தி.மு.க. தலைவர் மதிப்புக்குரிய கலைஞர் அவர்களுக்கு, வணக்கம்.மிகுந்த வருத்தத்துடன் இந்த பகிரங்க மடலை வரைகிறேன்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஐந்துமுறை முதலமைச் சர் பதவியை அலங்கரித்தவர்; திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார் கரம் பற்றி, பேரறிஞர் அண்ணாவின் வழியில் நடைபோட்டு 90 வயதிலும் துடிப்பாக
இயங்குகிற தலைவர் நீங்கள் மட்டுமே.இனமானப் பேராசிரியர் உங்களைவிட
வயதில் மூத்தவர். அவரும் நீங்களும் மட்டுமே பழைய தலைவர்கள் வரிசை யில் பாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் குடியிருக்கும் கோபாலபுரம் இல்லம் உங் கள் வசிப்பிடம் மட்டுமல்ல, இந்திய அரசியலில் டெல்லி அதிகார பீடத்தையும் அசைத்துப் பார்க்கும் வகையில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ செயலகமாகவும் கோ பாலபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பழம் தின்று கொட்டை போட்ட தலை வரான தங்களின் இல்லம் எத்தனையோ சதி ஆலோசனை சபையான முற்ற மாகவும் திகழ்ந்து இருக்கிறது.