என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு பங்குகள் விற்பனை முயற்சியைக் கைவிட வேண்டும்
#வைகோ அறிக்கை
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யின் பங்குகளை விற்கக்கூடாது என்ற கோரிக்கையை மட்டும் முன் வைத்து, ஜூன் 3ஆம் தேதியில் இருந்து ஒருவார காலமாக என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள னர். பதிமூன்றாயிரம் நிரந்தரப் பணியாளர்களும், பதிமூன்றாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றினைந்து உறுதியுடன் போராட்டம் நடத்தி வருகின் றனர். மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக, நாட்டின் அனைத் துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் போராடி வரும் என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.