Monday, September 2, 2013

உ.பா.ச அவசரத்தில்..

சங்கொலி தலையங்கம் 

உணவுப் பாதுகாப்புச் சட்டம் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்!

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கு மீண்டும் ஒருமுறை தேசி ய உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. காங் கிரஸ் தலைவர் திருமதி சோனியா மூளையில் உதித்த திட்டம் என்று வெகு வாகப் புகழப்படும் உணவுப் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற ஜனநாயக முறைகளை கேலிக்கூத்தாக்கிவிட்டு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆகஸ்டு 26 ஆம் தேதி மக்களவையில், உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் உண வுப் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, கிராமப் புறங்களில் 75 சதவீத மக்களுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 50 சதவீத மக் களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மசோதாவை அறி முகம் செய்த அமைச்சர் கே.வி.தாமஸ் குறிப்பிட்டார்.

Sunday, September 1, 2013

உழவன் விரைவு ரயில்

தஞ்சாவூர் - சென்னை இடையே இன்று அறிமுகப்படுத்தப்படும் புதிய ரயிலுக்கு, "உழவன் விரைவு ரயில்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது."தஞ்சாவூர் - சென்னை இடையே புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்' என, மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். மக்களின் கோரிக்கை போராட்டம் வெற்றி நோக்கி இன்று ரயில் அறிமுகம் செய்யப்பட்டது ..

தஞ்சை மாவட்டத்தில் திமுகவினர் வழக்கம் போல இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவு இத்திட்டத்தை கொண்டுவந்தது டி.ஆர் பாலு என்று கூறி நன்றி அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர் ...

மாற்று அரசியல் கருத்துக் களம்

இனஎழுச்சி பிறந்த ஈரோட்டில்....

இளைய தலைமுறையினரின்
மாற்று அரசியல் கருத்துக் களம்...!

வாலிபர்கள் துணிவு கொள்ள வேண்டும். எந்தக் காரியமானாலும் சரி, நம் இலட்சியத்திற்கு ஒத்ததா என்று பார்க்க வேண்டும். மாறுபட்டதாயின் அதை எதிர்த்து வேலை செய்தாக வேண்டும்படியான துணிவு உங்களுக்கு ஏற்பட வேண்டும் என்று ஈரோட்டிலிருந்து தந்தை பெரியார் குடி அரசு ஏட்டில் 1944-ம் ஆண்டு எழுதுகிறார். மாறுபட்ட முரண்பாடுகள் நம் சமூகத்தில் இருக்குமா யின், அதிலிருந்து நம் மக்களை விடுவித்து நல்ல சமூக மாற்றத்தை உரு வாக் க வாலிபர்கள் போராட வேண்டும் என்பதையே குடி அரசு ஏட்டின் வாயி லாக தட்டி எழுப்பினார் தந்தை பெரியார். அந்த உணர்வு மங்கிட வில்லை.

கூடுதல் பேருந்து -மாணவரணி

கூடுதல் பேருந்து இயக்க #மதிமுக மாவட்ட மாணவரணி கோரிக்கை

உடுமலை அரசுக் கல்லூரிக்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு, மதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

நாட்டை திவாலாகும் நிலை

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு
நாட்டை திவாலாகும் நிலைக்குத் தள்ளி விட்டது

#வைகோ அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான மக்கள் விரோத மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கிறது. ஜூன் மாதத்தில் இருந்து 6ஆவது முறையாக பெட்ரோல் விலையை யும், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக டீசல் விலையை யும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன.