Thursday, February 14, 2013

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க- வைகோ

விவசாயிகளின் நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க காவல்துறை அடக்குமுறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க!

வைகோ கோரிக்கை

கொடிய வறட்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு விடிவே இல்லையா? என்று ஏங்கி பரிதவிக்கும் நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களை (கொச்சி முதல் பெங்களூரூ வரை) உள்ளடக்கிய 136 கிராமங்கள் வழியாக 310 கி.மீ. தூரம் கியாஸ் குழாய்களை அமைக்கும் பணியினைத் தொடங்கி உளள்ளது.

முருகதாசன் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - மெரினா கடற்கரை


Monday, February 11, 2013

தமிழக மக்களாகிய நீங்கள் எங்களை வாழ்த்துங்கள்- வைகோ

திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மறைந்த மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலை திறப்பு விழா மற்றும் திருச்சி மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்திற்கு அவரது பெயர் சூட்டும் விழா திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ம.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலையை திறந்து வைத்தும், கட்சி அலுவலகத்துக்கு நடராஜன் பெயர் பொறித்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதன் பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

Sunday, February 10, 2013

முழு மதுவிலக்கு ! நமது இலக்கு !!


ஐ.நா. மன்ற அலுவலகத்தை முற்றுகை போராட்டம் -வைகோ

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் இன படுகொலையை செய்த இலங்கை அதிபர் ராஜபச்சேவை காங்கிரஸ் அரசு அவரை சந்தோஷபடுத்தி அழைத்து இருக்கிறது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.

இதனை எதிர்த்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திருப்பதியில் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்களை கைது செய்தது. இலங்கையில் இந்துக்கோவில்களை இடித்துவிட்டு பவுத்த நாடாக இலங்கை மாற்றிவருகிறது. இந்தியாவிற்கு ராஜபக்சேவை வரவழைத்து ராஜ மரியாதை செய்வது 7 கோடி தமிழர்களின் நெற்றியில் எட்டி உதைப்பது போன்று உள்ளது. இந்திய அரசு வினையை விதைத்துள்ளது. அதனுடைய பலன் இந்திய ஒருமைபாட்டுக்கு கேடு விளைவிக்கப்போகிறது.