Tuesday, March 6, 2012

சங்கரன்கோவில்: வைகோ முயற்சியால் வந்த குடிநீர்!

சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு. அ .பழனிசாமி பி.காம் அவர்களின் ௦௦கட்டுரை 02.03.2012 அன்று சங்கொலியில் வெளியானது , இதோ இணையதள நண்பர்களுக்க இங்கே பதிவு செய்கிறோம் .நன்றி :-சங்கொலி குழு 


வளர்ச்சித் திட்டங்களைப் பறித்த அ.தி.மு.க.!
வாக்காளர்கள் பாடம் புகட்டுவர்!


Monday, March 5, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 6

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3000

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2500

கடந்த ஆட்சியின்போது, ஒரு டன் கரும்புக்கு விலை ரூ 2000 வழங்கப்பட்டது. அது கட்டுப்படியாகாது; ரூ 3000 கொடுக்க வேண்டும் என்று கோரி, இன்றைய ஆளும் கட்சியின் சார்பில், சர்க்கரை ஆலைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.2500 வழங்குவோம் அறிவித்தார்கள். ஆனால், இப்போது, ரூ 2100 மட்டுமே அறிவித்து இருக்கின்றார்கள்.

Sunday, March 4, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 5

அமராவதி, பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில் கேரளம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக!

அமராவதி ஆற்றின் உபநதியான பாம்பாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கும், பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில், முக்காலியில் ஒரு புதிய அணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.

பாம்பாற்றின் குறுக்கே, 170 மீட்டர் நீளம்; 30 மீட்டர் உயரம் கொண்ட அணை கட்டுவதற்கு, 230 கோடியில் திட்டம் தயாரித்து உள்ளதாகவும், அதற்காக 110 ஏக்கர் நிலத்தைக் கையப்படுத்தி விட்டதாகவும், 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Saturday, March 3, 2012

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியாவின் துரோகம் -வைகோ குற்றச்சாட்டு

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு, தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மார்ச் 1-ஆம் தேதி கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். தமிழினக் கொலை நடத்திய இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் நாடுகளால் தீர்மானம் வரக் கூடும் என்று கருதி அதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்திய அரசு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

எந்தவொரு தேசத்தையும் குறிப்பிட்டு தீர்மானம் கொண்டு வருவது மனித உரிமை ஆணையத்தின் செயல்பாட்டுக்கு - அணுகுமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இணக்கமான அணுகுமுறையைப் பலவீனப்படுத்தும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையின் இராஜ பக்சே அரசுக்கு முழுக்க உதவி செய்யும் நோக்கத்தில் இந்திய அரசு இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கின்றது.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கும் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளியாகும். இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடி பணமும் அள்ளிக் கொடுத்ததுடன் இந்தியாவின் முப்படைத் தளபதிகளை அனுப்பி இலங்கை அரசு நடத்திய யுத்தத்தை இயக்கியதும், நடத்தியதும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

Thursday, March 1, 2012

மூன்று தமிழர்கள் மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 30 ஆம் தேதி அன்று தடை விதித்ததற்குப் பின்னர் அந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சிங்வி, நீதிபதி முக்கோ பாத்தியாய அமர்வில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளும் பட்டியலில் இன்று இடம் பெற்றிருந்தது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லர் தூக்குதண்டனை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் உள்துறை செயலாளர்களும் தூக்குத் தண்டனை வழக்குகள், கருணை மனுக்கள் குறித்த அனைத்து விபரங்களையும் மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதியரசர் சிங்வி அறிவித்திருந்தார். ஆனால், ஒருசில மாநிலங்களில் இருந்து மட்டுமே தகவல்கள் தரப்பட்டுள்ளன.