Thursday, November 7, 2013

கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மதிமுக வாகனப் பிரசாரம்:கைது

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதைக் கண்டித்து வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட #மதிமுக - வினரை போலீஸார் நேற்று (06.10.13) கைது செய்தனர்.

கோவை, குறிச்சி நகர மதிமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் ஈச்சனாரியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனப் பிரசாரத்தை மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் தொடங்கி வைத்தார்.

திருப்போரூர் பகுதியில், புதிய மின் இணைப்புகள் பெற உத்தரவு வழங்கிடுக! வைகோ அறிக்கை

திருப்போரூர் பகுதியில், புதிய மின் இணைப்புகள் பெற உத்தரவு வழங்கிடுக! #வைகோ அறிக்கை

மத்திய தொல்லியல் துறையின் 2010 ஆம் ஆண்டு மக்கள் விரோதச் சட்டத் தால், திருப்போரூர், மாமல்லபுரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், பல்லாவரம் பகுதியில் வாழும் மக்கள் புதிய மின் இணைப்புகள் பெற முடியாமல், தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவை உருவாக்கி, மத்திய தொல்லியல் துறை யை எதிர்த்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். மறுமலர்ச் சி திராவிட முன்னேற்றக் கழகமும், இப்போராட்டங்களில் பங்கு ஏற்றது. 

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலை வர் திருமதி சக்தீஷ்வரி சிவராமன், துணைத்தலைவர் திருமதி சசிகலா லோகு ஆகியோர் போராட்டக் குழுவினருடன் தலைநகர் டில்லி சென்று, தொல்லியல் துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பாதிப்புகளை விளக்கி கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

Wednesday, November 6, 2013

கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என 200 பேர் வைகோ முன்னிலையில் மதிமுக வில் இணைந்தனர்

கல்லூரி மாணவர்கள்  இளைஞர்கள் என 200 பேர் #மதிமுக வில் இணைந்தனர் மதிமுக தலைமைக் கழகம் தாயகத்தில் பொதுச்செயலாளர் #வைகோ முன்னிலையில், சென்னையை சார்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் பொது இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், பேராசிரியர் முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 3

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

தக்கோலப் போர்

இந்த வீர நாராயணம் ஏரி, கடல்போல் இருக்கிறது. இந்த ஏரியை அமைத்த பராந்தகச் சக்கரவர்த்தியின் வீர மைந்தன் இளவரசர் இராஜதித்தயர் என்று, முதல் அத்யாத்திலேயே இராஜதித்தயரின் தக்கோலப் போரைப் பற்றிச் சொல் கிறார்.

வீரநாராயணம் என்று இந்த ஏரிக்கு எப்படி பெயர் வந்தது. பராந்தகச் சோழனின் பல பெயர்களில் ஒன்றான வீரநாராயணன் என்ற பெயரை சூட்டுகிறார். ‘தக் கோலப் போர்’ சோழர்கள் வரலாற்றிலேயே மிகப் பிரசித்திப் பெற்ற யுத்தம். அப்போது சோழர் குலம் கொஞ்சம் புகழ் மங்கி இருந்த காலம். பல்லவ மன்ன னுக்குத் துணையாகச் செல்கிறபோது, அரக்கோணத்துக்கு அருகில் தக்கோ லம் என்ற இடத்தில், சோழப் படைகளுக்கும், இரட்டை மண்டலத்து படைக ளுக் கும் பயங்கர யுத்தம் நடந்தது. இரட்டை மண்டலத்துக் கன்னரதேவன் பெரும் படையுடன் மோதினான்.

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்!

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்! விருதுநகர் மாநாட்டில் குமரி விஜயகுமார்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில்,“ஈழத்தில் இனப்படு கொலை” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் ஆற்றிய உரை...

பேரறிஞர் அண்ணாவின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கிற மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் இமயம் ஜெபராஜ் அவர்களே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வைகோ
அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் கழக முன்னோடிகளே, வருகை தந்தி ருக்கும் சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.