Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Tuesday, December 17, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 36

நாள்:-10.02.2009

சென்னை-அமைந்தகரை,புல்லா நிழற்சாலையில்,ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக் கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும்பொதுக்கூட்டத்தில், #வைகோ ஆற்றிய உரை 

ஈழத்தமிழர் படுகொலை...விடுதலைப் புலிகளை அழித்துவிட காங்கிரஸ் வகுத் த சதித்திட்டம்! சென்னை கண்டனப் பொதுக் கூட்டத்தில் வைகோ பகிரங்கக் குற்றச்சாட்டு!


இந்த மேடையின் வலதுபுறத்தில் உயிராயுதமாக, நம்முடைய நெஞ்சங்களில்
கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுவிட்ட முத்துக்குமாரின் திரு உருவப்படத்துக்கு,
மலர்களைத் தூவி வீரவணக்கம் செலுத்திவிட்டு, இந்த நிகழ் ச்சியைத்தொடங் கினோம்.

ஜனவரி 31 ஆம் தேதி முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரையிலும், கொளத்தூ ரில் இருந்து மூலக்கொத்தளம் சுடுகாடு வரையிலும் சாலையின் இருமருங்கி லும், இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டு வந்தார்கள்.

Sunday, December 15, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 35

நாள்:-29.4.2009

ஈழத் தமிழர் பிரச்சனையில், இந்திய அரசின் துரோகங்களுக்கு, கருணா நிதிதான் கூட்டுப் பங்காளி!

இரண்டாம் உலகப் போரின்போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்க நாஜி கள் திட்டமிட்டுப் படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அதிபர் மகிந்த இராஜபக்ஷே, தமிழ் இனத்தையே கரு அறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக் கிறான். இந்தத் தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு,முழுக்க முழுக்க ஆயுத உதவி செய் தது இந்திய அரசுதான்.

1998ஆம் ஆண்டில், அன்றையப் பிரதமர் வாஜ்பாய அவர்கள், டெல்லியில் கூட் டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,‘இலங்கையில் தமிழ்  இனக் கொலை நடத் தும் சிங்கள அரசுக்கு, இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களைக் கொடுக்காது என்றும், ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது இல்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். 2004ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதைக் கடைப்பிடித்தது.

Thursday, December 12, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 34

நாள்:-27.4.2009

ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்! ஒபாமாவுக்கு #வைகோ வேண்டு கோள்

அமெரிக்க குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள், இன்று (17.5.2009) எழுதி உள்ள மின் அஞ்சல்:

அமெரிக்கக் குடியரசுத் தலைவர், மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு

வணக்கம்.

இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ் கின்ற பத்து கோடி தமிழர்கள் சார் பிலும், இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சே இலங்கைத்தீவில் வாழ் கின்ற தமிழர்களை இனப்படுகொலை செய்து வருவ தை, இரத்தம் கசியும் இதயத்தோடு தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது டன், இலங்கையில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி இந்த விண்ணப் பத்தைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

Tuesday, December 10, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 33

நாள்:-14.05.2009

இலங்கை இராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இருந்து ஈழத்தமிழர் களைக் காப்பாற்றுங்கள்!

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு #வைகோ வேண்டு கோள்

இலங்கையில் சாவின் விளிம்பில் உள்ள மூன்று இலட்சம் தமிழர்களையும்
முழுமையாக அழித்து ஒழிப்பதற்கு, முப்படைகளையும் தீவிரமாகப் பயன் படுத்தி வரும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரி, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இன்று (14.05.2009) மின் அஞ்சல் மற்றும் தொலை நகல் (ஃபேக்ஸ்) மூலமாக அவசர வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:

Thursday, December 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 32

நாள்:-29.4.2009

உடனடியாகத் தலையிட்டுத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

பாரக் ஒபாமாவுக்கு #வைகோ வேண்டுகோள்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று (29.4.2009) அனுப்பி உள்ள மின் அஞ்சல் :

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கையில் நடைபெறுகின்ற தமிழ்  இனப்படுகொலைத் தாக்குதல்களை,
கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகி றேன்.

Sunday, November 24, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 31

நாள்:-12.01.2009

ஈழத் தமிழர்கள் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கமுடியாத மனவேதனையுடன் இந்தக் கடிதத்தை உங்கள் உடனடிக் கவ னத்துக்கும், நடவடிக்கைக்கும் எழுதி உள்ளேன். இலங்கைத் தீவில்,இரத்த வெறி பிடித்த இனவாத சிங்கள அரசு, தமிழ்  இனத்தையே படுகொலைசெய்து பூண்டோடு அழிக்க, முப்படைகளையும் ஏவி ‘இன அழிப்பு’யுத்தம் நடத்துகிறது. விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரில், இந்த இனக்கொலையை நடத் துகிறது.

இன்றைக்கு 6 இலட்சம் ஈழத் தமிழர்கள் முல்லைத் தீவில் மரணப் பள்ளத்தாக் கில் தவிக்கின்றனர். இலங்கை இராணுவம் இடைவிடாமல் பீரங்கித் தாக்கு தலும், விமானக் குண்டு வீச்சும் நடத்துகிறது.பசுமை நிறைந்த ஈழத்து வயல் வெளிகளில், தமிழர்களின் குருதி வெள்ளமாகப் பாய்கிறது.

Monday, November 18, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 30

நாள்:-09.12.2008

தமிழக அரசியல் தலைவர்களை, ‘கோமாளிகள்’ என்ற இலங்கைத் தளபதி யைக் கண்டியுங்கள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சே கா, மிகுந்த ஆணவத்தோடும், திமிரோடும் தெரிவித்து இருக்கின்ற கருத்துகள், இலங்கை அரசின் அதிகாரபூர்வ இதழான ‘சண்டே அப்சர்வர்’, 2008 டிசம்பர் ஏழாம் நாளிட்ட இதழில் வெளியாகி இருப்பதை, மிகுந்த வேதனையோடு தங் களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

‘‘தமிழ் நாட்டு அரசியல் கோமாளிகள் சொல்லுகின்ற கருத்துகளை, காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிமடுக்காது; என வே, போர்நிறுத்தம் செய் யுமாறு இலங்கை அரசை இந்திய அரசு ஒருபோதும் கேட்டுக்கொள்ளாது’ என்று அவர் கொக்கரித்து உள்ளார்.

Tuesday, November 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 29

நாள்:-11.09.2008

இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் கேடு செய்யும் இந்திய அரசு!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தமிழர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் மேற்கொள்ளும் இலங் கை இராணுவத்தினருக்கு அக்கிரமமாக உதவி புரிந்து வரும் இந்திய இராணுவ அதிகாரிகள், தொழில்நுட்பப் பொறியாளர்கள் ஆகியோரது ஈடுபாட் டை, தாங் கொணாத் துயரத்தோடும், மனவேதனையோடும் நான் கண்டனம் செய்கி றேன். இராஜபக்சேயின் இனவாத அரசு, இலங்கைத் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்து தமிடிந இனத்தையே அழித்து ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Sunday, November 3, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 28

நாள்:-23.06.2008

இந்தியப் பிரதமர், இலங்கை செல்லக் கூடாது!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினை யில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் மண்ணின் மைந்தர்களா ன தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, இலங்கை அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்திய அரசின் வெளிப்படையான, ரக சியமான, நயவஞ்சகமான கண்டிக்கத்தக்க செயல்களால், அது மேலும் தெளி வாகத் தெரிய வருகிறது.

Tuesday, October 29, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 27

நாள்:-09.06.2008

இந்திய அரசு கைவிட்டது: தமிழக மீனவர்கள் அச்சம்!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொள்ளும் தொடர் தாக்கு தல்களையும், அராஜகத்தையும் மிகுந்த கவலையோடும், வேதனையோடும் மீண்டும் தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

Saturday, October 19, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 26

நாள்:-17.4.2008

பிரதமருடன் #வைகோ சந்திப்பு: நார்வே அமைதி மாநாடு குறித்து விளக்கம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தியப் பிரத மர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை இன்று (17.4.2008) அன்று மாலை 5.10 மணி முதல் 5.35 மணி வரையிலும்,தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித் தார்.

நார்வே தலைநகர் ஓஸ் லோவில் நடைபெற்ற, தெற்கு ஆசிய அமைதி மாநாடு குறித்தும், அதில் தாம் கலந்து கொண்டது குறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறி னார். கோரிக்கை விண்ணப்பம் ஒன்றையும் பிரதமரிடம் வழங்கினார்.

Thursday, October 17, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 25

நாள்:-18.03.2008

தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்கவில்லை! #வைகோ குற்றச் சாட்டு!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் இலங்கைத் தமிழர்களை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று செயல்பட்டு வருகின்ற இலங்கை அரசின் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதைக் குறிப் பிட் டு, எனது வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்தி, நான் தங்களுக்கு 9.12.2007, 18.12.2007,25.01.2008 ஆகிய நாள்களில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், தாங்கள் 5.03.2008 தேதியிட்டு எனக்கு எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

Monday, October 7, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 24

நாள்:-06.03.2008

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

மிகுந்த வேதனையுடனும், மனவருத்தத்துடனும் இந்தக் கடிதத்தைத் தங்க ளுக்கு எழுதி இருக்கிறேன்.

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொன்று வருகின்ற
நடவடிக்கைகள், அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

Sunday, October 6, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 23

நாள்:-12.01.2008

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச்சூடு!

#வைகோ கடும் கண்டனம்

சிங்கள இனவெறி அரசை எச்சரிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு வேண்டு கோள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று (12.01.08) காலை, இராமேஸ்வரம் அருகே இந்திய மீனவர்கள் மீது
இலங்கைக் கடற்படை நடத்திய மிருகத்தனமான துப்பாக்கிச்சூடு குறித்துத்
தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

Saturday, October 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 22

நாள்:-03.01.2008

இலங்கைக்கு இந்திய ஆதரவு இழிவானது!

ஈழத்தமிழரின் வேதனைக் குரல்,இந்திய அரசின் காதுகளில் விழாதா?


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களின் விவரிக்க முடியாத துன்பங்களையும்,
துயரங்களையும் எண்ணி, உலகெங்கும் வாழும் தமிழர்களும்,நானும் படுகின்ற வேதனையையும், கவலையையும், தங்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில் 2008 ஆம் ஆண்டு உதயமாகும் இந்நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

வருகின்ற பிப்ரவரி 4, 2008 அன்று, கொழும்பில் இலங்கை அரசு கொண்டாட
இருக்கும் தேசிய சுதந்திர தின விழாவில், தாங்களும் பங்கு ஏற்க இருப்பதாகச்
செய்தித்தாள்களில் வந்த செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.

Wednesday, October 2, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 21

நாள்:-18.12.2007

தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கைக்கு, இராணுவ உதவிகள் வழங்காதீர்!


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத்தீவில் தமிழர்களை இனப்படுகொலை செய்து வருகின்ற இலங்கை இனவெறி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற தாக்குதல்களில், அவர்களுக் கு உதவிடவும், ஆலோசனைகள் வழங்கிடவும், இந்திய இராணுவ நிபுணர் களையும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் இலங்கைக்கு அனுப்புவது என்று இந்திய அரசு முடிவு செய்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ள தால், அதுகுறித்து மிகுந்த வேதனையுடன், என்னுடைய கடுமையான கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, September 25, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 20

நாள்:-09.12.2007


இந்தியக் கடற்படைக்குக் கண்டனம்!


பிரதமருக்கு #வைகோ கடிதம்

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தியக் கடற்படையின் தமிடிநநாடு பொறுப்பாளர், கம்மோடர் வேன் ஹேல் டரென் கூறியதாக, டிசம்பர் 8 ஆம் நாள் நாளிதடிநகளில் வெளியாகி உள்ள, தேவை இல்லாத, உண்மை இல்லாத, நியாயப்படுத்த இயலாத,பொறுப்பு அற்ற கருத்துகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

Saturday, September 21, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 19

நாள்:- 06.08.2007

தமிழ்  இனப்படுகொலைக்குத் துணைபோகும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு!

#வைகோ குற்றச்சாட்டு

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த 2007 ஜூலை 16-ம் நாள் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தின் தொடர்ச்சி யாக இந்தக் கடிதத்தை எழுகிறேன். இலங்கைத் தீவில் தமிழ் இனத்தைப் பூண் டோடு அழிக்க, தொடர்ந்து கொடூரமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு, இராணுவ ஆயுதங்களையும்,உதவியையும் வழங்கி வருவது குறித் து என்னுடைய வேதனையையும்,எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்.

Thursday, September 19, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 18

நாள்:- 16.07.2007

இலங்கையுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தமா?

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு
மிகப்பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்ற பிரச்சினையைத்
தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

Monday, September 16, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 17

நாள்:- 24.11.2006

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கொல்வது அன்றாட நிகழ்வாகி
வருகிறது. இந்த மிக முக்கியமான பிரச்சினையை, தாங்கொணாத் துயரத் தோடும், மிகுந்த மனவேதனையோடும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.