Showing posts with label 2006. Show all posts
Showing posts with label 2006. Show all posts

Wednesday, April 3, 2013

பிரதமருடன் வைகோ சந்திப்பு! - 19.07.2006


19.7.2006 அன்று காலை 10.30 மணி அளவில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தில்லி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். 25 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார்.

பிரதமரிடம் அவர் அளித்த கோரிக்கை, மனுவின் விவரம் .

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக, இலங்கை அரசால்
ஏவிவிடப்பட்டு உள்ள, ஆயுதப் படையின் திட்டமிட்ட இனப்படுகொலைத்
தாக்குதல்களால், இலங்கை வாழ் தமிழர்கள் சொல்லொணத் துயரத்துக்கும்,
துன்பத்துக்கும் ஆளாகி உள்ளனர். இதுகுறித்த நிகடிநவுகளைத் தங்கள்
கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

Friday, March 29, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 3

1998 ஆம் ஆண்டு 

சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின் படி, 17.11.1998 ல் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த நீரி நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.

அறிக்கையின் சுருக்கம் 

குடிதண்ணீருக்கான தரநிர்ணயத்தின் படி 1991-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசின் அறிவிக்கையானது, எந்தவொரு நிலத்தடி நீரிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான், அதாவது 0.05 மட்டுமே ஆர்சனிக் திரவம் இருக்கலாம். இந்த அளவை விட கூடுதலாக இருந்தால் அது பயன்பாட்டுக்குரியதல்ல என்று கூறுகிறது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மீளவிட்டான், மடத்தூர், காயலூரணி கிராமங்களில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரிலும், கிணற்று நீரிலும் 0.98 ஆர்சனிக் இருக்கிறது. ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தேக்கத் தொட்டியில் அனுமதிக்கப்பட்டதைவிட 100 மடங்கு ஆர்சனிக் இருக்கிறது.