Saturday, November 30, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 6

ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மேலும்
விலை உயர்வா?

நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில், #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 11-03-2010 அன்று ஆற்றிய உரை:

மண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளித் ததற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வும் எனது சார்பாகவும் நன்றி.

உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைந்துள்ளது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.உணவு உற்பத்தியைப் பெருக்க வேளாண்மைக்கு வழங்கப்பட்டுள்ள சிறு சிறு சலுகைகள் வெறும் கண் துடைப்பே.விவசாயிகள் சுமையை முழுவதுமாக தீர்த்து உற்பத்தியை உயர்த்த இது பயன்படாது. இது வெறும் ஆறுதல் வார்த்தைகளே. விவசாயத்துக்கு பயிரிடும் நிலப்பரப்பை அதி கப்படுத்த எந்த ஒரு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை வைகோ வரவேற்பது ஏன்?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை பாதுகாப்பை உறுதிசெய்திட வும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட கஸ்தூரி
ரங்கன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து முற் றிலும் சரியானதாகும்.கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை தலைவர் வைகோ வரவேற்றதின் அடிப்படை என்ன? என்பதை அறியும் முன், மேற்குத் தொடர்ச்சி
மலைப் பகுதி குறித்தும், உயர் பாதுகாப்புப் பகுதியாக இப்பகுதி அறிவிக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும்மத்திய அரசு அமைத்த குழுவின் விபரங்
களையும் காண்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி, மகாரா ஷ்டிரா, கோவா,கர்நாடகா, கேரளா, தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் சுமார் 1,500 கி.மீ. தூரம் நீண்டு கிடக்கிறது.அடர்ந்த வனப்பகுதியாகவும்,தாவரங்கள் நிறைந்த பகுதி யாகவும் பறவைகள் மற்றும் புலி,யானை போன்ற விலங்கு களின் புகலிடமாகவும் இப்பகுதி விளங்குகிறது. இயற்கை பாதுகாப்புக்கும்,சுற் றுச் சூழலுக்கும் மிகவும் இன்றியமையாத பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி இருக்கிறது.

தமிழர்களின் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா!

தமிழர் இதயங்களை வெற்றிகண்ட அண்ணா என்று விருதுநகர் மாநாட்டில் எழுத்தாளர் மதுரா உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

தெள்ளமுதாய், தெள்ளமுதின் மேலான முத்துக் கனியே என் முத்தமிழே வணக்கம். குஞ்சரமில்லை,குடையில்லை, படையில்லை, பதாகையில்லை
ஆயினும் கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கோ வைகோ.

இனமான தலைவர் வைகோ வின் கண் அசைவில் நடைபெறுகின்ற அண்ணா வின் பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு தலைமை தாங்குகின்ற என் இதயத்திற்கு
இனிய இமயம் ஜெபராஜ் அவர்களே, நெஞ்சிலே பாசம் வைத்து விழிவழி நேசம் காட்டுகிற என் அண்ணன் தாமிரபரணி மைந்தன் வைகோ அவர்களே, என்
இதயத்திற்கு இனியவர்களே வணக்கம்.

Friday, November 29, 2013

விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்! -வைகோ

காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்கு,பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்! விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு!

#வைகோ அறிக்கை

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநிலம் முரண்டு பிடித்ததாலும், காவிரி பாசனப் பகுதிகளில் உரிய நேரத்தில் குறுவை, சம்பா பயிர் சாகுபடி தொடங்க முடியவில்லை. 

6 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பயிர்களும், 14 இலட்சம் ஏக்கம் சம்பா சாகு படி பயிர்களும் 90 சதவீதம் காப்பாற்ற முடியாமல் கருகிப் போயின. விவசாயி களுக்கு இழப்பு ஈடு வழங்குவதற்காக, தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரி களை கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு காவிரி பாசனப் பகுதிகளில் ஆய்வு நடத்தியது. மத்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட குழுவினரும், பாதிக் கப்பட்ட பயிர்களை நேரில் பார்த்து சேதத்தை மதிப்பிட்டுச் சென்றனர். 

Thursday, November 28, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 1

காமன்வெல்த் அமைப்போடு உலகம் நின்றுவிடவில்லை. ஈழத்தமிழர் களுக்கு நீதி கிடைக்கும் என்று சென்னையில் நடந்த #மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட் டில் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர்களின், இரண்டாவது மாநில மாநாட்டில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன். கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர், ஆருயிர்ச் சகோதரர், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்கள் தலைமை ஏற்று இருக்கின்றார்கள்.

2002 ஆம் ஆண்டு,அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற தேவநேயப்
பாவாணர் நூற்றாண்டு விழாவில் உரை ஆற்றி விட்டுத் தமிழகம் திரும்பிய போது,சென்னை விமான நிலையத்தில்,பொடா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன். அந்த இரவில், அங்கிருந்தே நேரடியாக மதுரைக்குக்
கொண்டு சென்று, நடுநிசியில் நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று
ஆஜர்படுத்தவும், அவர் நீதிமன்றக் காவலுக்கு ஆணை பிறப்பித்தார்.