Showing posts with label மாவீரர் நாள். Show all posts
Showing posts with label மாவீரர் நாள். Show all posts

Thursday, November 28, 2013

சென்னையில் மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவீரர் நாள் நினை வேந்தல் கூட்டம்

#மதிமுக சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் கூட்டம், வடசென்னை மாவட் டம் , தண்டையார்பேட்டை டிப்கோ அருகில் நேற்று (27.11.2013) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் நிர் வாகிகளும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வட சென்னை மாவட்டடச் செயலாளர் சு.ஜீவன் நன்றி கூறினார்.

Tuesday, August 6, 2013

மாவீரர்களை நினைவு கூர்கின்றோம்;

மாவீரர் நாள் பொதுக்கூட்டம், 27.11.2012 அன்று, சென்னை தியாகராயர் நகரில்
பேரெழுச்சியுடன் நடைபெற்றது.கழகப் பொதுச் செயலாளர்வைகோ சிறப்புரை ஆற்றினார்.அவரது உரையில் இருந்து...

தீபங்களின் திருநாளாகிய இன்று,தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம், குன்றுதோறாடும் குமரனை வழிபடுகின்ற மக்கள் எல்லாம் கொண்டாடித் திளைக்கின்றார்கள்.

இது கார்த்திகை தீபத் திருநாள்.

தமிழ் ஈழ விடியலை நெஞ்சில் தாங்கி இருப்பவர்களுக்கு, இது மாவீரர் நாள்.
இதில் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. தமிழ் ஈழ மக்கள், கார்த்திகைப்பூக்களைக் கைகளில் ஏந்தித்தான், மடிந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இதே நவம்பர் 27 ஆம் நாள், ஒரு மக்கள்
கடலுக்கு முன்னால், மாவீரர் நாள் உரை ஆற்றக்கூடிய பேற்றினை நான்
பெற்றேன்.

Monday, June 3, 2013

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 3

இன்றைக்குச் சொல்கிறேன். பதவிகளுக்காக அல்ல.எந்தத் தமிழ் ஈழத்துக்காக நீங்கள், உன் தம்பிமார்கள்,உன் சகோதரிகள் ரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தத் தமிழ் ஈழத்தைத் தட்டியெழுப்ப இந்தத் தாயகத்திலே தமிழர் தாயகத்தி லே எங்கள் தமிழ்நாட்டிலுள்ள வாலிபர்களை - இளைஞர்களைத் தயார்படுத்து வது என்னுடைய வேலை. அதற்குச் சூளுரைக்கிறேன்.-வைகோ (27.11.10)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

கண்டிப்பாகப் போடக் கூடாது. இது பேராபத்தில் போய் முடியும் என்று நான்
சொன்னேன். ஐந்து கேபினட் மந்திரிகளைத் தனித்தனியே கூப்பிட்டு மன்மோ கன் சிங் கேட்டார். எனக்குத் தெரிய அந்த ஐந்து பேருமே ஒப்பந்தம் கூடாது என் றுதான் சொன்னார்கள்,”என்றார். அப்படியானால், மன்மோகன் சிங் அவர்களே! இந்த ஒப்பந்தத்தைப் போடாமலேயே இவ்வளவு ஆயுதங்களைக் கொடுக்க லாம் என்கின்ற ஏற்பாட்டைச் செய்ய உங்களைத் தூண்டியது யார்? இராஜபக் சே வுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆயுதம் கொடுக்கச் சொல்லி- ராடார் கொடுக்கச் சொல்லி -உங்களைத் தூண்டியது யார்? இந்தக் கேள்விகள் எல்லாம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டன.

Sunday, June 2, 2013

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 2

மத்திய அரசுக்குச் சொல்கிறேன்: நீ ஊழல் மட்டும் செய்யவில்லை. ஏ.... மத்திய அரசே! மன்மோகன் சிங் தலைமையிலான அரசே! கேடுகெட்ட அரசே! தமிழ் இனத்தை அழிப்பதற்கு ஆயுதம் கொடுத்த அரசே! உனக்கு மன்னிப்பே கிடையாது.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

இது அல்ல என் கேள்வி. சிங்கள இராணுவத்துக்கு தமிழர் தாயகப் பகுதியில் இனி என்ன வேலை? நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து இருக்கிறான். வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் தாயகப் பகுதியில், யாழ்ப்பாணத்தில், கிளி நொச்சியில், மன்னாரில், வவுனியாவில், வல்வெட்டித்துறையில், மட்டக்களப் பில் இப்படி எல்லா இடங்களிலும் நூறு மீட்டருக்கு ஒரு அரண் அமைத்து
இருக்கிறான். இராணுவ முகாம்களை வைத்து இருக்கிறான்.இதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்.

Saturday, June 1, 2013

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 1

சென்னை தியாகராயர் நகரில் 27.11.2010 அன்று, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற் றது. பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய எழுச்சி உரை வருமாறு:-

விடுதலைப் போர்க் களத்தில் செங்குருதி சிந்தி தங்கள் நல்லுயிரை மாய்த்துக் கொண்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவும், சூளுரை மேற்கொள்ள வும் தரணியெல்லாம் வாழும் தமிழர்கள் கடமை மேற்கொண்டு இருக்கின்ற இந்த மாவீரர் நாளில் தலைநகர் சென்னையில் முத்துரங்கன் சாலையில் நடை பெறுகின்ற இந்தப்பிரமாண்டமான கூட்டத்துக்குத்தலைமை தாங்கு கின்ற என்னுடைய ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே!