Showing posts with label கட்டபொம்மன். Show all posts
Showing posts with label கட்டபொம்மன். Show all posts

Thursday, November 7, 2013

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 2

அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்!

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினை வேந்தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடை பெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ ஆற்றிய வீர உரையின் சென்ற பாகத்தின் தொடர்ச்சி வருமாறு:

அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை என்ற பெயரில், ஒரு போலி நாடகம்
தொடங்கியது. வீரபாண்டிய கட்ட பொம்மன் மீது ஐந்து குற்றச்சாட்டு களைச் சுமத்துகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதைத் தமிழில் மொழி பெயர்த் துச் சொன்னார் துபாஷி இராமலிங்க முதலியார். அதற்குக் கட்டபொம்மன் சொன்ன பதில்களை,ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப்பானர்மேனுக்குச் சொல் லுகிறார்.சுற்றிலும் வெள்ளையருக்கு ஆதரவான பாளையக்காரர்கள் உட்கார்ந் து இருக் கிறார்கள். மக்கள் கூடியிருக்கிறார்கள்.
முதல் குற்றச்சாட்டு: கிஸ்தி கொடுக்க வில்லை.

அதற்குக் கட்டபொம்மன் பதில்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை.

இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்க வில்லை.

Tuesday, October 29, 2013

கட்டபொம்மனின் 214 வது நினைவேந்தல்-வைகோ உரை-பாகம் 1

அனைத்துத் தரப்பு மக்களும் அண்ணன் தம்பிகளாக, ஒற்றுமையுடன் வாழும் கயத்தாறுக்கு ஏன் இத்தனைக் கட்டுப்பாடுகள்?


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் விழாவில் #வைகோ கேள்வி

பாஞ்சைப் பெருவேந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 வது நினைவேந் தல் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் 16.10.2013 அன்று நடைபெற் றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு #மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய வீர உரை வருமாறு:

ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு 
அஞ்ச வேண்டாமடா பாஞ்சையரே

என்று இந்த நாட்டின் அடிமை விலங்குகளை உடைப்பதற்காக பிரிட்டிஷ் கும் பினிப் படைகளின் துப்பாக்கிகளுக்கும் பீரங்கிகளுக்கும் அஞ்சாது வீரச்சமர் புரிந்த கட்டபொம்மனை இன்றைக்கே தூக்கில் இட்டு விட வேண்டும் என்று நடுப்பகல் ஒரு மணி அளவில் மேஜர் பானர்மேன் கட்டளை பிறப்பித்துவிட்டு, அவனும் வெள்ளை அதிகாரிகளும் சென்றதற்குப் பின்னர், அடிமைகளாகி விட் ட சில பாளையக்காரர்களும், பிரிட்டிஷ் கும்பினிப் பட்டாளத்து வீரர்களும் சூழ்ந்திருக்க, ஆதவன் மேற்கே சாய்ந்து கொண்டு இருந்தவேளையில்,