Showing posts with label வ.உ.சி. Show all posts
Showing posts with label வ.உ.சி. Show all posts

Friday, October 11, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 8

வைக்கம் வீரரின் படத் திறப்பு. தந்தை பெரியார் படம் திறப்பு. திறந்து வைத்தது யார்? வ.உ.சிதம்பரம் பிள்ளை.பெரியாரும் காங்கிரசை வளர்த்தவர்தானே, காங் கிரசில் இருக்கும் வர்ணாசிரமக் கொடுமையை எதிர்த்து வெளியேறியவர் தானே?

1928 ஆம் ஆண்டு பெரியார் படத்தை வ.உ.சிதம்பரம் திறந்து வைத்ததை குடிய ரசுப் பத்திரிகை வெளியிடுகிறது. 20 ஆண்டுகள் கழித்து வ.உ.சி. மறைந்த பிறகு, 1948 இல் மே மாதம் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் திராவிடர் கழகத்தின் 18 ஆம் மாகாண மாநாடு. அந்த மாநாட்டில் வ.உ.சி. படம் திறந்து வைக்கப்பட்டது.அந்த மாநாட்டில் படத்தைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தவர் தமிழ்த் தென் றல் திரு வி.க. ஆனால், அவர் வரவில்லை. அவர் வரவில்லை என்பதால் குத் தூசி குருசாமி அந்தப் படத்தைத் திறந்து வைத்தார். அந்த உணர்வோடுதான் நான் இங்கே பேசுகிறேன்.

Wednesday, October 9, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 7

இந்தக் காலகட்டத்தில் வழக்கை நடத்துவதற்கும்,இந்தப் பிரச்சனையில் பாதிக் கப்பட்டவர் களுக்கு உதவுவதற்கும் சிறையிலே இருந்த சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன் சொத்தை விற்று இராஜபாளையத்தில் இருந்த சுப்பையா முதலி யார் என்பவர் மூலம் பாண்டிச்சேரிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அங்கு ஒட்டப்பிடாரம் மாடசாமிப்பிள்ளையைச் சந்திக்கிறார். அன்றைக்கு ஆயிரம் ரூபாய் என்றால் இன்றைக்கு பத்து இலட்சம். அதைவிட அதிகம்.

சிறையில் இருந்தவாறே தகவல் கொடுத்து, ஆயிரம் ரூபாய் பணம் ஏற்பாடு செய்து இந்தப் பணத்தை வழக்கு சம்பந்தப்பட்டவரிடத்தில் பாண்டிச்சேரியில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று பணத்தைக் கொடுத்து அனுப்புகிறார். இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஒன்றல்ல பல ஆதாரங்கள் இருக் கின்றன.

Monday, October 7, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 6

நான் பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலான் என்ற ஊருக்கு இன்றைக்குக் காலையில் சென்று இருந்தேன். அந்த வீரமிக்க மண்ணைத் தொடுகிற பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன் என்று சொல்லிவிட்டு அந்த மண்ணை நான் எடுத்து வந்து இருந்தேன். அந்த மண் ணை எடுத்துக்காட்டி உயர்த்திக் காண்பித்து முத்தமிட்டு வணங்கிவிட்டு நான் பேசினேன். இங்கும் பாஞ்சாலங்குறிச்சி மண்ணை நெற்றியில் பூசினால் பிள் ளைக்கு வீரம் பிறக்கும் என்கின்ற நம்பிக்கை இந்த நாட்டு மக்களிடத்தில் இருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சிக்கு, அங்கே கொடுக்கப்பட்ட வேலையின் காரணமாக உள்ளங்கை கிழிந்து பார்ப்பதற்குக் கொப்புளம் கொப்புளமாக கக்ஷ் டப்படுகிற நேரத்தில், அந்தச் சிறை அதிகாரி அதற்கு மேலும் கொளுத்துகின்ற வெயிலில், அவருடைய முதுகில் மாட்டைக் கட்டுவதைப்போல கயிறு கட்டி அவருடைய தோளிலும் முதுகிலும் கயிற்றினைக்கட்டி செக்கு இழுக்கச்சொன் னார்கள். அவர் செக்கு இழுத்தார்.

Sunday, October 6, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 5

தமிழ்த்தாத்தா’ உ.வே.சா செய்த பணியை, இன்றைக்கு திவான் செய்து கொண் டு இருக்கிறார். சாகித்ய அகாடெமி போன்ற விருதுகளுக்கு அவர் தகுதி உடை யவரா என்றால் ஆம், என்பேன். இவருக்குக் கொடுத்தால் அந்த விருதுக்குத் தகுதி என்று கருதுகிறவன் நான். 70 புத்தகங்களுக்கு மேல் அவர் தந்து இருக் கிறார். என்ன அருமையான ஆராய்ச்சி! அவர் எம்.பில். பட்டம் பெற்றதேகூட. ஆக்ஷ் கொலைவழக்கை ஆய்வு செய்ததை வைத்துத்தான் பரிசு பெற்றார், விரு துபெற்றார்.

செக்கு இழுத்த செம்மல் சிதம்பரம் பிள்ளை இந்த ம.தி.தா. இந்து பள்ளியில் தான் படித்தார். முண்டாசுக் கவிஞன் பாரதி இங்கேதான் படித்தார். அந்த நாள் களை நான் எண்ணிப் பார்க்கிறேன். வ.உ.சி. தொழிலாளர்களுக்காகப் போராடி னார். கோரல் மில்லில் அவர் நடத்திய போராட்டம். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு உணவு படைக்க தன் சொத்துகளைத் தந்தார். இந்தியாவி லேயே தொழிலாளர்களைத் திரட்டிப் போராட்டத்தில் வெற்றிபெற்ற ஒரே தலைவர் அந்தக் காலகட்டத்தில் செக்கு இழுத்த செம்மல் வ.உ.சி.யைத்தவிர வேறு யாரும் கிடையாது.

Saturday, October 5, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 4

ஒரு நாள் தெற்குக்கடை பஜாரில் அவருக்கு வேண்டிய நண்பர் அருணாசலத் தின் பழைய புத்தகக் கடையில் போய் உட்கார்ந்து இருக்கிறார் திவான். அப் போது அவரது கண்ணில்படுகிறது உத்தம பாளையத்தில் இருந்து 1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ‘பாரதி’ என்கின்ற மாத இதழ். அதைப் புரட்டுகிறார்.அந்தப்பத்திரிகையில் இவருக்கு ஒரு குறிப்பு கிடைக்கிறது.அதில் வ.உ.சி. எழுதிய, ‘அழகும் ஆரோக்கியமும்’ என்கின்ற மூன்று பகுதி, பாரதி ஏட் டில் வெளியிடப் பட்டு இருக்கிறது. இவருக்கு மகிழ்ச்சி. மேலும் தேடுகிறார். இரண்டாவது பகுதியும் மூன்றாவது பகுதியும் அவருக்குக்கிடைக்கிறது.முதல் பகுதி கிடைக்கவில்லை.

இவரது நண்பர் முகமது அலியின் மூலமாக முயற்சிக்கிறார். உத்தமபாளையத் தில், முகமது இஸ்மாயில் என்பவரது வீட்டில், பாரதி இதழ்கள் பைண்ட் வால் யூம்களாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இவர் உத்தமபாளையத்துக்குச் செல்கிறார். முதலில் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டு அங்கே சென்று அவரது இல்லத்தில் இருக்கின்ற நூலகத்தில் தேடிப் பார்த்தால், குறிப்பு இருக் கிறதே தவிர, அந்த வால்யூம்கள் அங்கே இல்லை.

Wednesday, October 2, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 3

திருநாவுக்கரசர் இதே கருத்தையே சொல்கிறார்.

ஞானத்தால் தொழுகின்றவர்களைக் கண்டு
ஞானத்தாய் நினை ஞானும் தொழுகிலேனே.

ஞானத்தைத்தான் தொழுகிறேன் என்று திருநாவுக்கரசர் சொல்கிறார்.

ஞானம்தன்னை, நலனை முன்னிறுத்துகின்ற நன்மை என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.

Sunday, September 29, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 2

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், சமயவாதிகள் கூடுகின்ற மாநாட்டில் சிகாகோ நகரில், இந்தியாவில் இருந்து சென்ற விவேகானந்தருடைய ஆடைத் தோற்றத்தைக் கண்டு பலபேர் ஏளனமும் பரிகாசமும் செய்தவேளையில், Ladies and Gentlemen என்று பேசுகின்ற அரங்கில், ‘சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த அவரது குரல் அந்த அரங்கத்தில் அனைவருக்கும் சிலிர்ப்பை ஏற் படுத்தியது.

இராமநாதபுரம் மன்னர்தான் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். விவேகானந்தரின் அற்புதமான கணீரென்ற ஆங்கிலச் சொற்களில் தவழ்ந்து வந்த கருத்துப் பிரவாகத்தில் அனைவரும் சொக்கிப்போனார்கள்.

Saturday, September 28, 2013

வ.உ.சி “சிவஞான போதம்” உரை நூல் விழா-வைகோ உரை- பாகம் 1

#வைகோ உரை வ.உ.சிதம்பரனார் “சிவஞான போதம்” உரை நூல் வெளியீட்டு விழா -திருநெல்வேலி - 22.08.2008

இந்த நாள் என் வாழ்வில் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்ற திருநாள். தியாக மணிவிளக்காக காலங்களைக் கடந்தும் ஒளிவீசிக் கொண்டு இருக் கின்ற ஒரு மாபெரும் தலைவன் வழங்கிய நூல்களுள் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வருகின்ற அரிய பணியில் திவான் ஈடுபட்டு இருக் கின்றார். செக்கு இழுத்த செம்மல்- ஒரு சிறந்த இலக்கியவாதியும்கூட என்ப தை இன்னும் எண்ணற்றவர்கள் அறிகின்ற வகையில், வரவேண்டிய பல நூல் கள் வரலாற்றின் பார்வையில் வராமலே இருக்கின்ற கவலையோடு, அவற் றை வெளியே கொண்டுவரும் முயற்சியில் திவான் ஈடுபட்டு இருக்கிறார்.