சங்கொலி தலையங்கம்
உலக மயம், தனியார் மயம், தாராளமயம் நாட்டின் அனைத்து சமூக, அரசியல்
மற்றும் பொருளாதாரத் துறைகளில் சீரழிவை கொண்டுவந்தது போலவே, கல் வித்துறையிலும் புகுந்து சிதைத்து வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போல கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவையும் இன்றியமையாதன ஆகும். ஆனால், இவை இன்று அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு பெரும்பாலும் தனியார் கைகளுக்கு போய் விட்டன. அரசியல் சட்டத்தின் பிரிவு 21 அடிப்படை உரிமைகள் குறித்து பேசு கிறது. இதில் சட்டப் பிரிவு 21ஏ என்பது அரசியல் சட்டத்தின் 86 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, 2002 ஆம் ஆண்டில், கல்வியும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது.
இதன்படி,நாட்டிலுள்ள 6வயது முதல் 14வயது வரை உள்ள குழந்தைகள் அனை வருக்கும் அடிப்படைக் கல்வி புகட்டுவது என்பது சட்டப்பூர்வமாக்கப் பட்டது. பின்னர் 2009 ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டு, 2010 ஏப்ரல் 1 ஆம் நாள் நடை முறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம், (Right to Education Act-RTE) குழந்தை களின் கல்வி உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கு சில வழிகாட்டுதல் களை அளித்தது. இதன் மூலம் தனியார் மய கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்ட துடன், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இச்சட்டம் தெரிவிக்கிறது.