Showing posts with label மல்லை சத்யா. Show all posts
Showing posts with label மல்லை சத்யா. Show all posts

Tuesday, December 10, 2013

காஞ்சிபுரம் நாடாளுமன்றத்தொகுதி வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும்-மல்லை சத்யா

நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதிக்கு #மதிமுக வேட்பாளர் அறி விக்கப்பட்டவுடன் அவரது வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என மதிமுக மாநில துணை பொதுச்செயலர் மல்லை சி.ஏ.சத்யா பேசினார்.

உத்தரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய கழகம் சார்பில் ம.தி.மு.க. கொடி யேற்று விழாவும், பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கூட் ரோட்டில் நடைபெற்றது.

மல்லை சி.ஏ.சத்யா பேசியது:

காஞ்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர் வைர மேகன் தடாகம் ஏரி நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் பல்வேறு கிராமங் களில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள் ளனர்.

Friday, December 6, 2013

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளையொட்டி #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாலை அணிவித்து மாரியாதை செலுத்தி னார்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை-புழ லில் இருக்கும் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க உயர்நிலைக்குழு உறுப்பினரும், திரு வள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகி யோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Wednesday, December 4, 2013

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா உரை

பொடா சட்டத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து ஏவியவர்கள் முகத்திரையை கிழித்தவர் #வைகோ!

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா பங் கேற்று உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி ஜெயலலிதா அரசு இரண்டு முறை சட்டசபை யில் தீர்மானம் நிறை வேற்றியது. முதல்முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
பின் தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார்.இரண்டாம் முறை தீர்மா னம் நிறைவேற்றிய அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முகப்பை இடித்துத் தள்ளினர்.

அதே நாளில், முற்றம் இடிக்கப் படுவதை அறிந்து அங்கு வந்து எதிர்ப்புத் தெரி வித்துப் போராடிய அய்யா பழநெடுமாறன், மதிமுக மாவட்டச் செயலாளர் உத யகுமார், தேர்தல் பணித் துணைச்செயலாளர் விடுதலை வேந்தன் உள்ளிட் ட தோழர்கள் 83 பேர் கொலை முயற்சி, பொதுச் சொத்துக்குச் சேதம் விளை வித் தது எனப் பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

Friday, October 18, 2013

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வெல்ல முடியாத தலைவர் #வைகோ!

- விருதுநகர் மாநாட்டில் மல்லை சத்யா

பேரறிஞர் அண்ணாவின் 105ஆவது பிறந்தநாளையொட்டி,செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற கழக மாநாட்டில், துணைப் பொதுச் செயலாளர்
மல்லை சத்யா ஆற்றிய உரை...

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105ஆவது பிறந்த நாள் விழாவினை மாபெரும் மாநாடாக கழகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. நமது விருப்பத்தை நிறை வேற்றப் போகின்ற மாநாடாக இந்த மாநாடு அமைந்து இருக்கிறது. விருதுநக ரின் சிறப்புகளை வரவேற்புரையில் நமது மாவட்டக் கழகச் செயலாளர் அண் ணன் ஆர்.எம்.எஸ்.அவர்கள் சொன்னார்கள். இதுவரை நடந்த மாநாடுகளில் இதற்கு நிகரான மாநாடு இல்லை என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த மாநாடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து சிறப்பாக நடந்துகொண்டு இருக் கிறது.