தென்காசியில் ரெயில்வே மேம்பாலத்தை திறக்க கோரி கடையடைப்பு– சாலை மறியல்-#மதிமுக ஆதரவு
தென்காசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 27 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவ திப்பட்டனர்.
சுமார் 2 ஆண்டுகள் கழித்து சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. கனரக வாக னங் கள் இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாக மாற்றிவிடப்பட்டன. இலகுரக வாக னங்கள் சர்வீஸ் ரோட்டில் சென்று வருகின்றன. ஆமை வேகத்தில் நடை பெற் ற மேம்பாலப் பணி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது.மேம்பாலப்பணி நிறைவு பெற்றதால் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத்திறக்கப் படும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.