Showing posts with label இந்திய. Show all posts
Showing posts with label இந்திய. Show all posts

Monday, April 1, 2013

கடலில் மூழ்கி மடியும் அகதிகளின் அவலம்!

இந்திய பிரதமருக்கு வைகோ கடிதம் - 26.05.2006


அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய, இலங்கை
அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை, தங்கள் மேலான
கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

“இலங்கைத் தீவில் இருந்து தமிழ்  அகதிகள் கூட்டம், கூட்டமாய்த் தமிழகக்
கடலோரப் பகுதியை நோக்கி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கொந்தளிக் கின்ற கடலில் வருவது மிகுந்த வேதனை தரக்கூடிய காட்சியாக உள்ளது. இலங்கை இராணுவம் தமிழர் வாழும் பகுதிகளில் எப்படிப்பட்ட கொடூரமான தாக்குதல் நடத்துகிறது என்பதை, அங்கிருந்து அகதிகளாக வரும் தாய்மார்கள் கண்ணீரும், கம்பலையுமாக விவரிப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் அப்பாவிப் பெண்களும், குழந்தை களும் பெருமளவில் இறந்தனர் என்ற செய்தி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.