Showing posts with label 2010. Show all posts
Showing posts with label 2010. Show all posts

Saturday, March 30, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 4

2010 ஆம் ஆண்டு 

28.09.2010 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் படி தீர்ப்பு வழங்கியது.

29.09.2010 அன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு படி ஆலை மூட சொல்லி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Friday, March 29, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 3

1998 ஆம் ஆண்டு 

சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின் படி, 17.11.1998 ல் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த நீரி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.

அறிக்கையின் சுருக்கம் 

குடிதண்ணீருக்கான தரநிர்ணயத்தின் படி 1991-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசின் அறிவிக்கையானது, எந்தவொரு நிலத்தடி நீரிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான், அதாவது 0.05 மட்டுமே ஆர்சனிக் திரவம் இருக்கலாம். இந்த அளவை விட கூடுதலாக இருந்தால் அது பயன்பாட்டுக்குரியதல்ல என்று கூறுகிறது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மீளவிட்டான், மடத்தூர், காயலூரணி கிராமங்களில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரிலும், கிணற்று நீரிலும் 0.98 ஆர்சனிக் இருக்கிறது. ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தேக்கத் தொட்டியில் அனுமதிக்கப்பட்டதைவிட 100 மடங்கு ஆர்சனிக் இருக்கிறது.