Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Showing posts with label திருநெல்வேலி. Show all posts

Wednesday, December 11, 2013

ஆதார் அட்டையின்றி மாணவர்கள் அவதி -மதிமுக புகார்

ஆதார் அட்டை எண் கேட்டு ஆசிரியர்கள் நெருக்கடி தருவதால் மாணவர்கள் அவதிப்படுவதாக #மதிமுக புகார் 

திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பேரூர் மதிமுக கிளைச் செயலர் எம். முருகன் விடுத்துள்ள அறிக்கை:

சங்கர்நகர் பேரூராட்சிக்குள் பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களில் பெரும் பகுதியினர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். பலர் வெளியூர்களில் பணிபுரிவதால் குடும்பத் தலைவர்களே புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். 

Tuesday, December 3, 2013

தென்காசி மதிமுக சார்பில் கறுப்பு கொடி போராட்டம்

தென்காசி நகர #மதிமுக செயலாளரும், ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவ ருமான என். வெங்கடேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கை

வளர்ந்து வரும் நகரமான தென்காசிக்கு ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 மாதங்களுக் கு முன்பே முன்பதிவு முடிந்து விடுகிறது. எனவே கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும். 

Wednesday, November 6, 2013

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-மதிமுக ஆதரவு

தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-#மதிமுக ஆதரவு 

தென்காசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 27 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவ திப்பட்டனர்.

சுமார் 2 ஆண்டுகள் கழித்து சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. கனரக வாக னங் கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக மாற்றிவிடப்பட்டன. இலகுரக வாக னங்கள் சர்வீஸ் ரோட்டில் சென்று வருகின்றன. ஆமை வேகத்தில் நடை பெற் ற மேம்பாலப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது.மேம்பாலப்பணி நிறைவு பெற்றதால் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத்திறக்கப் படும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

Tuesday, July 16, 2013

பேரழிவு அபாயமான கூடங்குளம்

தென்தமிழ் நாட்டுக்கு பேரழிவு அபாயமான கூடங்குளம் அணுஉலை
மத்திய அரசின் வஞ்சக ஏமாற்று வேலை!

#வைகோ அறிக்கை

கூடங்குளம் அணுஉலையை அகற்றக்கோரி, சுதந்திர இந்தியாவில் இதுவரை எங்கும் நடைபெற்றிடாத வீரம் செறிந்த அறவழிப்போராட்டத்தை, 700 நாட்க ளாகத் தொடர்ந்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், பொதுமக்க ளும், குறிப்பாக மீனவப் பெருமக்களும், இடிந்தகரையை அறப்போர்க்கள மாக் கி நடத்தி வருகின்றனர்.

Wednesday, June 19, 2013

தாமிரபரணியைக் காப்போம்!

பாண்டி நாடே பழம் பதி, ‘ஆறில்லா ஊருக்கு அழகில்லை’ என்பதை மெய்ப்பிக் கும் வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய் யும் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி.

‘தாமிரபரணி’ என்று மிகச் சாதாரணமாக இன்று வழங்கி வருகிறோம். இப்பெய ரின் வரலாற்றைச் சிறிது நோக்குவோம்.

மெகஸ்தனிஸ்

செல்யூகஸ் நிகேடர் அரசால் சந்திர குப்த மெளரியர் பேரரசரின் அவைக்கு கி.மு.302 இல் வந்தவர் மெகஸ்தனிஸ். ‘ தாப்ரபனே’, ‘த்வீபராவண’என்று அவர்
தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (வி.எஸ்.வி. ராகவன், மெகஸ்தனிஸ் கி.மு. 302 - 296) 1978, பக். 81, 104, 260, 275.

Thursday, May 2, 2013

நெல்லையில் மதிமுகவின் மே தின கூட்டம்

நேற்று மாலை 7 மணியளவில் பாளை ஜவகர் மைதானத்தில் (திருநெல்வேலி)
ம.தி.மு.க.மாநகர் மாவட்டம்  சார்பாகமே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது .

மக்கள்தலைவர் வைகோ முழங்குகினார்

அவர் மேலும் பேசியதாவது:

இன்று தமிழகத்தை நாலாபுறமும் ஆபத்து சூழந்துள்ளது. அண்டை மாநிலங் கள் மட்டுமின்றி மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிராக துரோகம் செய்து வரு கிறது. மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அந்த மசோதா வால் இந்திய ஒருமைப்பாடு பாதிக்கப்படும். மத்திய அரசின் நிலைப்பாடு இப்படியே நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு நீடிக்காது.