முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:
பகுதி 2 தொடர்ச்சி ....
எதிர்காலம் ஒளிமயமாகக் காட்சி அளிக்கிறது...
தமிழக மக்கள் நமக்கு வெற்றியைத் தருவார்கள்!
2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டு காலத்தில் இந் தியத் தலைமை அமைச்சரிடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன் வைத்த கோரிக்கைகள் பல.
உலகத்தில் எந்த மூலையில் தமிழனுக்குத் துன்பம் என்றாலும், நாங்கள் துடிக் கிறோம்.அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய கரபியன் கடலில் உள்ள
கிராண்ட் கேமன் தீவில் 530 தமிழர்கள் சிக்கிக்கொண்டார்கள். ஒரு புயல் வீசி
கடல் சூழ்ந்துகொண்ட நிலையில், மற்ற நாடுகளில் இருந்து எல்லோரும் மீட் டுக்கொண்டு போய்விட்டார்கள்.