Showing posts with label புலமைப்பித்தன். Show all posts
Showing posts with label புலமைப்பித்தன். Show all posts

Tuesday, May 14, 2013

திராவிட இயக்கத்தினைத் தூக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்கவராக வைகோவைப் பார்க்கிறேன்! -புலவர் புலமைப்பித்தன்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில்,தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 
நீதிக்கு இது ஒரு போராட்டம் 
நிச்சயம் உலகம் பாராட்டும் 

என்று என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவர், என் உயிர் அணுக்களில் எல்லாம் நிறைந்திருக்கின்ற அண்ணன் புரட்சித் தலைவர் அவர்களுக்காக 1973 ஆம் ஆண்டு நான் இந்தப் பாட்டை எழுதினேன். ஆனால்,நாற்பதாண்டு காலம் கழித்து என் அருமை அண்ணன் புரட்சிப் புயலுக்கும் இந்தப் பாட்டு பொருந்தும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.