Showing posts with label விவசாய அணி. Show all posts
Showing posts with label விவசாய அணி. Show all posts

Thursday, December 5, 2013

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் தாமதம்

தமிழகத்தில் கடந்தாண்டு கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ததற்கு காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதில் தமிழக அரசு மிகவும் காலதாமதம் செய்து வரு வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

கடந்த ஆண்டு தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து பயிர்களும் கருகியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தனர். 

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு உழுந்து பயிருக்கு ரூ.36 பாசிப்பயறுக்கு ரூ.34ம், கம்பு பயிருக்கு ரூ.65ம், மக்காச்சோளத்திற்கு ரூ.137ம், பருத்திக்கு ரூ.356ம், எண்ணை வித்துக்களுக்கு ரூ.79ம், சோளத்திற்கு ரூ.48ம் என அனைத்து வகை பயிர்களுக்கும் ஏற்ற வகையில் பயிர் காப்பீடு பீரிமியம் தொகை செலுத்தினர். ஆனால் கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்தற் கான காப்பீட்டு தொகையை வழங்க அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத் தும் இதுவரை வழங்கப்படவில்லை. 
 

Sunday, October 20, 2013

விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குக-மதிமுக

கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை யை  அரசு உடனடியாக வழங்கவேண்டும் என #மதிமுக சார்பில் வலியுறுத்தல்  

இதுகுறித்து மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் வரதராஜன் கூறியதாவது,

Monday, September 30, 2013

விவசாய தேவைக்கு மழை நீர் சேகரிக்க பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்துக

ஊராட்சிகள்  தோறும் விவசாய தேவைக்கு மழை நீர் சேகரிக்க புதிய  ண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை விரைவு படுத்த இயந்திரங்கள் மூலம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென #மதிமுக விவசாய அணி வலியுறுத்தல்.

இது குறித்த மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர். தவிர கால்நடைகள் மற்றும் மக்கள் குடிநீருக்காக பல மைல் தொலைவு செல்லவேண்டிய நிலை ஏற் பட்டது. 

Sunday, September 8, 2013

பள்ளிக்கு வராத ஆசிரியர்

#மதிமுக விவசாயிகள் அணி மாநில துணைச் செயலாளர் வரதராஜன் மீது பொய் புகார் கூறிய தலைமை ஆசிரியர் , விசாரணையில் உண்மை வெளிப் பட்டு தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து தொடக்க கல்வி அலுவலர் உத்தர விட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அயன்வடமலாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பள்ளியில் அயன்வடமலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர்.

Sunday, July 14, 2013

பனை தொழிலாளுக்கு மறுவாழ்வு தருக

ஆட்சியாளரிடம் மனு கொடுத்த #மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் 

பனை ஓலையான பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கி இத்தொழிலாளர் களுக்கு மறுவாழ்வு தர வேண்டுமென மதிமுக கோரிக்கை விடுத் துள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகையும், கருகி வரும் இயற்கை வளங்களும் மனித சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து இன்றைய தினம் பல கேள்விகளை எழுப்புகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். 

Tuesday, July 9, 2013

எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -அரசு மெத்தனம்

ஆட்சியாளரிடம் மனு கொடுத்த #மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் 

பள்ளிகளில் சத்துணவு சமைக்க தேவைப்படும் மசாலா பொருட்கள், விறகு, காய்கனிகளுக்கு முன் மானியம் வழங்க வேண்டுமென மதிமுக.,மாநில விவசாய அணி வலியுறுத்தியுள்ளனர்.

அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் 1982ம் வருடம் மதிய உணவு திட்டத்தின் பெயரை மாற்றி சத்துணவு திட்டம் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரிட்டார். வாரத்தில் 5 நாட்கள் உணவுடன் முட்டையை அரசு மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது.