Showing posts with label காசி ஆனந்தன். Show all posts
Showing posts with label காசி ஆனந்தன். Show all posts

Saturday, June 22, 2013

தமிழ் இனம் உணர்வு பெறப் பாடும் கவிஞர்!

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின், “நறுக்குகள், பொழிச்சல், Fables Kasi Anandan” ஆகிய நூல்களின் வெளியீட்டுவிழா,சென்னையில் 10.11.2011அன்று பழ.நெடுமாறன் தலைமையில்,தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இந்நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

சொல்
இருக்கின்றேனா?
என் இலக்கியத்தில்...

தேடாதே
என் இலக்கியத்தில்
தாகூரை
புஷ்கினை
பாரதியை

சொல்
இருக்கின்றேனா?
நான்..

Monday, May 27, 2013

தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 2

நமது நியாயமான கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். இளை ஞர்களிடம் எடுத்துச்செல்வோம்.கல் லூரி மாணவர்களின் கவனத்தைக் கவரு கின்ற வகையிலே கொண்டு செல் வோம். நம்பிக்கையோடு இந்தப் பணியில் ஈடுபடுவோம்.-வைகோ (25.10.10)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

பிரபாகரனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் கொன்று பிடிப்பது என்று முடிவெ டுத்தபோது, ஒரு கமாண்டோகூட உயிரோடு திரும்பாமல் அழிக்கப்பட்ட போ து, அந்தச் சண்டையிலே குண்டு பாய்ந்ததனால்.... நீண்ட நாட்கள் மருத்துவ மனையில் இருக்க நேர்ந்ததற்குப்பிறகு, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம்
நடந்து முடிந்ததற்குப் பிறகு, நவம்பர் மாதத்தில் கூடிய நாடாளுமன்றத்தில், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, தொடங்கி வைத்து ஐம்பத்தைந்து நிமிடங்கள் நான் பேசி இருக்கிறேன்.

அந்தப் பேச்சுக்குத்தான் இந்தியப் பிரதமர், ‘இந்திய இராணுவத்தை விமர்சித் தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்றார்.

Sunday, May 26, 2013

தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 1

1987 யில் புலிகளை பற்றி நாடாளுமன்றத்தில் பேச கூடாது என தடை போட்ட கருணாநிதி , தடையை மீறி பேசிய வைகோ ...

கவிஞர் காசிஆனந்தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலாகும்’தமிழிசைக்குறு வட்டு வெளியீட்டு விழா, 25.10.2010 அன்று சென்னை இராணி சீதை மன்றத்தில்
நடைபெற்றது. குறுவட்டை வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ
ஆற்றிய உரை வருமாறு:-

நாங்கள் கவரிமான் ஜாதி
நாய்போல்எஜமான் அடிகளை நக்கோம்
தீங்கு படைத்தவன் எங்கே
தேடி உதைப்போம் செருக்களம் வாடா
ஓங்கி முழங்குக தானை
உடைந்து நொறுங்கி சிதறுக விலங்கு
தூங்கி வழிந்தது போதும்
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே