Sunday, October 6, 2013

மறுமலர்ச்சி பயணம் தூத்துக்குடி மாவட்டம் -2–வது கட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2–வது கட்டமாக #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ மறுமலர்ச்சி பயணத்தை நாளை (07.10.13) தொடங்குகிறார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் விவ சாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அண்ணாவின் கனவை நன வாக்குவதற்காகவும், ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடவும், தமிழக மீனவர்களின் நலனுக்காகவும், மதுவை அடியோடு ஒழிப்பதற்காகவும் மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு உள்ளார்.

மக்களின் ஆவேச அலை காங்கிரஸின் கடைசி நாட்கள்!

மக்களின் ஆவேச அலை காங்கிரஸின் கடைசி நாட்கள்!

சங்கொலி தலையங்கம் 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த லில்லிதாமஸ் என்னும் மூத்த பெண் வழக்கறிஞ ரும், லோக்பிரகாரி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.என்.சுக்லா என் பவரும் 2005 ஆம் ஆண்டில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்கள். “இந்திய அரசியல் குற்றமயமாகி வருகிறது; நாடாளுமன்றத்திலும் சட்டமன் றத்திலும் குற்றப்பின்னணி உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண் டே வருகிறது. இதைத் தவிர்ப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 இன் உட்பிரிவு 4 ஐ ரத்து செய்ய வேண்டும்” இதுதான் பொதுநல வழக் கின் சாரம்சம். இந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.

Saturday, October 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 22

நாள்:-03.01.2008

இலங்கைக்கு இந்திய ஆதரவு இழிவானது!

ஈழத்தமிழரின் வேதனைக் குரல்,இந்திய அரசின் காதுகளில் விழாதா?


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களின் விவரிக்க முடியாத துன்பங்களையும்,
துயரங்களையும் எண்ணி, உலகெங்கும் வாழும் தமிழர்களும்,நானும் படுகின்ற வேதனையையும், கவலையையும், தங்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில் 2008 ஆம் ஆண்டு உதயமாகும் இந்நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

வருகின்ற பிப்ரவரி 4, 2008 அன்று, கொழும்பில் இலங்கை அரசு கொண்டாட
இருக்கும் தேசிய சுதந்திர தின விழாவில், தாங்களும் பங்கு ஏற்க இருப்பதாகச்
செய்தித்தாள்களில் வந்த செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 4

ஒரு நாள் தெற்குக்கடை பஜாரில் அவருக்கு வேண்டிய நண்பர் அருணாசலத் தின் பழைய புத்தகக் கடையில் போய் உட்கார்ந்து இருக்கிறார் திவான். அப் போது அவரது கண்ணில்படுகிறது உத்தம பாளையத்தில் இருந்து 1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ‘பாரதி’ என்கின்ற மாத இதழ். அதைப் புரட்டுகிறார்.அந்தப்பத்திரிகையில் இவருக்கு ஒரு குறிப்பு கிடைக்கிறது.அதில் வ.உ.சி. எழுதிய, ‘அழகும் ஆரோக்கியமும்’ என்கின்ற மூன்று பகுதி, பாரதி ஏட் டில் வெளியிடப் பட்டு இருக்கிறது. இவருக்கு மகிழ்ச்சி. மேலும் தேடுகிறார். இரண்டாவது பகுதியும் மூன்றாவது பகுதியும் அவருக்குக்கிடைக்கிறது.முதல் பகுதி கிடைக்கவில்லை.

இவரது நண்பர் முகமது அலியின் மூலமாக முயற்சிக்கிறார். உத்தமபாளையத் தில், முகமது இஸ்மாயில் என்பவரது வீட்டில், பாரதி இதழ்கள் பைண்ட் வால் யூம்களாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இவர் உத்தமபாளையத்துக்குச் செல்கிறார். முதலில் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டு அங்கே சென்று அவரது இல்லத்தில் இருக்கின்ற நூலகத்தில் தேடிப் பார்த்தால், குறிப்பு இருக் கிறதே தவிர, அந்த வால்யூம்கள் அங்கே இல்லை.

மறுமலர்ச்சி பயணம் ,தூத்துக்குடி மாவட்டம்-வைகோ உரை

மாற்றத்தைத் தருகின்ற வலிமையோடு,மக்களைச்சந்திக்கின்றது மறுமலர்ச்சி தி.மு.கழகம் தமிழ்நாட்டு வாக்காளர்களே,நேர்மையான அரசியலை ஊக்கு விக்க, ஆதரவு தாரீர்!

மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைத்து மக்கள் தலைவர் #வைகோ வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் - செய்துங்கநல்லூரில் 30.09.13 அன்று,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத் தைத் தொடங்கினார்.நிகழ்ச்சியின்போது அவர் ஆற்றிய உரையில் இருந்து.....