Showing posts with label குற்றம் சாட்டுகிறேன். Show all posts
Showing posts with label குற்றம் சாட்டுகிறேன். Show all posts

Thursday, May 2, 2013

ஈழத் தமிழினம் தனித் தமிழ்த் தேசம் அமைக்க உதவுவோம்...!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின், ‘குற்றம் சாட்டுகிறேன்!, ‘I Accuse’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 15.07.2009 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள இராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. இரு நூல்களை யும் பழ.நெடுமாறன் வெளியிட, கவிஞர் இன்குலாப் பெற்றுக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழா நிறை வில் ஏற்புரை ஆற்றிய வைகோவின் உரையில் இருந்து...

இந்த நூல், ‘I Accuse’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, ஏற்க னவே வெளியில் உலவிய போதிலும், அதில் புதிதாக சில அத்தியாயங்கள்
இணைக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், ‘குற்றம் சாட்டு கிறேன்’ எனும் தலைப்போடு இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று நான்
விரும்பியபோது, எங்கள் வேண்டுகோளை அன்போடு ஏற்றுக்கொண்டு, இங்கே வந்து சிறப்பித்து இருக்கிற அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கும், இந்த மேடையில் வீற்றிருக்கின்ற, தமிழ் ஈழ விடுதலைக்குப்போராடிக் கொண்டு இருக்கின்ற என் இனிய சகோதரர் களுக்கும் என் உளம் நிறைந்து இருக்கின்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, April 1, 2013

கடலில் மூழ்கி மடியும் அகதிகளின் அவலம்!

இந்திய பிரதமருக்கு வைகோ கடிதம் - 26.05.2006


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய, இலங்கை
அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை, தங்கள் மேலான
கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

“இலங்கைத் தீவில் இருந்து தமிழ்  அகதிகள் கூட்டம், கூட்டமாய்த் தமிழகக்
கடலோரப் பகுதியை நோக்கி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கொந்தளிக் கின்ற கடலில் வருவது மிகுந்த வேதனை தரக்கூடிய காட்சியாக உள்ளது. இலங்கை இராணுவம் தமிழர் வாழும் பகுதிகளில் எப்படிப்பட்ட கொடூரமான தாக்குதல் நடத்துகிறது என்பதை, அங்கிருந்து அகதிகளாக வரும் தாய்மார்கள் கண்ணீரும், கம்பலையுமாக விவரிப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் அப்பாவிப் பெண்களும், குழந்தை களும் பெருமளவில் இறந்தனர் என்ற செய்தி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.