Tuesday, November 26, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 4

அறிவிப்பு நிலையிலேயே உள்ள ஈரோடு - செங்கோட்டை புதிய இரயிலை இயக்கிடுக!

இரயில்வே கூடுதல் நிதிநிலை அறிக்கையின்போது நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கை 10.12.2009 அன்று
தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவாதத்தில் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கையில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில், ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை புதிய இரயில் வண்டி இயக்கப் போவதாக அறிவிக்கப் பட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைப் படுத் தப்படாமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.பொதுமக்களுக்கு பெரிதும் பயன் படும் இந்த இரயில் வண்டியினை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வாய்மையின் மறுபெயர் வைகோ!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக தியாகச் சுடர் திலீபன் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை ராயபேட்டையில் நடந்தது. அக்கூட்டத்திற்கு சென் றிருந்தேன். தலைவர் #வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்ட மேடையின் முன்பகுதியில் வைகோ, பிரபாகரன், திலீபன் ஆகியோர் வன்னி காடுகளில் நின்றுகொண்டு இருக்கும் புகைப்பட பேனர்கள் வைத்திருந்தார் கள்.

பேனரில் இந்த படத்தில் ஒரு சிறிய மாற்றம் காணப்பட்டது. அது என்ன மாற் றம் என்றால் தலைவரின் இடது பக்கத்தில் பிரபாகரன் இருக்கிறார் வலது பக் கத்தில் புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மன் அவர்களுக்கு பதில், திலீபன் அவர்கள் படத்தை மாற்றி அங்கு வைத்திருந்தார்கள். இதை தலைவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே நான் பார்த்தேன். இது தவறான செயல் ஆயிற்றே! தலைவர் அவர்கள் வன்னி காடுகளுக்கு சென்ற போது திலீபன் மறைந்து விட்டாரே என்று எண்ணினேன்.

பொன்னமராவதியில் அரசு கல்லூரி வேண்டும்-மதிமுக கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் #மதிமுக நிர்வாகிகள் கூட் டம் நடந்தது. 
 
கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணைச்செய லாளர் டாக்டர் சின்னப்பா முன்னிலை வகித் தார். 

பொதுக்குழுஉறுப்பினர் சதாசிவம் வரவேற்றார். 

கூட்டத்தில் 

நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது -வைகோ அறிக்கை

நீதி தூக்கிலிடப்பட்டுவிட்டது, மேலும் அநீதி நிகழாமல் மூவரின் தூக்குத் தண்டனை இரத்தாக வேண்டும் #வைகோ அறிக்கை

“குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் உலகமெல்லாம் ஜனநாயகத்தில் நீதித்துறையின் அடிப்படை தத் துவமாகும். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அச்சம்பவத்தில் எள்ளள வும் தொடர்பில்லாத நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நீதிக்கு முற்றி லும் முரணான விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்ரவதை செய்து, காவல்துறையினர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் தடா நீதிமன்றம், தடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

தடா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கிடையாது. அதனால் உச் சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப் பட்டனர். 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரணக் கொட்டடியில் இருந்த நளினிக்கு தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகளாகியும் விடுதலை செய்யப்படவில்லை.

Monday, November 25, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில்... வைகோவின் போர் முகம்!

ஈழத்தில் நடந்த இனக்கொலையும், இதயத்தில் வடிந்த ரத்தத்தையும், அதனால் ஏற்பட்ட ரணத்தையும் தாங்க இயலாதவர்களாய் நம் தாய்த் தமிழகத்து மக்கள் வடிந்த கண்ணீரை மட்டுமே காணிக்கையாகத் தரமுடிந்தது.

2009-ல் முள்ளிவாய்க்கால் துயரச் சம்பவத்தோடு அனைத்தும் முடிந்தது. அது வரை அங்கீகாரம் இல்லாத தமிழீழ அரசை நமது மாவீரர் திலகம் பிரபாகரன்
அவர்கள் கட்டி எழுப்பிய தமிழீழ வைப்பகம், மாவீரர் துயிலகம், செஞ்சோலைக் காப்பகம், பள்ளிகள்,பணிமனை, வீடுகள் என அனைத்தையும் இடித்து மகிழ்ந்த சிங்கள அரசு, முடிவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்ட லட்சக் கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பேய் பெற்ற பிசாசு மகிந்த ராஜபக்சே தன் கோரப் பசிக்கு தமிழர் இரத்தம் குடித்துக் கோரத்தாண்டவம் ஆடியபோது கை கட்டி, வாய் பொத்தி மெளனியாய் ஆட்சியில் இருந்தார் தமிழகத்தில் கருணாநிதி.