Showing posts with label மதுவிலக்கு. Show all posts
Showing posts with label மதுவிலக்கு. Show all posts

Thursday, December 5, 2013

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் வைகோ அறிக்கை

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் #வைகோ அறிக்கை

தமிழ் நாட்டில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் தினந் தோறும் வந்துகொண்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட் டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி, இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் தமி ழக அரசு பண்பாட்டை குழிதோண்டி புதைத்து வருவதுடன், சமூக அமைதியை யும் சீர்குலைத்து வருகிறது.

கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அனைத்துக் கும் மதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நெஞ்சைப் பிளக்கும் வகை யில், 5 வயது, 6 வயது சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. நாட்டின் எதிர்கால ஒளி விளக்குகளாக பிரகாசிக்க வேண்டிய இளைஞர்களும், மாணவர்களும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

Wednesday, September 11, 2013

மதுஒழிப்பில் நாகம்மை

மதுஒழிப்பில் ஈ.வெ.ரா. நாகம்மையார்!

ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் துணைவியார் பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு கொண்டவர். தந்தை பெரியார் அவர் கள், “நாகம்மையார் நான் காங்கிரசில் இருக்கும்போது நடத்திய பல்வேறு மறி யல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்” எனக் கூறினார்.

வைக்கம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங் காற்றிய நாகம்மையார் கள்ளுக்கடை மறியலிலும் போராடினார். இவரது
போராட்டம் பெண்கள் போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.

Thursday, September 5, 2013

பாபரும் மதுவிலக்கும்!

பாபரும் மதுவிலக்கும்!

ஜவுஹுருத்தின் முகம்மது பாபர் 14.02.1483 - 26.12.1530. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர். அவரது விரிவான வரலாற்றை இந்திய வரலாற்றிலும் முகலாயர் வரலாற்றிலும் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அவரது மதுவிலக்கு கொள்கை குறித்து அவர்தரும் தகவல்கள் மட்டும் இதோ:

ராணாசங்கா

ராஜபுத்த அரசர் வீரத்தின் இலக்கணம் இராணாசங்காவுடன் 1527 மார்ச் 17 ஆம்
நாள் கான்வாப் போர் நடத்தி வெற்றி கண்டவர் பாபர். அவர் அந்தப் படையெ டுப்பிற்கு செல்லும் முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இதோ:

Saturday, August 24, 2013

மது ஒழிப்பில் சி.சுப்பிரமணியம்

திருச்சி அருகே உள்ள காவிரிக் கரையோரம் திருப்பராயத்துறையில் தபோ வனம் அமைத்துக் கல்விப் பணியாற்றிய சித்பவானந்தர் அவர்களால் வார்ப் பிக்கப்பட்டவர் சி.எஸ்.என்று அழைக்கப்படும் பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள். சட்டப் படிப்பை முடித்த பிறகு, கோவை அருகே போத்தனூர் இரயில் நிலையத்தில் காந்தியடிகளை முதன் முதலாக நேரில் சந்தித்தார். அப்போதி ருந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.

1947 ஆகஸ்டு 15 அன்று பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திர தின பிரகடனத் தை நிகழ்த்தும்போது உடன் இருந்தவர். இராஜாஜி அமைச்சரவையில் தமிழகத் தின் கல்வி, நிதி அமைச்சராக இருந்தவர். தொடர்ந்து பெருந்தலைவர் காம ராஜர் அமைச்சரவையிலும் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு பொள்ளாச்சி அமைச் சரவையிலும் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

Tuesday, August 20, 2013

முன்னோர் மொழியில் மதுவிலக்கு!

“மதுவை ஒரு தட்டிலும் மற்ற பாவங்களை எல்லாம் ஒரு தட்டிலும்  வைத் தால் சரிசமானமாய் இருக்கும்.குடிவெறியைவிடக் கொடிதான பாவம் எதுவும் இதற்கு முன்னும் இருந்த தில்லை; இனிமேலும் இருக்கப் போவது இல்லை” என்று சாணக்கியர் கூறுவார்.

“மக்களிடையே நன்னடத்தையும், கற்பும் நிலவ வேண்டுமாயின் மதுவை
விலக்கியே ஆக வேண்டும்.இல்லாவிடில் உலகம் முழுவதிலும் சத்திய தர்மங் கள் இல்லாமல் போகும்;பொறுப்பு உணர்ச்சியும் போய்விடும்” என்பார் பீஷ்மர்.

Tuesday, August 13, 2013

தொடக்க கால காங்கிரசும், மது ஒழிப்பும்!

தொடக்க கால காங்கிரசும், மது ஒழிப்பும்!

(பாரதியின் மொழிபெயர்ப்பு)

ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவான இயக்கத்தில் தொடக்க காலத்தில்
ஏ.ஓ.ஹ்யூம், வெட்டர் பர்ன், ஜார்ஜ் யூல்,ஷெர்லி நார்ட்டன் போன்ற ஆங்கிலே யர்களும் முக்கிய பங்கு வைத்தனர்.

தொடக்க காலத்தில் “பாரத ஜாதீய ஐக்ய சங்கம்” என்று பெயர் இருந்தது. இந்த
சங்கத்தின் கூட்டத்திற்கு வரும் பிரதிநிதி களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். இந்த சங்கம் முதன் முதலாக 1885 இல் பூனா நகரத் தில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டது. ஆனால், அந்த நேரத்தில்
வாந்தி, பேதியுடன் பிளேக் நோய் தீவிரமாக இருந்ததால் பம்பாயில் நடத்துவ தாக தீர்மானம் செய்யப்பட்டது.

Sunday, August 11, 2013

இஸ்லாம் மார்க்கத்தில் மது ஒழிப்பு!

“திராட்சை மதுவின் ஒவ்வொரு துளியிலும் பிசாசு குடி இருக்கின்றது”
-குர் ஆன்

நபிகள் நாயகம் அவர்கள் மது விசயத்தில்,

மதுவைப் பிழிபவன்; மதுவைத் தயாரிப்பவன்; மதுவைக் குடிப்பவன்;மதுவைக் குடிக்கக் கொடுப்பவன்; மதுவை எடுத்துச் செல்பவன்; மது யாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறதோ அவன்;மதுவை விற்பவன்;மதுவை வாங்குபவன்;மதுவை அன்பளிப்பு செய்பவன்; மதுவின் மூலம் வருவாயை சாப்பிடுபவன் ஆகிய பத்து நபர்களையும் சபித்தார். - நூல் : திர்மிதீ

Friday, August 9, 2013

சிலம்புச் செல்வரும் - மது ஒழிப்பும்!

தமிழக சுதந்திரப் போராட்ட காலத்தில், வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தவர் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம.பொ.சிவஞானம் அவர்கள். இராஜா ஜி, காமராசர் மற்றும் பல அரசியல் தலைவர்களோடு நெருக்கமான தொடர் பில் இருந்தவர்.நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இயற்றியுள்ளார். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் எழுதியதற்காக 1966 ஆம் ஆண்டு
சாகித்ய அகாடமி விருதுபெற்றவர்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோது வடக்கு எல்லைப் போராட்டம், தெற்கு எல்லைப் போராட்டம், தட்சணப் பிரதேச எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த வர். மேலும் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வ தற்கான போராட்டம்,இலங்கையில் தமிழ் மொழி உரிமைப் போராட்டம் போன்ற போராட்டங்களிலும் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

Wednesday, August 7, 2013

புத்தரும் மதுவிலக்கும்!

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகட்கும் மேலாகப் பெளத்த சமயம் நிலைத்து வளர்ந்து செழித்திருந்தது.

தமிழர் புத்தரைத் ‘தயாவீரன்; தர்மராஜன், அருளறம் பூண்டோன், அறத்தகை முதல்வன், புத்த ஞாயிறு, போதிமாதவன், மன்னுயிர் முதல்வன், பிறவிப் பிணி மருத்துவன் என்று பல படப் புகழ்ந்து போற்றி வந்திருக் கின்றனர். தமிழ்
நாடெங்கும் பெளத்தப் பள்ளிகள் நிறைந்திருந்தன.

சித்தார்த்தர்

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் குடும்பப் பெயர் கெளதமர். அவர் ஞான மடைந்த பிறகு ஏற்பட்ட பெயரே புத்தர். பிற்காலத்தில் புத்தர் (பூர்ண ஞானம் பெற்றவர்) ததாகதர் முன்னோர் வழியில் செல்பவர்) என்று அழைக்கப்பட்டார்.

Monday, August 5, 2013

ஓமந்தூர் இராமசாமியாரும், மதுவிலக்கும்!

காந்தியடிகளின் கொள்கைகளை முழுக்க முழுக்க பின்பற்றி வாழ்ந்த சிறந்த உத்தமர், விவசாய முதலமைச்சர் ஓ.பி.ஆர். என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர்
பி.ராமசாமி ரெட்டியார். இவரைப் போன்ற ஒழுக்க சீலர்கள் அபூர்வமாகவே தோன்றுவார்கள்.

இவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை அமைந்தகரையில் மேற்குக் கோடியில் 10 ஏக்கர் நிலம் வழங்கினார்.
அதுதான் சித்த மருத்துவத்தலைமையகம்,ஆராய்ச்சி நிலையமாகவும் அறிஞர் அண்ணா பெயரால் திகழ்ந்து வருகின்றது.

Wednesday, July 17, 2013

திப்பு சுல்தானும் மது ஒழிப்பும்!

மதங்களைக் கடந்து மனித நேயத்தோடு ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் மதுவை
அடியோடு வெறுத்தார். திப்புவின் வருவாய்த்துறை சட்டம் (1787) மது  ஒழிப்பைக் கூறுகிறது.

நமது மக்களின் சமுதாய, ஆன்மிக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும். வெளிநாட்டினர்க்கு தேவை
யானால் மது அனுமதி வழங்கப்படலாம்.

மீர்சாதிக்கு திப்பு 1787 இல் கடிதம் எழுதினார். “மது விற்பனையாளர்கள் தமது தொழிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் செய்து கையொப்பம்  வாங்கியுள்ள தாக உங்கள் அறிக்கை தெரிவிக்கிறது. மதுவை முற்றாக ஒழிக்க மது காய்ச் சுபவர்களிடமும் இத்தகைய ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்குவது அவசியம். பின்னர் அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்க உதவு வதும் அவசியம்.

Tuesday, July 9, 2013

ராஜாஜியும் மதுவிலக்கும்!

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி 1879 இல் ஹோசூர் அருகில்
தொடிப்பள்ளியில் பிறந்தவர். 1972 டிசம்பர் 25 இல் மறைந்தவர். சுதந்திர இந்தி யாவின் ஒரே கவர்னர் ஜெனரல் (1948-1950) இந்திய அரசியல் ஞானி;மூதறிஞர்; எழுத்தாளர், பத்திரிகையாளர். இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழுவில் 1922 முதல் 1942 வரை பணியாற்றியவர். 1930 இல் வேதாரண்யம் உப்புச் சத்தியா கிரகப் போரில் தலைமை ஏற்றவர்.

மதராஸ் பிரசிடென்ஸியின் முதலமைச்சராக (1937-1939) இருந்தார். 1952- 1954 வரை சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் காலத்தில் மதுவை ஒழித்திட அவர் ஆற்றிய அரும்பணிகள், மதுவிலக்கு குறித்து அவர் தம் அரிய கருத்துகள் இதோ:

Tuesday, July 2, 2013

திரைப்படங்களில் மது ஒழிப்பு!

முதன் முதலில் தமிழில் பேசிய, பாடிய சினிமா காளிதாஸ். இப்படம் 1931
அக்டோபர் 31 அன்று திரைக்கு வந்தது.ஆரம்ப காலத்தில் தீண்டாமை ஒழிப்பு,
குழந்தைகள் திருமணக் கொடுமை,வரதட்சணைக் கொடுமை, ஆலயப் பிர வேசம், மது ஒழிப்பு போன்ற கொள்கை களை மையப்படுத்தி வெளிவந்தது.இது போன்ற படத்தின் விமர்சனங்களை தினமணி, ஆனந்த விகடன், குண்டூசி,
குமரிமலர், பேசும்படம் (திரைப்பட மாத இதழ்), பொம்மை, ஜனசக்தி போன்ற
பத்திரிகைகள் வெளியிட்டன.

தியாக பூமி என்ற திரைப்படத்தில் மது ஒழிப்பிற்காக கீழ்க்காணும் பாடல் பாடப் பட்டது.

Thursday, June 20, 2013

பி.எஸ். குமாரசாமி இராஜாவும் மதுஒழிப்பும்!

இந்திய சுதந்திர போராட்டத்தில் இராஜபாளையம் பகுதி ஒரு முக்கியப் போராட்டக் களமாக விளங்கியது. காரணம் இராஜபாளையம் பகுதியில் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்துப் பொதுமக்களே போராடினார். இராஜபாளையம் ஈன்றெடுத்த தலைவர் பி.ஸ்.குமாரசாமி இராஜா. இவர் தென்னக காந்தி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இவர் இராஜபாளையம் நகர மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவ ராகவும் தமிழக முதல்வராகவும் கவர்னராகவும் இருந்து பொதுவாழ்வில் பாடு பட்டார். இவர் அமைச்சரவையில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தார்.

Monday, June 10, 2013

மகாத்மா காந்தியும் மதுவிலக்கும்!

1905 களில் தென் ஆப்பிரிக்கா ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழில் ‘ஆரோக்கிய வழி’ என்ற தலைப்பின் கீழ் மகாத்மா காந்தியடிகள் பல கட்டுரைகள் எழுதியுள் ளார். ஆங்கிலத்தில் எழுதிய அக்கட்டுரைகள் 1942 இல் தமிழில் மொழிபெயர்க் கப்பட்டன. அதில் மதுவிலக்கு குறித்து மகாத்மா காந்தியடிகள் கூறும் கருத்து கள் இதோ:

எதையும் செய்ய இயலாதநிலை

“மது வகையில், அந்நிய நாடுகளில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப் படும் பானங்களுடன் நாட்டுச்சாராயமும் கள்ளும் அடங்கும். இவை அனைத் துக்கும் கண்டிப்பான தடை விதிக்கப்பட வேண்டும். மது அருந்திய ஒருவன் தன்னையே மறந்துவிடுகிறான்.போதை நீடிக்கும் வரையில் உபயோகமுள்ள எதையும் செய்வதற்கு அறவே இயலாதவனாக இருக்கிறான்.

Tuesday, June 4, 2013

காயிதே மில்லத் - ஜீவா குரல்களில் மதுவிலக்கு!

உமையம்மை - பட்டம்பிள்ளை தம்பதியரின் மகனாக பூதப்பாண்டியில் 21.8.1906 இல் பிறந்த சொரிமுத்து 1922 இல் 17 ஆவது வயதில் ஒத்துழையாமை இயக்கத் தில் பங்கேற்று அரசியல் வாழ்வைத்தொடங்கினார்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டார். 1930 இல் ஈரோட்டிலும், 1931 இல் விருதுநகரிலும், இரண்டாவது,
மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்றார்.

1931 இல் காரைக்குடி - கோட்டையூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.இக்காலங்களில் மதுவிலக்குப் போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். (பகுதி உ.பக்கம் 1709,ப.ஜீவானந்தம்)

Monday, May 27, 2013

தீரர் வ.உ.சியும், நாமக்கல் கவிஞரும் வலியுறுத்திய மதுவிலக்கு!

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,வீரத்தலைவர் வ.உ.சி (5.9.1872 - 18.11.1936)

1908 நெல்லை எழுச்சியில் நாட்டு விடுதலைக்காக சிறைசென்ற வ.உ.சி. (1908 - 1912) கண்ணனூர் சிறையில் சில காலம் இருந்தார். அப்போது ‘உண்மையான அறம்’ என்ன என்பதை விளக்கி 125 அதிகாரங்களில் ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களால் ஆன ‘மெய்யறம்’ எனும் நூல் எழுதினார்.அது 1914 இல் முதல் பதிப்பு வெளியாயிற்று வ.உ.சி. உயிரோடு இருந்த காலத்திலே மேலும் இரு பதிப்புகளைக் கண்டது.

Wednesday, May 15, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 5

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 4 யின் தொடர்ச்சி ....

அப்பொழுது சொன்னேன், எங்களுடைய கோயில்கள்,எங்களுடைய தேவால யங்கள் என்று இன்றைக்கு நாங்கள் எதை நினைக்கமுடியும்.அதற்காக உங்கள் கதவைத்தட்டுகிறோம். எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்
பாருங்கள். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் எங்களுடைய பெண்கள், வயதான வர்கள் கொடூரமாகக் கொல்லப் பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கைகளுக் கு விலங்கு போட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்சே என் கிற கொடியவன் இராணுவத்தில் இருந்தவன். கிருசாஞ்சி படுகொலை  சம்ப வத்தில் கற்பழித்துக்கொல்லப்பட்ட வழக்கில் அவன் சொல்லி விட்டான் நிறை ய பேரை இப்படி புதைத்து இருக்கிறோம் என்று கோர்ட்டில் சொல்லிவிட்டான்.

Tuesday, May 14, 2013

திராவிட இயக்கத்தினைத் தூக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்கவராக வைகோவைப் பார்க்கிறேன்! -புலவர் புலமைப்பித்தன்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில்,தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 
நீதிக்கு இது ஒரு போராட்டம் 
நிச்சயம் உலகம் பாராட்டும் 

என்று என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவர், என் உயிர் அணுக்களில் எல்லாம் நிறைந்திருக்கின்ற அண்ணன் புரட்சித் தலைவர் அவர்களுக்காக 1973 ஆம் ஆண்டு நான் இந்தப் பாட்டை எழுதினேன். ஆனால்,நாற்பதாண்டு காலம் கழித்து என் அருமை அண்ணன் புரட்சிப் புயலுக்கும் இந்தப் பாட்டு பொருந்தும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 4

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 3 யின் தொடர்ச்சி ....

குடிநீர் இல்லை....

மணலை அள்ளிக்கொண்டுபோய் விற்றீர்களே, எங்கே இருக்கிறது நிலத்தடி நீர்.குடிக்கத் தண்ணீர் கிடையாது. வருகிற வழியெல்லாம் வேதனைக்குரல்
ஒ லிக்கிறது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால் எங்கே வாழப்போகிறோம். இதை எல்லாம் சிந்தித்தார்களா? மணலை கொள்ளை யடிப்பவர்கள். தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொள்வதற்கு வருங்கால சமுதாயத்தையா
அழிப்ப து?