மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி சேரப் போவதில்லை என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (09.11.13 ) நடந்த #மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் #வைகோ தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் புதிய மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட ராஜாவை அறி முகம் செய்து வைத்து கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
மதிமுக எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கிற இயக்கம். வரப்போ கும் மக்களவைத் தேர்தலில் திமுக,அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவ தில்லை. எங்கள் இயக்கத்தின் கொள்கைகள், லட்சியங்கள் உள்ளவர்களோடு தான் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இரு பெரிய கட்சிகளிடமும் பணம் இருப்பதால் அவர்கள் தான் வெற்றி பெறுவர் என்ற எண்ணத்தை வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதிமுக உடைத்துக் காட்டும்.