Showing posts with label நெய்வேலி. Show all posts
Showing posts with label நெய்வேலி. Show all posts

Wednesday, July 10, 2013

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு பங்குகள் விற்பனை முயற்சியைக் கைவிட வேண்டும்

#வைகோ அறிக்கை
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யின் பங்குகளை விற்கக்கூடாது என்ற கோரிக்கையை மட்டும் முன் வைத்து, ஜூன் 3ஆம் தேதியில் இருந்து ஒருவார காலமாக என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள னர். பதிமூன்றாயிரம் நிரந்தரப் பணியாளர்களும், பதிமூன்றாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றினைந்து உறுதியுடன் போராட்டம் நடத்தி வருகின் றனர். மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக, நாட்டின் அனைத் துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் போராடி வரும் என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

Saturday, June 22, 2013

என்.எல்.சி. பங்குகள் விற்பனை- வைகோ கண்டனம்

என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை: வைகோ கண்டனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதி பெற்று தனிச் சிறப்புடன் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

Friday, May 24, 2013

நவரத்னா தகுதிபெற்ற, என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கக் கூடாது!

வைகோ அறிக்கை!

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களிலேயே தனிச்சிறப்புமிக்க ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மின்உற்பத் தியில் ஈடு இணையற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. பொன்விழா கண்ட என்.எல். சி. நிறுவனம், தமிழ்நாட்டுக்கும், தென் மாநிலங்களுக்கும் 2,490 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து அளிக்கிறது. கடந்த நிதி ஆண்டில், 1,411 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இந்நிறுவனம், விரிவாக்கத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி, நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துவரும் என்.எல்.சி. நிறுவனத்தை, தனியார்மயமாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.