புகழேந்தி தங்கராஜின் “இது இல்லை எனில் எது இனப்படுகொலை?” நூல் வெளியீட்டு விழா #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ ஆற்றிய உரை பாகம் 3 யின் தொடர்ச்சி வருமாறு...
அங்கயற்கண்ணியின் தியாகம்
எவ்வளவு வீரத்தோடும் தீரத்தோடும் விடுதலைப்புலிகள் போராடினார்கள்?களத்தில் பலியான முதல் கரும்புலி கேப்டன் மில்லர். முதல் வீராங்கனை
அங்கயற்கண்ணி.
யாழ் குடா நாடு, ஏழு தீவுகளைக் கொண்டது. வேலனைத் தீவில் பிறந்தவள் அங்கயற்கண்ணி. ஒரு முக்கியமான தாக்குதலுக்காக அவள் தேர்ந்து எடுக்கப் படுகிறாள். வீட்டுக்கு வருகிறாள். அம்மாவைப் பார்க்கிறாள். தம்பிகளை நன்கு படிக்க வையுங்கள் என்கிறாள். புறப்படுகையில், அம்மா நான் காற்றோடு காற் றாக விரைந்து போய்விடுவேன் என்கிறாள். அப்போது அந்தத் தாய்க்கு அது புரியவில்லை.காங்கேசன் துறை துறைமுகத்தில்,இலங்கைக் கடற்படையின் ஒரு கட்டளைக் கப்பல் நிற்கிறது. 6300 டன் எடை. அதைத் தகர்ப்பதற்குத்தான் 50 கிலோ எடை கொண்ட அங்கயற்கண்ணி தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கின் றாள்.17 கடல் மைல், 35 கிலோமீட்டர் நீச்சல் அடித்துப் போனாள். சகதோழிகள் உடன் வந்து அனுப்பி வைக்கிறார்கள்.வெடிகுண்டுகளையும் சுமந்துகொண்டு
போகிறாள். அந்தக் கப்பலின் மீது மோதுகிறாள். வெடித்துச் சிதறுகிறது.பக்கத் தில் நின்று கொண்டு இருந்த இன்னொரு கப்பல் டோரா, அதுவும் வெடிக்கிறது. நெடுந்தொலைவுக்கு வெளிச்சம் தெரிகிறது. தொலைவில் கரையில் நின்று கொண்டு இருந்த தோழிகள் அதைப்பார்த்து ஆரவாரம் செய்கிறார்கள். அதே வேளையில் அங்கயற்கண்ணியை எண்ணி வேதனைப்படுகிறார்கள்.
