Showing posts with label அறிக்கை. Show all posts
Showing posts with label அறிக்கை. Show all posts

Sunday, November 30, 2014

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறை -வைகோ கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் #வைகோ கண்டனம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 48 ஆண்டுகால கல்வி முறையை மாற்றி அமைத்து புதிய கல்வி கொள்கையை புகுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயற்படும் பாரதிய ஷிக்ஸான் மண்டல் (BMS) என்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

Friday, September 27, 2013

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகளின் கோரிக்கைகளை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!

தமிழக அரசுக்கு #வைகோ கோரிக்கை

தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்றவர்கள் ஆசிரியர் களாக தகுதி பெற குறைந்தபட்சமாக 40 சதவிகித மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்.தமிழக அரசின் பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல் லூரி மாணவர்களும், பட்டதாரிகளும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

Monday, June 10, 2013

இலங்கை இராணுவத்துக்கு, தமிழ்நாட்டில் பயிற்சி! மத்திய அரசின் பச்சை துரோகம் - வைகோ கண்டனம்

சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப் படுகொலையால், இரத்தம் கசியும் தமிழர்களின் நெஞ்சில் காங்கிஸ்தலைமையிலான இந்திய அரசு மேலும் ஒரு சூட்டுக்கோலை திணித்துள்ளது. தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள
இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும்.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு தன் இராணுவத்தை ஏவி நடத்திய கோரமான கொலைக் குற்றத்திற்கு இந்திய அரசும் உடந்தையாகச் செயல்பட்ட கூட்டுக் குற்றவாளி ஆகும்.

Friday, May 3, 2013

நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும்!-வைகோ

நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும்!

வைகோ அறிக்கை

திருச்சி மாவட்டம் - திருவெறும்பூர் வட்டம் - சூரியூர், காந்தலூர், கும்பகுடி ஊராட்சிப் பகுதிகள் மானாவரி மற்றும் கிணறு இறவை பாசனப்பகுதிகளாகும். இதில் சூரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்து அருகில் எல்.ஏ. பாட்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் (L.A.Bottlers pvt.ltd)நிறுவனமும், டி.பி.எஸ். மின ரல் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ளன. 

இந்த இரண்டு நிறுவனங்களும் ஆறு இராட்சச ஆழ்குழாய்களை அமைத்து நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன. இத்தண்ணீர் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனத்தின் குளிர்பானத் தயாரிப் பிற்காகப் பயன்படுத்தப்பட்டு ஐம்பது லட்சம் லிட்டர் குளிர்பான உற்பத்தி நடை பெற்று வருகின்றது. 

Tuesday, April 30, 2013

சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன் வைகோ அறிக்கை

வெறுப்பையும், வேற்றுமையையும் மனதில் அகற்றி,
சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காக்க
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்

வைகோ அறிக்கை

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி மலரவும், அவர்கள் வாழ்வில் உயரவும், தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் கால மெல்லாம் அறவழியில் போராடி, மகத்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தில் வட தமிழ்நாடு பெரும் பங்கு வகித்து வந்துள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தைத் தந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் காட்டிய சமூக நீதிப் பாதையைத் தமிழகம் ஏற்றுக்கொண்டதனால், தியாகச் சுடர் காம ராஜர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த முயற்சிகளால், சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தத்தைக் கண்டது. அத்தகைய பெருமைக் குரிய தமிழகத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும், வர்ணாசிரமத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த தலித் சமூக மக்களும் நேசமும் நட்பும் கொண்டு கரம் கோர்த்து வாழும் நிலை மேலும் மேலும் வளர வேண்டும் என்று ஏங்கி இருந்தேன்.