Showing posts with label மத்திய அரசு. Show all posts
Showing posts with label மத்திய அரசு. Show all posts

Sunday, November 30, 2014

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறை -வைகோ கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் #வைகோ கண்டனம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 48 ஆண்டுகால கல்வி முறையை மாற்றி அமைத்து புதிய கல்வி கொள்கையை புகுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயற்படும் பாரதிய ஷிக்ஸான் மண்டல் (BMS) என்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

Thursday, September 26, 2013

உழவர்களுக்குப் பாதக மசோதா!

உணவுப் பாதுகாப்பு மசோதா ,உழவர்களுக்குப் பாதக மசோதா!

நீண்ட நெடிய சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மசோதா,சோனியா காந்தியின் கனவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி இந்தியாவில் உணவு இல்லாமல் யாரும் பட்டினி கிடக்கும் நிலை நீக்கப்
பட்டுவிட்டது. 80 கோடி மக்களுக்கு குறைந்த விலையில் அதாவது அரிசி கிலோ ரூ 3 க்கும், கோதுமை கிலோ ரூ.2 க்கும் கிடைக்கும். கிராமப்புறங்களில் 67 சதவிகித மக்களும், நகர்ப்புறங்களில் 50 சதவிகித மக்களும் பயன்பெறுவர்.
மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் அமுலில் இருக்கும். இதற்கு ஆகும்
மானியம் ஆண்டு ஒன்றுக்கு 1,25,000 கோடி ரூபாய்.

Monday, August 26, 2013

குற்றவாளிக் கூண்டில் காங்கிரசு ஆட்சி!

பெருந்தலைவர் காமராசரை காங்கிரசு கட்சி மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட் டது. அந்தக் கட்சியின் நூற்றாண்டு விழா மலரிலேயே பட்டாபி சீத்தாராமய்யா படத்தை காமராசர் படமாக வெளியிடும் அளவுக்கு மறதி நோய் அவர்களுக்கு முற்றிப்போய்விட்டது.அகில இந்திய அரசியலையே ஆட்டிப் படைத்த அந்தத் தலைவரின் நூற்றாண்டு விழாவைக்கூட அவர்கள் நாடு முழுக்க சிறப்போடு கொண்டாட வில்லை. ஆனால், கடந்த மாதம் 15 ஆம் நாளில் அவரது பிறந்த நாளை நாடு முழுக்க அவரது உருவப்படங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டி தேசிய திலகங்கள் விழா எடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தின!
வேறொன்று மில்லை, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா? வாக்கு வேட்டைக்கு “காமராசர் முகமூடி” தேவை அல்லவா? எனவேதான் இந்த திடீர் கூத்து!

Tuesday, August 20, 2013

உ.பா.ச மக்களுக்கா? நிறுவனங்களுக்கா?

உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம்;

மக்களுக்கா? வர்த்தக கார்பரேட் நிறுவனங்களுக்கா?

என் பெயரே “சைக்கிள்” சித்தார்த்தன்.நான் சைக்கிளிலேயே சென்னையை வலம் வந்ததால் எனது தோழர்கள், நண்பர்கள் எனக்கு சூட்டிய பட்டம் இந்த
“சைக்கிள்”. சமீபத்தில்தான் 25 ஆண்டு பழசான எனது பிரியமான ஹெர்குலிஸ்
சைக்கிளை எவரோ “தள்ளிக்” கொண்டு போய்விட்டார்கள். அன்றைய நாளில்
நான் அடைந்த துக்கம் எனக்குத்தான் தெரியும்.

நல்லவேளை. நான் 25 ஆண்டுகளாக சைக்கிள் வைத்திருந்தது திட்டக்கமிஷ னுக்குத் தெரியாது. தெரிந்து இருந்தால் எனது குடும்பத்தை வறுமைக் கோட் டிற்கு கீழானவர் என்கிற தகுதியிலிருந்து “பொதுவானவர்” பட்டியலில் சேர்த்து எமது குடும்ப பொதுவிநியோக அட்டையைப் பறித்து இருப்பார்கள்.

Sunday, June 16, 2013

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- வைகோ அறிக்கை

மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல் விலையை இந்த மாதத்தில் இரண் டாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.54 உயர்த்தி இருக்கின்றது. ஜூன் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இருப்பதால், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக எண் ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை அதிரிக்கப்படும் போது, சர்வ தேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், இந்திய ரூபாய் மதிப்புச் சரிவையும் காரணம் காட்டுவது மத்திய அரசின் வாடிக்கை ஆகிவிட்டது.