தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் சுதான்சு மீது நடவடிக்கை
எடுக்கக் கோரி,
இந்திய தேர்தல் ஆணையத்திடம் வைகோ புகார்!
சங்கரன்கோயில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அண்ணா தி.மு.க. பணம் கொடுத்த அப்பட்டமான தேர்தல் குற்றத்தை மறுத்து, ஊழலுக்குத் துணைபோன தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார்
சுதான்சு மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி வைகோ புகார்:
இன்று 19.03.2012 இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி அவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையர் சம்பத் அவர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மின் அஞ்சல் மூலமும், தொலைநகல் மூலமும் பின்வருமாறு புகார் அனுப்பியுள்ளார்.