Showing posts with label முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். Show all posts
Showing posts with label முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். Show all posts

Wednesday, December 11, 2013

முற்றங்களும்... முடிவடையா யுத்தங்களும்!

“சாகப் பயந்தவன் தரித்திரன் ஆகிறான்.சாகப் பிறந்தவன் சரித்திரம் ஆகிறான்!”
-வேலுப்பிள்ளை பிரபாகரன்

“இந்த சமூகத்தின் கட்டமைப்பே வீர வழிபாட்டில்தான் அமைந்து கிடக்கிறது” என்றான் இங்கிலாந்து நாட்டின் தாமஸ் கார்லைல். ஆம்! நாட்டினுக்காய் உயி ரை ஈந்தோ ரின் “நடுகல்” வழிபாட்டிலும் - கொற்றம் அமைத்துக் கோலோச்சிய நம் மூதாதை மன்னர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் -முன்னின்று போரா டிகளச் சாவினுக்கும் - கொடுந்தண்டனைக்கும் தன்னுயிர் ஈந்த மாமன்னர்க ளின் வீர வழி பாட்டிலும் தாய்த் தமிழகம் பன்னூறு ஆண்டுக் காலமாய் பற்றி வருகிற வீர வரலாறாகும்.

போரில் வீரம் காட்டி இறந்து நடுகல்லாய் நிற்கும் உண்மை வீரர்களே, தமிழர் களின் தெய்வங்கள் என்று புற நானூறு பேசும்!. அந்த வகையில் - அந்த வழி யில் சாதனைச் சரித்திரம் பேசும் சரித்திர மனிதர்களின் சதுக்கங்களே நினைவு முற்றங்களாக முகிழ்த்து நிற்கின்றன நாடுகள் தோறும். அந்த சதுக்கங்கள் பேசும் சரித்திரம் ஒன்றல்ல - இரண்டல்ல -ஓராயிரம். அந்த ஓராயிரத்தில் ஒரு
சிலவற்றை நினைத்துப் போற்ற -நினைவில் நிறுத்தத் தான் முற்றங்களும்! முடிவடையாயுத்தங்களும்!!.

Wednesday, November 27, 2013

தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை!-பாகம் 2

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க முயற்சிப்பதா? 

‘நானே அரசு’என்றான் ஒருவன் பிரெஞ்சு நாட்டிலே; ஜெயலலிதாவுக்கும் அந்த எண்ணம் வந்துவிட்டது! 

என்று தஞ்சையில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு
விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் பேருரை ஆற்றி னார். அவரது உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:

இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிலைகளை வடித்ததன் நோக்கம் என்ன? இவையெல்லாம் இங்கே ஏன் எழுப்பப்பட்டன? அமெரிக்காக்காரர்கள் தங்கள் பெருமைகளைப் பேசுவதற்காக தெற்கு டகோடா ரஸ்மோரில் சிலைகளை வடித்தார்கள்.இங்கே ஏன் வடித்தோம்? 1989 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 3 ஆம் நாள், வல்வெட்டித்துறைக்குச் சென்ற போது,மாவீரர் துயிலகங்களைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன். அப்போது அந்த ஊர்த்தலைவர், ‘அங்கே இந்திய இரா ணுவம் குவிக்கப்பட்டு இருக்கின்றது. நீங்கள் அங்கே போக முடியாது’ என்று சொன்னார்.அப்போது, குமரப்பாவின் தாயாரும், கிட்டுவின் தாயாரும் படகில் என்னை வழியனுப்பி இங்கே அனுப்பி வைத்தார்கள்.

Monday, November 25, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில்... வைகோவின் போர் முகம்!

ஈழத்தில் நடந்த இனக்கொலையும், இதயத்தில் வடிந்த ரத்தத்தையும், அதனால் ஏற்பட்ட ரணத்தையும் தாங்க இயலாதவர்களாய் நம் தாய்த் தமிழகத்து மக்கள் வடிந்த கண்ணீரை மட்டுமே காணிக்கையாகத் தரமுடிந்தது.

2009-ல் முள்ளிவாய்க்கால் துயரச் சம்பவத்தோடு அனைத்தும் முடிந்தது. அது வரை அங்கீகாரம் இல்லாத தமிழீழ அரசை நமது மாவீரர் திலகம் பிரபாகரன்
அவர்கள் கட்டி எழுப்பிய தமிழீழ வைப்பகம், மாவீரர் துயிலகம், செஞ்சோலைக் காப்பகம், பள்ளிகள்,பணிமனை, வீடுகள் என அனைத்தையும் இடித்து மகிழ்ந்த சிங்கள அரசு, முடிவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்ட லட்சக் கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பேய் பெற்ற பிசாசு மகிந்த ராஜபக்சே தன் கோரப் பசிக்கு தமிழர் இரத்தம் குடித்துக் கோரத்தாண்டவம் ஆடியபோது கை கட்டி, வாய் பொத்தி மெளனியாய் ஆட்சியில் இருந்தார் தமிழகத்தில் கருணாநிதி.

Saturday, November 23, 2013

புரட்சிக்கான தீப்பொறியை அடைகாக்கும்

புரட்சிக்கான தீப்பொறியை அடைகாக்கும்

தஞ்சை விளாரில் எழுந்து நிற்கும்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்புவிழா நிகழ்ச்சி 9.11.2013 அன்று நடைபெற்றது. #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர் களின் உரை 

அடடா தமிழா எடடா படை நீ
அடிமை விலங்கை உடைத்தெறி
இடடா ஆணை கொடடா செந்நீழ
இனத்தைக் காப்போம் நாள் குறி
நடடா களத்தே எடடா கைவாள் நடடா
உன் பகைவன் தலைபறி
தொடடா போரை விடடா கணைகள்
சுடடா எழட்டும் தீப்பொறி
சுடடா எழட்டும் தீப்பொறி

Wednesday, November 20, 2013

தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை!-பாகம் 1

முள்ளிவாய்க்கால் முற்றம்,ஈழத்திற்கு கலங்கரை விளக்கம் தமிழரின் மான உணர்வின் மரகதப் பேழை என்று தஞ்சையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத் திறப்பு விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் பேருரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனைப் பேழைகளை, பேயிருள்
சூழ்ந்திடும் கானக மீதினில் பகைவர்களைப் புதைகுழிக்கு அனுப்பிய தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை,இதுவரை உலகம் கண்டும் கேட்டுமிராத வீரச்சமர்களை நடத்தி, யானை இறவில் சிங்களவனைப் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட வைத்து, போர்க்களங்களின் வரலாற்றில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்திக் காட்டி, ஓயாத அலைகளில்,அக்னி அலைகளில், சிங்களர் படைகளைச் சின் னாபின்னம் செய்து சிதறடித்து, ஆர்வில் ரைட், வில்பர் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடித்தார்கள் என்றால், விமான ஓடுதளத்தையே ஒரு பாயைப் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு அவர்கள் அடர்ந்த காட்டுக்கு உள் ளே இருந்துகொண்டு ஏவிய விமானங்கள்,கொழும்பு வரை சென்று தாக்குதல்
நடத்தியதால், மண்ணுக்குள் இருந்து ரைட் சகோதரர்கள் வீரவணக்கம் செலுத் தக்கூடிய வரலாறைப் படைத்த பிரபாகரன் அவர்களின் வீரப்படைகளை, ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் உதவியோடு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,வஞ்சகத்தோடு தந்த பேருதவியால்,ஆயுதங்களால், அள்ளிக் கொடுத்த ஆயிரக்கணக்கான கோடிப் பணத்தால், எவராலும் வீழ்த்த முடியாத சதியால் வீழ்த்தி விட்டது.

Sunday, November 17, 2013

நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு -தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று (16.11.13) மாவட்ட தலைநகரங்களில் #மதிமுக வினர் ஆர்பாட்டம் செய்தனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக சார்பில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செய லர்கள் டி.ஜி.மாதையன் (கிருஷ்ணகிரி), சம்பத் (தருமபுரி) ஆகியோர் தலைமை வகித்தார்.

கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவினருடன் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

Thursday, November 14, 2013

நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து, நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் #வைகோ அறிக்கை 

அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெறாத இனப்படுகொலை இலங் கைத் தீவில் சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசால், தமிழர்கள் மீது நடத் தப்பட்டது. இலட்சக்ணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தை கள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார் கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப் பட்டு அழிக்கப்பட்டனர். 

தமிழ் ஈழத் தாயகத்தின் சுதந்திரத்தை மீட்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீரம் செறிந்த சமர்களை, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் விடுதலைப்புலிகள் நிகழ்த்தினர். சிங்களப் படைகளைச் சிதறடித் து வெற்றி கண்டனர். ஆனால், சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங் கிரஸ்  தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமி ழர் களின் உயிர்க்கவசமான, புலிப்படையை அழிக்கும் குறிக்கோளோடு, சிங்கள அரசுக்கு, முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்து, இந்தியாவின் தளபதிகளை அனுப்பி, யுத்தத்தை பல வழிகளிலும் உதவி இயக்கியது. 

Wednesday, November 13, 2013

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிப்பு:தஞ்சையில் வைகோ ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை பார்க்க வந்த #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ,அங்குள்ள மாவீரர் மண்ட பத்தின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். 

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று மதியம் 12.20 மணிக்கு தஞ்சை வந்தார். அவர் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உள்ளே சென்றார். அப்போது போலீசார் தடுத்தனர். மதிமுக.,வினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Saturday, November 9, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழாவில் வைகோ

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விழாவில் #வைகோ முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.

புகைப்பட தொகுப்பு


Thursday, October 31, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்-தமிழக மக்களே திரண்டு வாரீர்! வைகோ அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனும் தியாகக் காட்சியகத்திற்கு தமிழக மக்களே திரண்டு வாரீர்! #வைகோ அறிக்கை

அகிலத்தின் நெடிய வரலாற்றில், திகைத்துத் திடுக்கிடச் செய்யும் வீர சாகசங் களையும், தியாகக் களங்களையும் படைத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர் களைத்தாரை வார்த்த உன்னதத்தையும்,கற்கள் பேசும் சிலைகளாக அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களின் விழுமிய ஏற்பாட்டால், நம் இருதயங்களின் அழி யாத காட்சிகளாகச் சித்தரிக்கும் முள்ளிவாய்க்கால் நினை வு முற்றம்,நவம்பர் 8 ஆம் தேதி, தஞ்சை திருநகர்-விளார் புறவழிச் சாலையில் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முத்துக்குமார் திடலில், பாலச்சந்திரன் அரங்கத்தில் திறப்பு நிகழ்ச்சி அரங்கே றுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் இராசராசேச்சுரம் என்னும் பெரு வுடையார் கோவிலை அருண்மொழிவர்மனாம் இராசராசசோழன் கட்டிய போது, அக்கோவிலில் சிலைகள், அழகிய கோபுரத்தில் பதித்த கற்கள், இவற் றில் பட்டுத் தெறித்த சிற்பிகளின் உளிகள் எழுப்பிய ஓசைகள் மீண்டும் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் ஒலித்தன.