Showing posts with label தீர்மானம். Show all posts
Showing posts with label தீர்மானம். Show all posts

Thursday, October 24, 2013

காமன்வெல்த் மாநாடு குறித்த சட்டசபைத் தீர்மானம்-வைகோ அறிக்கை

காமன்வெல்த் மாநாடு குறித்த சட்டசபைத் தீர்மானம், முழு மனநிறைவு தர வில்லை! #வைகோ அறிக்கை

காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைமைகளின் கூட்டம், இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால், இந்திய அரசு காமன்வெல்த் செயலா ளர் நாயகம் கமலேஷ் சர்மா எனும் இந்தியரைக் கொண்டு, மிகத் தீவிரமான வேலைகளில் ஈடுபட்டதால், கொடூரமான தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு நிர்வகிக்கும் இலங்கை நாட்டில் அம்மாநாடு, வருகின்ற நவம்பர் 17,18 தேதிகளில் நடைபெற உள்ளது.

ஈழத் தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளியான,காங்கிரஸ் தலை மை தாங்கும் இந்திய அரசு, இனக்கொலை குறித்த நீதி விசாரணை வரவிடா மல் தடுப்பதற்காக, இந்த வஞ்சகமான சதிச்செயலில் ஈடுபட்டது. ஏனெனில், எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடக்கிறதோ, அந்தநாட்டின் அதிபரே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பார். எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த மாபாதகன் மகிந்த ராஜபக்சேவை, காமன் வெல்த் அமைப்புக்குத் தலைவராக்கி, தமிழ் இனக்கொலைக் கொடுமையை, விசாரணைக்கு வரவிடாமல் குழிதோண்டிப் புதைப்பதுதான், இந்திய இலங்கை அரசுகளின், கூட்டுச் சதி நோக்கம் ஆகும்.

Saturday, June 22, 2013

மதிமுக இளைஞர் அணி தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி ஆலோச னைக் கூட்டம், 22.06.2013 அன்று, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. கழக இளைஞர் அணிச் செயலாளர், பொறியாளர் வே.ஈஸ்வரன் அவர்கள் தலை மை வகித்தார். இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

Saturday, April 13, 2013

மூன்று தமிழர் உயிர்களைக் காப்பாற்றுங்கள்! -மதிமுக தீர்மானம்

உயர்நிலைக்குழு - மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர் கள்,ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (13.04.2013 சனிக்கிழமை)காலை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் எண். 1

மூன்று தமிழர் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!
முதலமைச்சருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. வேண்டுகோள்

Tuesday, March 13, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 13 & 14

தீர்மானம் எண் 13

மது ஒழிப்பு!

அறிஞர் அண்ணா ஆட்சிக்காலம் வரையிலும், மது அரக்கனுக்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை. ஆனால் இன்றைக்கு, மாணவப் பருவத்திலேயே குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்ற பெருங்கேடு தமிழகத்தைச் சூழ்ந்து உள்ளது. ஒரு தலைமுறையே பாழாகிக் கொண்டு இருக்கின்றது.


Sunday, March 11, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 11 & 12

தீர்மானம் எண் 11

பரமக்குடி துப்பாக்கிச் சூடு
நடவடிக்கை தேவை

2011 செப்டம்பர் 11 ஆம் நாளன்று, தமிழகக் காவல்துறையினர், பரமக்குடியிலும்,  மதுரை சிந்தாமணியிலும் அக்கிரமமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


Saturday, March 10, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 9 & 10

தீர்மானம் எண் 9

ஆசிரியர் பணியிடங்களைப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புக!

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 25,000 பி.எட்., பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து ஆசிரியர் பணிக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தங்களின் பட்டப் படிப்புக்காக மூதாதையர்களின் நிலங்களையும், உடமைகளையும் விற்றும், கடன் வாங்கியும் பல சிரமங்களுக்கு மத்தியில், ஆசிரியர் பயிற்சியை முடித்து உள்ளனர்.

Wednesday, March 7, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 7 & 8

தீர்மானம் எண் 7

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
கச்சத்தீவு மீட்பே தீர்வு

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து நடத்துகின்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், தமிழக மீனவர்கள் பலியாவதும், காயம் அடைந்து உயிருக்குப் போராடுவதும், கொடிய சித்திரவதைக்கு ஆளாவதும், உயிர் உடைமைகளை இழப்பதும் வாடிக்கையாகி விட்டன.

இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த, இந்திய அரசும், கடலோரக் காவல்படையும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசிடம் இருந்து இழப்பு ஈட்டுத் தொகையும்
பெற்றுத் தரவும் இல்லை; உரிய முறையில் எச்சரிக்கவும் இல்லை.

Monday, March 5, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 6

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2500

கடந்த ஆட்சியின்போது, ஒரு டன் கரும்புக்கு விலை ரூ 2000 வழங்கப்பட்டது. அது கட்டுப்படியாகாது; ரூ 3000 கொடுக்க வேண்டும் என்று கோரி, இன்றைய ஆளும் கட்சியின் சார்பில், சர்க்கரை ஆலைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2500 வழங்குவோம் அறிவித்தார்கள். ஆனால், இப்போது, ரூ 2100 மட்டுமே அறிவித்து இருக்கின்றார்கள்.

Sunday, March 4, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 5

அமராவதி, பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில் கேரளம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக!

அமராவதி ஆற்றின் உபநதியான பாம்பாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கும், பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில், முக்காலியில் ஒரு புதிய அணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.

பாம்பாற்றின் குறுக்கே, 170 மீட்டர் நீளம்; 30 மீட்டர் உயரம் கொண்ட அணை கட்டுவதற்கு, 230 கோடியில் திட்டம் தயாரித்து உள்ளதாகவும், அதற்காக 110 ஏக்கர் நிலத்தைக் கையப்படுத்தி விட்டதாகவும், 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, February 29, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 4

மின் வெட்டுக்குக் கண்டனம்;

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
உண்மையில், தமிழ்நாடு மின்சார வாரியம், பலத்த நிர்வாகச் சீர்கேட்டுக்கு உள்ளாகி இருக்கின்றது.

தமிழகத்தில் மின் பகிர்மானத்தின்போது ஏற்படுகின்ற மின் இழப்பு 18 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.மின் திருட்டு வெகுவாக நடைபெறுகிறது;
மின்வாரியத்துக்கான பொருள்களை வாங்குவதில் பெருமளவில் ஊழல் தாண்டவமாடுகிறது;

Saturday, February 25, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 2

நதிநீர் நாட்டு உடைமை!



மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிநீரை நாட்டு உடைமை ஆக்கி, தேசிய நதிகளாக அறிவிப்பதற்கு இந்திய அரசு சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தீபகற்ப நதிகளான தென்னக நதிகளை இணைக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்தார்.

Wednesday, February 22, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 1

முல்லைப்பெரியாறு: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!


தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, 1895ம் ஆண்டு கட்டப்பட்டு, சென்னை மாகாண அரசுக்கும் திருவிதாங்கூர் கொச்சி அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, 999 ஆண்டுகள் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி உரிமை உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது என்று பொய்யான காரணம் காட்டி, கேரள அரசு நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைத்துவிட்டது. இதனால் தென் மாவட்டங்களில் 2 இலட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயிரிட முடியாமல் பேரிழப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.