Showing posts with label உதயகுமார். Show all posts
Showing posts with label உதயகுமார். Show all posts

Tuesday, August 20, 2013

அஞ்சலட்டை அனுப்புவோம்..

கூடங்குளம் அணு உலை குறித்த விவரங்களை கூடங்குளம் அணுமின்
 நிலையம் இயக்குனரிடம் தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி , இடந்தகரையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போரட்டத்தை முன் எடுக்கும் திரு.உதயகுமார் கோரிக்கை வைத்துள்ளார் அவர் வைத்த கோரிக்கை விவரம் ...


தமிழ்ச் சொந்தங்களே! அஞ்சலட்டை ஒன்றை  கீழ்க்காணுமாறு எழுதி அனுப்புவீர்களா, தயவு செய்து!?

Tuesday, March 20, 2012

கூடங்குளம் -தமிழக அரசின் அராஜகம் - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரை, அடக்குமுறையின் மூலம் ஒடுக்க முயலும் தமிழக அரசின் அராஜகம்! - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பேரழிவு ஏற்படும் என்ற நியாயமான அச்சத்தாலும், கவலையாலும், கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், கடற்கரை யோரங்களிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறவழியில், காந்திய வழியில், அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டெம்பர் 11 இல் தொடங்கி, ஆறு மாத காலமாக, எந்த வன்முறைக்கும் இடம் அளிக்காமல், அமைதி வழியில், தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். 155 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தி உள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 12 நாள்கள் இடைவிடாமல் உண்ணாவிரதம் இருந்த போது, தாய்மார்கள் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர்.