Showing posts with label அணு உலை. Show all posts
Showing posts with label அணு உலை. Show all posts

Wednesday, December 4, 2013

டிச 21 யில் அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்திக்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இடிந்தகரையில் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மை.பா.சேசுராஜ், தமிழர் தேசிய இயக்க பொதுச்செயலர் பரந்தாமன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர் தியாகு, ம.தி.மு.க. இளைஞரணி செயலர் ஈஸ்வரன், மதிமுக நெல்லை மாவட்ட செயலர் சரவணன், மார்க்சிஸ்ட் கட்சி சங்கரன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தை சேர்ந்த அரங்ககுணசேகரன், தமிழ் தேசப்பொதுவுடமை கட்சி ராசு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல் ஜாபர், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கட்சி அகம்மது நவாபி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி (விடுதலை) ரமேஷ், தமிழ்நாடு மக்கள் கட்சி அருண்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, November 16, 2013

அணு உலைகள் நாட்டுக்கு வரமல்ல... சாபம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், “அணு உலை பேர ழிவு” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா ஆற்றிய உரை...

தலைவர் அவர்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் கழக முன்னோடிகளுக் கும், மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் அன்பு காலை வணக்கம்.

அணு உலை விபத்தால் மனிதர் களுக்கும், இயற்கைக்கும் ஏற்பட்ட பாதிப்பு களை பேரழிவுகளை புகைப்படக்கண்காட்சியாக நாம் மாநாட்டில் வைத்தி ருக் கிறோம். அணு உலை விபத்தால் மனிதர்களுக்கு உடல் ரீதியாக மனரீதியாக ஏற்படும் பிரச்சினை களை உடனே பார்ப்பவர்கள் மருத்துவர்கள்தான். உடனி ருந்து பார்ப்பவர்களும் மருத்துவர்கள்தான்.ஒரு மருத்துவராக நீ பார்த்த உண் மைக் காட்சிகளை, ஒரு மருத்துவராக உண்மை செய்திகளை உலகத்திற்கு
சொல் என்று விருதுநகருக்கு என்னை அழைத்திருக்கிறார் நமது தலைவர்
வைகோ அவர்கள்.

Thursday, October 3, 2013

அணு உலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும், அணு உலைக்கு எதிரா கப் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ( 02.10.13)புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பல கட்சிகள் ஒருகிணைந்து பங்கேற்ற போராட்டத்தில் #மதிமுக சார்பாக பங் கேற்ற நிர்வாகிகள் விவரம் ..

சேலத்தில்

சேலம் மதிமுக மாவட்டச் செயலர் தாமரைக் கண்ணன் உடன் பல நிர்வாகிகள் பங்கேற்றார்கள்

Sunday, September 29, 2013

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்

அணுஉலை விபத்து இழப்பீட்டுச் சட்டம்: அமெரிக்காவுக்கு அடிபணியும் மன் மோகன்சிங் அரசு 

சங்கொலி தலையங்கம் 

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந் தியாவை அமெரிக்க நாட்டின் அடிமை தேசமாக மாற்றிவிட்டது.கடந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான டெல்லி ஆட்சியில், இந்தியா, அமெ ரிக்காவைச் சார்ந்த நாடாக, அமெரிக்காவின் கண் அசைவுக்கு ஏற்ப இயங்கும் கையாலாகாத நாடாக ஆகிவிட்டது. உலகில் பெரும்பாலான நாடுகள் அணு உலைகள் அமைப்பதையும் அணுமின் உற்பத்தியையும் கைவிட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் கொள்ளை லாபத்திற்கு இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவும் இன்னும் சில வளர்ந்த நாடுகளும் வழங்கும் அணுஉலைகளை இந்தியாவில் அமைத்து அணுமின் உற் பத்தியைப் பெருக்குவது என்று மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி உடன்பாட்டை 2005 ஆம் ஆண்டு உருவாக்கியது.

Sunday, September 22, 2013

அணுமின் உலைகள் எதற்கு?

அணுமின் உலைகள் எதற்கு?


அலைகடலும் காற்றும் கதிரொளியும் இருக்கையிலே...


“மின்சாரமும் சோஷலிச சிந்தனையைக் கொண்ட அரசும் மனித இனத்தின்
வளர்ச்சிக்கு அவசியம்” என்று சோவியத் விடுதலையின்போது லெனின் குறிப் பிட்டார்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப்பயன்பாட்டிற்கும் தொழிற்சாலைகள்இயங் கவும், மின்சக்தி இன்றியமையாதது. வாழ்க்கைத் தரமும் தொழில்வளமும் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், அதிகரிக்கும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய பல வழிகளில் மின் உற்பத்தியை அதிகமாக்க முயற்சிகள் மேற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. வாகனங்களைக் கூடமின்சக்தியால் இயக்குவதற்கு ஆராய்ச்சிகள் முழுமையாகி, சோதனை ஓட்டங்களும் வெற்றி பெற்று, சில நிறுவனங்கள் உற்பத்தியிலும்கூட இறங்கிவிட்டன.

Tuesday, September 3, 2013

அணுஉலையை எதிர்ப்பது

மக்கள் தலைவர் #வைகோ அணுஉலையை எதிர்ப்பது நியாயமானதே!

கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ தொலைநோக்குப் பார்வையோடு குரல் கொடுப்பது முற்றிலும் நியாய மான தே!

கூடங்குளம் பகுதி பொதுமக்கள் மற்றும் மீனவர்கள், அணுஉலைக்கு எதிராக, 700 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து அறவழியிலும், அமைதி வழியிலும்
போராடி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

Tuesday, August 27, 2013

போராட்டம் நிச்சயம் வெல்லும்!

அணுமின் உலைக்கு எதிரான #வைகோ வின் போராட்டம் நிச்சயம் வெல்லும்!

கூடங்குளத்தில் தமிழக அரசின் இசைவுடன் மத்திய அரசு ரஷ்ய நாட்டு உதவி யுடன் நிறுவியுள்ள அணு உலையை அகற்றக்கோரி அணு உலைக் கெதிரான மக்கள் போராட்டம் 700 நாட்களையும் தாண்டி தொடர் போராட்டமாக தமிழகத் தில் நடைபெற்று வருவது சரித்திரத்தில் இடம்பெற விருக்கும் நிகழ்வாகும். அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கதினரும், பொதுமக்களும், மீனவ சமுதாயத் தினரும்,விவசாயப் பெருங்குடி மக்களும் ஒன்றிணைந்து இடிந்தகரையில் இந்த அறப்போராட்டத்தினை இடைவிடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டு
உள்ளார்கள்.

Tuesday, August 20, 2013

அஞ்சலட்டை அனுப்புவோம்..

கூடங்குளம் அணு உலை குறித்த விவரங்களை கூடங்குளம் அணுமின்
 நிலையம் இயக்குனரிடம் தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி , இடந்தகரையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போரட்டத்தை முன் எடுக்கும் திரு.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார் அவர் வைத்த கோரிக்கை விவரம் ...


தமிழ்ச் சொந்தங்களே! அஞ்சலட்டை ஒன்றை  கீழ்க்காணுமாறு எழுதி அனுப்புவீர்களா, தயவு செய்து!?

Thursday, August 8, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 3

கூடங்குளம் அணுஉலை இயங்கவிடாமல் தடுத்தால் மட்டுமே

தமிழ் இனம் தப்பிக்க முடியும்!
வைகோவின் போர் முழக்கம்

ஓர் அணுஉலை அது இயங்கும் காலத்திலேயே அணுசக்தித் துறை, அதில் இருந்து ட்ரீட்டியம், அர்கான் 41,அயோடின் 131, சீசியம் 137,ஸ்ட்ரோண்டியம் 90 என 200க்கு மேற்பட்ட கதிர் இயக்கத் துகள்கள் மற்றும் வாயுக்களை ஒரு புகை போக்கி வழியாக வெளியேற்றுகிறது.

இதுதவிர, சில மிதமான கதிர் இயக்கக் கழிவுகள் கடலில் கலக்கப்படுகின்றன.
இதன் மூலம் ஓர் அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு
ஏராளமான பாதிப்புகள் உண்டாகிறது என்பதனை உலக அளவில் உடல் நல
ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

Wednesday, August 7, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 2

கூடங்குளம் அணுமின் நிலையம்  முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வில்லை!

நிலஇயல் நீரியல் விஞ்ஞானிகளின் அறிக்கைகள் புறந்தள்ளப்பட்டன!


அணு ஆய்வுத் திட்டங்களில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று இந்திராகாந்தி அவர்களுக்கு உள்ளூர ஒரு ஆசை இருந்தது. 1980 ஆம் ஆண்டு அணு ஆய்வு விஞ்ஞானிகளை அழைத்து, ஓர் அணு நீர்மூழ்கியை உரு வாக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.ஐந்து ஆண்டுகளாகியும் அவரது திட்டம் நிறைவேறவில்லை.

உடனே இந்திராகாந்தி ருசியாவின் உதவியை நாடினார். ருசிய அரசு அணு நீர் மூழ்கிக்கான தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கிடச் சம்மதித்தது.
அதே நேரத்தில் ஒரு நிபந்தனையும் முன் வைத்தது.

Tuesday, August 6, 2013

துணை நிற்போம்! தோள்கொடுப்போம்! -பகுதி 1

கூடங்குளம் அணுமின் உலையால் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்திட இந்திய அரசு துணிந்துவிட்டது!

கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்கிவிட்டது. எந்த விதத்திலும் அடக்க முடியாத பேராபத்து மக்களின்உயிரைக் குடித்திடத் தயாராகிவிட்டது.உலகமே கண்டு அஞ்சிடும் அணுக்கதிர் வீச்சுக்கு அப்பாவித் தமிழர்களை அழித்து நாச மாக்கிடும் அநீதியை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

தென்தமிழக மக்கள் இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியாது. மக்களைக்
காத்தருள வேண்டிய தமிழக அரசு பயங்கர மரணத்திற்குப் பச்சைக் கொடி
காட்டிவிட்டது. ஆலகால விசத்தை அள்ளிப்பருகி, மக்களைக் காப்பாற்றினான் சிவபெருமான் என்பது புராணக் கதை. அந்த சிவனே இப்போது வந்தாலும்கூட இந்த அணுக்கதிர் இயக்கத்தை-அதன் பேரழிவைத் தடுத்து நிறுத்தவே முடி யாது. இந்த நிலையில் தான் மக்களைக் காத்திடப் பொங்கி எழுந்து போர்ப் பிரகடனம் செய்து களத்தில் இறங்கியுள்ளார் இரண்டாம் அண்ணா வைகோ.

Tuesday, May 28, 2013

அணு உலை அறிவோம் -நூலில் இருந்து..

செய்திகளில் இருந்து கருத்து பிறக்கிறது. செய்திகளுக்கு எப்போது பண மதிப்பு கிடைத்ததோ, அப்போ திருந்தே செய்திகளில் உயிராக இருந்து வந்த உண்மை செத்துப்போய்விட்டது.செய்திகளில் உள்ள உண்மையைக் கூட்டியோ, குறைத் தோ, மறைத்தோ கொடுப்பதன் மூலம் செய்தியைக் கொடுப்பவர் செய்தியைப் பெறுபவரை தன் விருப்பப்படி சிந்திக்க வைக்க முடியும். அணு உலை விசயத் தில் இது நடந்து வருகிறது.

அணு உலையை ஆதரித்து நீண்ட நேரம் பேசிய இளைஞனிடம், செர்னோபில்
பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, செர்னோபில் என்று எதைச்
சொல்கிறீர்கள் எனத் திருப்பிக் கேட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ கத்தில் கோடி மக்களில் ஒரு இலட்சம் பேருக்குக் கூட செர்னோபில் என்றால் என்னவென்றே தெரியாது.

Sunday, May 19, 2013

அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

“அணு உலை அறிவோம்” நூல் வழங்கும் ஆணித்தரமான சாட்சியங்கள்;
அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!

ஜெ.பிரபாகரன் எழுதிய “அணு உலை அறிவோம்” நூல் வெளியீட்டு விழா 9.5. 2013 அன்று மதுரையில் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் தலைமையில் நடை பெற்றது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நூலை வெளி யிட, கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து.....

அணு உலை மனிதகுலத்தின் உயிருக்கு உலை என்று அணு உலை விபத்துகள் வழங்கிய எச்சரிக்கையை, ஒரு ஆவணமாக, நிழற்படங்களின் தொகுப்பு ஆவ ணமாக, அணு உலை அறிவோம் என்கின்ற, தமிழ்  இனத்தைக்காக்கின்ற ஆயு தமாக நூல் ஆசிரியர் ஆருயிர்த்தம்பி பிரபாகரன் அவர்கள் உருவாக்கித் தந்து இருக்கின்றார்கள்.