Showing posts with label அரியலூர். Show all posts
Showing posts with label அரியலூர். Show all posts

Monday, August 12, 2013

தமிழர் பிரச்னைகளில் மதிமுக

தமிழர் பிரச்னைகள் தொடர்பாக மதிமுக போராடுகிறது என்றார் பொதுச் செயலாளர்  #வைகோ.

பெரம்பலூரில் பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

திமுகவை எதிர்த்து தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுக அண்ணாவின் கொள்கை வழியில் நடத்தப்படுகிறது. அரசியலில் நேர்மை, நாணயம்,ஒழுக்கம் உள்ள ஒரே கட்சி மதிமுகதான். நேர்மையாக உழைத்து கறைபடாத கரத்திற் குச் சொந்தக்காரர்களாக விளங்கி வருகிறோம். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு கட்சி நடத்தி வந்தவர்கள் எல்லாம், காணாமல் போகும் நிலை உருவாகி வருகிறது. ஆனால் யாராலும் எங்கள் கட்சியை அழிக்க முடியாது. தற்போது மக்களிடையே மாற்றம் ஏற்பட்டுள்ளது.