து இருக்கின்றோம். திராவிட இயக்கத்தின் இலட்சியப் பரிணாமமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது மறுமலர்ச்சி தி.மு.க. தமிழ்க் குலத்தை எங்கெல்லாம் துன்பம் தாக்குகின்றதோ, அதைத் தடுக்க, முனைமுகத்து முதற்சிப்பாயாகக் களத்தில் நிற்கின்றோம். முல்லைப்பெரியாறு அணை காக்க காவிரி, தென்பெண்ணை, பாலாறு உரிமை காக்க, கூடங்குளம் அணு உலையை அகற்ற நொறுங்கிக் கிடக்கும் விவசாயி களின் துயர் துடைக்க, சுற்றுச் சூழலை பாதுகாக்க, தமிழகத்தை நாசமாக்கி வரு கின்ற, மக்களின் வாழ்வைச் சீரழித்து வருகின்ற மது எனும் நச்சுச் சுழலில் இருந்து நம் தாயகத்தை மீட்க அறப்போர் நடத்தி வருகின்றோம்.