Showing posts with label ம.பொ.சி. Show all posts
Showing posts with label ம.பொ.சி. Show all posts

Thursday, October 17, 2013

சிலப்பதிகார விழாவில் வைகோ உரை -பகுதி 2

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!

ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ

சிலம்புச் செல்வரின் படைப்புகள்

140 நூல்கள் எழுதி இருக்கிறார் ம.பொ.சி.

முதல் நூல் 1944 இல் ‘கப்பலோட்டிய தமிழன்’. கடைசி நூல், ‘எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு’, 1995 ஆம் ஆண்டு எழுதியது.பதினான்கு நூல்கள் சிலப் பதிகாரத்தைப் பற்றி,பதின்மூன்று நூல்கள் திருக்குறளைப் பற்றி,வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி நான்கு நூல்கள்,பாரதியைப் பற்றி எழுதுகிறார். சாகித் ய அகாதமி பரிசு பெற்று வந்ததே, அந்த ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ எழுதினா ஒருமைப்பாடு’ ர். ஒவ்வொரு பாடலிலும் நுணுக்கமான பொருளைத் தந்து, எண்ணற்ற நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்.

Tuesday, October 15, 2013

சிலப்பதிகார விழாவில் வைகோ உரை -பகுதி 1

“சிலம்பு சிலம்பு” என்று முழங்கிய சிலம்புச்செல்வரின் முழக்கம், தமிழர் களின் இதயங்களில் ஒலிக்க வேண்டும்!

ம.பொ.சி. நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா வில் #வைகோ

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் 18-ஆம் ஆண்டு நினைவு விழா மற் றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா 05.10.2013 சனிக்கிழமை அன்று சென் னையில் ம.பொ.சி.அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங் கேற்று, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்,
கலிகெழு வஞ்சியும், ஒலிபுனல் புகாரும்
அரசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்

Sunday, October 6, 2013

ம.பொ.சி. 18–ம் ஆண்டு நினைவு விழா

ம.பொ.சி.யின் 18–ம் ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதி கார விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், #வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. அறக்கட்டளை மற்றும் ம.பொ.சி. பதிப்பகம் சார்பில், சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 18–வது ஆண்டு நினைவு விழா மற்றும் முதலாம் ஆண்டு சிலப்பதிகார விழா சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஓட்டல் சவேராவில் நேற்று (05.10.13 ) நடைபெற்றது. விழாவுக்கு உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.விழாவில், சிலப்பதிகார இணையதளத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கிவைத்தார். வாழ்நாள் சாதனை விருதா ன ம.பொ.சி. விருதுகளை, ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் மற்றும் கவிஞர் தாமரைச்செல்வன் ஆகியோருக்கு பழ.நெடுமாறன் வழங்கினார்.